கலைத்துப் போட்ட சீட்டாய் கனவுகள்
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… சீட்டு விளையாட்டில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய நல்ல விஷயம் ஒன்றுண்டு. கலைந்து கிடக்கும் சீட்டுகள் நடுவில்தான் தங்கள் வெற்றிக்கான துருப்புச் சீட்டுகள் ஒளிந்திருக்கின்றன என்பதை ஆட்டக்காரர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். சொல்லப்போனால், சீட்டுகளைக் கலைத்துப் போட்ட பிறகுதான் அவர்களுடைய ஆட்டமே ஆரம்பமாகிறது. ஆனால் மனிதர்கள் பலர் தங்கள் கனவுகள் ஏதேனும் கலைந்துபோனால் கலைந்து போகிறார்கள். எல்லாமே –முடிந்து விட்டதுபோல் எண்ணி இடிந்து போகிறார்கள். கலைந்து போன சீட்டுகளிலிருந்த தங்கள் வெற்றியை ...
தாயக் கட்டைகள் தயாரிக்கும் செலவு
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… சொத்தையும் மனைவியையும் தாயமாடித் தோற்றவர்கள் பாண்டவர்கள் என்று படித்திருக்கிறோம். தயார் நிலையில் இல்லாமல் தாயமாட அழைக்கப்பட்டு தருமன் தடுமாறிவிட்டான். எதில் இறங்குகிறோமோ அதன் நுட்பம் தெரிந்திருந்தால் எந்தச் சூழலிலும் வெற்றிக்கு உத்திரவாதம் இருக்கும். கார் வாங்கியவருக்கு ஓட்டத் தெரிந்தால் மட்டும் போதாது. சின்னச் சின்னப் பழுதுகள் ஏற்பட்டால் சரி செய்யும் திறமையும் வேண்டும். எந்த ஒன்றையும் ஆழமாய் அறிந்து கொள்ளாமல் கால் வைத்துவிட்டு, பின்னர் இழப்பு நேர்ந்ததென்று சலித்துக் கொள்வதில் ...
எதிரிகள் வெல்ல இடம் கொடுங்கள்
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… கருத்து வேறுபாடு கொண்டவர்களெல்லாம் எதிரிகளல்லர். உங்களை வீழ்த்த நினைப்பவர்களே எதிரிகள். உங்கள் தனித்தன்மையோ திறமையோ அவர்களின் வளர்ச்சிக்கு இடையூறு செய்வதாய் எண்ணுவதாலேயே உங்களுக்கு அவர்கள் எதிரிகள் ஆனார்கள். அவர்கள் உங்களை வீழ்த்தாமல் அவரவர் திறமையிலேயே வெல்ல முடியும் என்கிற உண்மை தெரியாததால் அவர்கள் உங்கள் எதிரிகள். தங்களை வளர்த்துக்கொள்ளும் சின்னஞ்சிறு வழி அவர்களுக்குத் தெரிந்தாலும் அவர்கள் உங்களை எதிர்ப்பதை விட்டு விட்டு, தங்களை வளர்ப்பதில் கவனம் செலுத்துவார்கள். உங்களால் முடிந்தால், ...
ஏமாற்றம் என்பதோர் ஏற்பாடு
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… வாழ்வில் ஏற்படும் பெரும்பாலான சறுக்கல்களுக்குக் காரணம் கவனக் குறைவு. மிகச்சிறிய விஷயம் ஒன்றில் கவனம் செலுத்தியிருந்தால் ஒரு பெரிய ஏமாற்றத்தைத் தவிர்த்திருக்கலாம் என்கிற பாடத்தை நம் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை ஒவ்வொரு விதமாகக் கற்றுக் கொடுத்திருக்கும். வாழ்வின் மிக முக்கியமான பாடமே இதுதான். ஏமாற்றங்களைத் தவிர்ப்பது எப்படி என்பதை சிந்தித்து மனிதர்கள் தங்களை சீரமைத்துக் கொண்டால் வாழ்க்கை மிகச் சுலபம் என்பதை விளங்கிக் கொள்வார்கள். இந்தக் கவனக்குவிப்பை வா-ழ்வில் கொண்டு வருவதற்கான ...
பாழடைந்த கோவிலின் பகவானுக்கு…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… ஆள்நடமாட்டம் அற்றுப்போய், வவ்வால்கள் மட்டும் வந்து போகும் கோவில்கள் யாரோ ஒருவரின் கண்களில் பட்டதால் புதுப்பொலிவு பெறுகின்றன. புறக்கணிக்கப்பட்ட பகவானுக்கு பொங்கலும் பண்டிகையும் அமர்க்களப்படுகின்றன. விலக்கி வைக்கப்பட்ட தெய்வம் வரப்பிரசாதமென்று வணங்கப்படுகிறது. பகவானுக்கு இந்த நிலை என்றால், மனிதனுக்கு? பின்னடைவுகள் ஏற்பட்டாலும் யார் பொறுமையாய் இருக்கிறார்களோ, அவர்கள் உரிய நேரத்தில் கூடுதல் பலத்துடன் வெளி வருவார்கள். அவ்வப்போது நேர்கிற சின்னச் சின்ன பின்னடைவுகளை சகாப்தமே முடிந்தது போல் எண்ணி சஞ்சலம் ...
சோர்வின் கருவில் சூரியப் பிஞ்சு
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… பகல் என்ற ஒன்றையே பார்த்திராமல் இரவை மட்டுமே எதிர்கொண்ட மனிதன், வானம் இருளால் ஆனதென்று நினைப்பான். அவனைப் பொறுத்த வரை வெளிச்சம் என்ற ஒன்றே இல்லை. ஆனால் புலர் காலப்பொழுதில் சூரியக் கீற்றொளி மெல்லத் தலைகாட்டும் போதே பழைய இருட்டு படீரென விலகுவது பெரும் வியப்பாய் இருக்கும். மனமும் ஆகாயம் போலத்தான். சோர்வின் இருட்டு சூழ்ந்து கொள்ளும் போது விடிவுமில்லை முடிவுமில்லை என்று விசனப்படுகிறமனது சின்னஞ்சிறிய நம்பிக்கை வெளிச்சம் வந்தாலும் ...