Blog

/Blog

இணைந்த திறமையே சிறந்த திறமை!

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… சிதறிக்கிடக்கும் திறமைகள் ஒன்று சேரும்போதே அற்புதம் நிகழ்கிறது. ஆனால் அன்றாட வாழ்வில் திறமைகள் ஒன்று சேர்ந்தால் அது பெரிய அற்புதமாய் கருதப்படுகிறது. வண்ணத்திரையில் வெற்றி ஒருங்கிணைந்த திறமை. சின்னத் திரையின் வெற்றி ஒருங்கிணைந்த திறமை. இவற்றை திரையரங்கிலும், வீட்டிலும் வாய் பிளந்து பார்த்துவிட்டு அலுவலகம் வந்தால் அடித்துக்கொண்டு சாகிறோம். என்னுடைய திறமையால் ஏற்பட்ட வெற்றியில் இன்னொருவருக்குப் பங்கா என்னும் போட்டி மனப்பான்மையில்தான் பலபேர் வாழ்கிறோம். நம்முடைய திறமை மட்டும் தனித்து ...

சுடுகிற சுடர் கொடு!

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… சில விளக்குகளைக் கண்டால் கண்களுக்கு குளுமையாகவும் இதமாகவும் இருக்கும். ஆனால் சுடரின் குணம் சுடுவது. ஒரு மனிதனின் இலட்சியத்தை நீங்கள் சுடருடன் ஒப்பிடலாம். எனக்கும் இலட்சியம் இருக்கிறது என்று பெயரளவில் சொல்லிக் கொள்பவர்களுக்கு, சுடர் என்பது அழகுப் பொருளாய், அலங்கராப் பொருளாய் கண்களுக்கு இதம் சேர்க்கும் ஒன்றாய் மட்டுமே இருக்கிறது. இலட்சியம் என்பது சுடுகிற சுடர். எட்டும் வரைக்கும் நெட்டித் தள்ளும் நெருப்பு, மனசாட்சியை உலுக்கும் மந்திரம். பூமிக்கு வந்ததன் ...

உலகை மறக்காதவர்களை உலகம் மறப்பதில்லை!

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… தன்னை மட்டுமே எண்ணிக் கிடப்பவர்கள், தன்னைத் தானே தாண்டி வருவதற்குள் இந்த உலகம் அவர்களைக் கடந்து வெகுதூரம் போய்விடுகிறது. மிகச் சாமானிய மனிதர்கள், தங்கள் எல்லைகளைத் தாண்டி யோசித்ததன் விளைவாக சாதனை மனிதர்களாய் உயர்ந்திருக்கிறார்கள். எல்லை மீறிய பயங்கர வாதம்தான் தவறு. தான், தனது என்னும் எல்லையைத் தாண்டி உங்கள் எண்ணங்களும், சிந்தனைகளும் வளர வளர உலகம் உங்கள் இருப்பை உணர ஆரம்பிக்கிறது. உலகை விடவும் ஒன்று பெரிதாக முடியுமென்றால், ...

பிரியம் இருள்; பரிவே ஒளி!

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… நெருக்கமானவர்களிடம் நாம் காட்டுகிற பிரியம் பற்றாக மாறுகிறது. சில நேரங்களில் அந்தப் பற்று எல்லை மீறுகிறது. வாழ்வின் வெற்றிக்கோடு என்றும் பற்றுக்கோடு என்றும் எந்த உறவுகளை எண்ணுகிறோமோ அந்த உறவுகளாலேயே வலிகள், வருத்தங்கள் ஏற்படுவதும் உண்டு. ஒரு சில மனிதர்களால் நேரும் இந்தக் கசப்பை அகற்றும் சக்தி, அத்தனை உயிர்களிடமும் நாம் கட்டுகிற பரிவுக்கு உண்டு. எதிர்பார்ப்பில்லாத பிரியத்திற்குத் தான் பரிவு என்று பெயர். பிரியம் ஏற்படுத்திய இருளை பரிவு ...

விரல் நீட்டாதே! வலக்கை நீட்டு!

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… ஒரு விஷயம் தவறாகப் போனால், இதற்கு யார் பொறுப்பென்று சொல்ல இந்த உலகம் சுட்டுவிரல் நீட்டத் தயாராக உள்ளது. ஆனால் அந்த நிலையிலிருந்து மீட்டெடுப்பதற்கு வலக்கரம் நீட்ட வருபவர்கள் வெகு சிலர் தான். குற்றம் சொல்வதால் ஆகப் போவது ஏதுமில்லை. நிலைமையை சீர்செய்ய முயல்வதால் மட்டுமே நடந்ததை மாற்ற முடியும். இந்தப் புரிதல் இருந்தும்கூட குற்றப் பத்திரிக்கை வாசிப்பதில் ஒரு குரூர சுகம் இருப்பதை பலரும் தங்களையும் அறியாமல் வெளிப்படுத்தி ...

மந்திரங்களிலேயே மகத்தானது… மௌனம்

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… கேள்விகள் எல்லாவற்றுக்கும் பதில்கள் அவசியமில்லை. எல்லாச் சொற்களுக்கும் எதிர்ச்சொல் தேவையுமில்லை. சொற்களைப் பயன்படுத்த வேண்டியிருந்தாலும்கூட அந்தச் சொற்களை விலகி நின்று வேடிக்கை பார்க்கும் விவேகத்திற்கே மௌனம் என்று பெயர். எத்தனையோ சூழல்கள் பேச்சால் கெட்டிருக்கின்றன. எத்தனையோ சூழல்கள் மௌனத்தால் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. உதிராத மலர், மரத்தின் அழகு. உதிராத சொல் மனதின் அழகு. “திறனறிந்து சொல்லுக சொல்லை” என்றார் திருவள்ளுவர். அம்பை எய்வதன் முன் வில்லை இழுக்கிற அதே விவேகம் சொல்லை ...
More...More...More...More...