Blog

/Blog

உளிதொட்ட பின்தான் ஒளி

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… காடு மேடுகளில் கிடந்த கனவில் லயித்துக் கிடந்த அந்தக் கல்லில் இறங்கியது மந்திர நாதம். கொஞ்ச நேரத்தில் குளிர்ந்த நீர். கண் திறந்த சிலை, கடவுளாகியிருந்தது. அர்ச்சனையும், ஆரத்தியும் அமர்க்களப் பட்டது. கல்லின் இதயம் கனிந்தது. தன்னைத் தொட்ட உளியை நன்றியுடன் நினைத்தது. வலிக்க வலிக்க செதுக்குகிற உளியின் தீண்டலல்லவா, உள்ளே இருந்த தெய்வத்தை உசுப்பியது. உயிரற்றகல்லுக்கே வலியால் ஒளி பிறக்குமென்றால், உங்களுக்கு மட்டும் சாத்தியமில்லையா என்ன? எதிர்கொள்ள நேர்கிற ...

உங்களை எப்போது சந்திப்பீர்கள்?

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… மற்றவர்களை சந்திப்பதற்காகவே ஒவ்வொரு தடவையும் உங்களை தயாரித்துக் கொள்கிறீர்களே, உங்களை நீங்கள் சந்திக்கத் தயாரா? உங்களுக்குப் பிடித்த நீங்கள், உங்களால் ரசிக்கப்படுகிற நீங்கள் என்பதையெல்லாம் தாண்டி நீங்கள் அறியாத ஒருவர் உங்களுக்குள் இருக்கிறார். அவரைச் சந்திக்க நீங்கள் தயாரா? உங்களை விமர்சிக்கிற, உங்களைக் கேள்வி கேட்கிற, முதல் தடவை தெரியாமல் செய்த தவறை மறுமுறை தெரிந்து செய்கையில் உங்களை முறைக்கிற அந்த மனிதரை உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் முடியாது என்று ...

சாமர்த்தியம் செயலாகாது!

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… எழுதிப் போட்டு வாங்குகிற பதிலுக்கும் எதிரே நின்று கேள்வி கேட்டு வாங்குகிற பதிலுக்கும் என்ன வித்தியாசம்? கேட்ட மறுநொடியே கிடைக்கும் பதிலில் உண்மை இருக்கும். முதல் வகை பதிலில் சாமர்த்தியம் இருக்கும். இதுதான் வித்தியாசம். குறிப்பாக சேவைத்துறையில் இருப்பவர்களிடம் புகார் செய்யும் வாடிக்கையாளர்கள், செயலைத்தான் எதிர்பார்க்கிறார்களே தவிர, சாமர்த்தியத்தை அல்ல. சமத்காரமாக வாதம் செய்து சாமர்த்தியமாகப் பூசி மெழுகுபவர்கள் வாதத்தில் வெல்லலாம். வாடிக்கையாளர்கள் நம்பிக்கையை வெல்ல முடியாது. ஒரு சூழலை ...

கையடக்கமாய் சில கனவுகள்

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… ஒரு மனிதனின் சட்டைப்பைக்குள் கையடக்கமாய் இருக்கும் குறிப்புகள் அவனுடைய அன்றாட வேலைகளின் நினைவூட்டல் பட்டியலாக இருக்கும். அந்தப் பட்டியலுடன் துணையாய் இருக்க வேண்டியது, குறுகிய காலத்தில் எட்ட வேண்டிய கனவுகளின் பட்டியல். நம் வாழ்வின் நோக்கம் பற்றிய வழி காட்டுதல், உள்மனதுக்கு எப்போதும் வேண்டும். அந்த வழிகாட்டுதலுக்கு வழிதான், கையடக்கமாய் சில கனவுகள். முதன் முதலாக நீச்சல் பழகுபவர்கள் அதிகம் ஆழமில்லாத இடத்தில் பயிற்றுவிப்பது மாதிரி, கையடக்கமான கனவுகளை நம்பிக்கையுடன் ...

தெய்வம் நடத்தும் தெருக்கூத்து

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… வெளிப்படையாய் நடக்கிற ஒன்றை சற்றே அலட்சியமாய் பார்த்தாலும் அடி வயிற்றில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கக் கூடியது, தெருக்கூத்து. தான் அதிர்ந்து போனதை வெளிக்காட்டாமல் பலர் அவசரம் அவசரமாய் அங்கிருந்து நகர்வார்கள். சிலர் ரகசியமாய் ரசிப்பார்கள். சிலரோ வெளியில் வந்து வேடிக்கை பார்ப்பார்கள். வாழ்வில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள் பல, நாம் எதிர்கொள்ள விரும்பாதவையாய் இருக்கும். ஆனாலும்கூட அவை நிகழ்ந்தே தீரும். வாழ்க்கையில் நம் முன்னே மிக எளிய மனிதர்களாகத் தோற்றமளிக்கிற ...

புன்னகை என்றோர் ஆயுதம்

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… தட்பவெட்பம் உங்களுக்குச் சாதகமாக இல்லாத போது… உங்களின் விருப்பமான காபி சூடாக இல்லாத போது… உங்களின் திட்டமிடல் லேசாக குழம்பும் போது புன்னகைப்பது கடினம்தான்… இதுபோன்ற ஒவ்வாத தருணங்களை புன்னகைகளால் மட்டும் மாற்றமுடியாது. ஆனால் இவை சூழ்நிலையை இன்னும் மோசமாக்குவதில்லை. புன்னகைகள் நம்முடைய உற்றதுணையாகிறது. வறண்ட நம் தருணங்களின் மேல் நீர் பாய்ச்சுகிறது. பிரச்சினைகள் முடிவுக்கு வரும்போது நாம் அழைக்காமலேயே வந்து ஒட்டிக்கொள்கிறது. நாம் அனுமதிப்பதற்குள்ளாகவே அனைவருக்கும் நம் புன்னகையைப் ...
More...More...More...More...