திரளும் முகில்கள் தயங்கி நடக்கும்
உருளும் தேர்களாய் உயரே அசையும்.
எந்தப் பரப்பில் எந்த நொடியில்
விழுவதென்றே வியூகம் அமைக்கும்.
சொந்த முடிவா?சந்தர்ப்ப வசமா?
எந்த வகையிலோ இறங்கத் தவிக்கும்.
எம்மழை எவ்விடம்…என்பது எவர்வசம்
அந்தப் புதிர்தான் ஆதிப் பரவசம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *