பீடமேறினாள் படிப்படியாய் பதம்பதிய பீடமேறினாள்-வினை பொடிப்பொடியாய் நொறுங்கும்படி பார்வைவீசினாள் இடிமழையை முன்னனுப்பி வரவுசாற்றினாள்-பலர் வடித்தளிக்கும் கவிதைகளில் வண்ணம்தீட்டினாள் வீடுதோறும் ஏற்றிவைக்கும் விளக்கில் வருகிறாள்-விழி மூடிநாமும் திறக்கும்முன்னே கிழக்கில் வருகிறாள் ஏடுதோறும் பத்தர் சித்தர் எழுத்தில்…

கவிஞர் வைரமுத்து நேற்று மாலை கோவைக்கு வந்தார்.அவருக்கு மிகவும் பிடித்தமான ஊர்களில் கோவையும் ஒன்று. இன்று காலை ஹோட்டல் விஜய் பார்க் இன் என்னும் புதிய மூன்று நட்சத்திர விடுதியைத் திறந்து வைக்கிறார். அதன் உரிமையாளர் திரு. கோவை இரமேஷ், கவிஞருக்கு…

 பொன்னூஞ்சல்     வீசி யாடுது பொன்னூஞ்சல்-அதில் விசிறிப் பறக்குது செம்பட்டு பேசி முடியாப் பேரழகி-அவள் பாதம் திரும்புது விண்தொட்டு ஓசை கொடுத்த நாயகிதான்- அங்கே ஓங்கி அதிர்ந்து ஆடுகிறாள் கூசிச் சிணுங்கும் வெண்ணிலவை-தன்…

சுடர் வளர்ப்பாள் பக்கத்தில் நடப்பவள் பராசக்தி- நம் பார்வையில் படுவாள் சிலசமயம் தர்க்கக் குப்பைகள் எரித்துவிட்டால்-அவள் திருவடி தெரிந்திட இதுசமயம் செக்கச் சிவந்த தளிர்விரல்கள்- நம் சிகையைக் கோதவும் இதுதருணம் இக்கணம் எழுதும் இந்தவரி -அவள்…

என்ன வேண்டுவதோ…..? நீலக் கருங்குயில் பாட்டினொலி- வந்து நேர்படக் கேட்டிடும் மாலையிலே வாலைச் சிறுமியின் வடிவெடுத்தே-அவள் வந்துநின்றாளென் எதிரினிலே தூல வடிவினில் ஓளிந்துகொண்டால்-இது தாயென்று சேய்மனம் அறியாதோ ஜாலங்கள் காட்டிடும் சக்தியவள்-முக ஜாடை நமக்கென்ன…

அற்புதர்-6

October 13, 2012 0

அற்புதரின் கைப்பையில் சில பாம்புக் குட்டிகள் இருக்கும். புற்றில் இருக்கும் பாதுகாப்புணர்வைக் காட்டிலும் அங்கேதான் பலமடங்கு பத்திரமாய் உணரும். அற்புதருக்கு பாம்புகளுடன் அறிமுகம் உண்டு.அவரை பாம்புகளுக்கு அற்புதராய்த் தெரியுமோ என்னவோ அவரின் அற்புதங்களை அவையறியும்.…

அற்புதர்-5

October 11, 2012 0

அற்புதரின் பார்வை நிகழ்காலத்துடன் நின்று விடுவதல்ல. அது பின்னர் நிகழக்கூடியதையும் சேர்த்தே தரிசிக்கும் தன்மை வாய்ந்தது. அற்புதர்கள் எல்லோருமே இப்படித்தான் போலும்.ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ஒற்றை மனிதன் கூட இல்லாத பொட்டல் வெளியைப் பா ர்த்த…

அந்த மலையடிவாரத்தில் அற்புதர் உலவிக்கொண்டிருந்த போது சற்று முன்னதாய் இருவர் சென்று கொண்டிருப்பதைக் கண்டார். ஜனன தேவதையும் மரண தேவதையும்தான் அவர்கள் என்பதைக் கண்டுணர அவருக்கு அதிகநேரம் ஆகவில்லை.இருவர் கைகளிலும் சிறு சிறு மூட்டைகள்.அந்த மூட்டைகளை அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று  அற்புதர்…

அற்புதரின் நிரல்கள் அசாதாரணமானவை. கடிகாரத்தில் துள்ளிக்கொண்டிருக்கும் விநாடி முள்ளின் வீரியத்தைக் கணக்கிலிட்டு வடிவமைக்கப்பட்ட நிரல்கள் அவை.ஏனெனில் அற்புதரின் அகராதியைப் பொறுத்தவரை எப்போதோ நிகழ்வதல்ல அற்புதம். ஒவ்வொரு கணமும் நிகழ்வதே அற்புதம். நிகழும் ஒவ்வொரு கணமுமே…

மூத்த தமிழறிஞரும் காந்தீய நெறியாளருமான முனைவர் .ம.ரா.போ. குருசாமி (92) இன்று கோவையில் காலமானார். தமிழிலக்கிய உலகில் நுண்ணிய அறிஞராகவும் தேர்ந்த திறனாய்வாளராகவும் திகழ்ந்தவர் இவர். செவ்விலக்கியங்களில் ஆழ்ந்த புலமையும் சமகால இலக்கியங்களில் வியப்பூட்டும் வாசிப்பும் கொண்டவர் அவர். ஜெயமோகனின் “இன்றைய காந்தி” நூலுக்கு விருது வாங்கித்தர தாமாகவே கங்கணம் கட்டிக் கொண்டு அதற்கான விண்ணப்பங்களை சிரத்தையுடன்…