linga-bhariavi-06

பாதங்கள் பற்றினால் பாரங்கள் நீக்கிடும்
பைரவி சந்நிதானம்
பெருநிலம் காப்பவள் திரிசூலம் மின்னிடப்
பொலிவோடு நின்ற கோலம்

கீதங்கள் ஒலித்திடும் கோயிலின் வாயிலில்
கால்வைக்கும் அந்தநேரம்
காருண்யரூபிணி காதோரம் “வா” என்று
கூப்பிட்ட வாஞ்சை தோன்றும்

“ஈதெங்கள் தாயெ”ன்று ஈஷாவின் அன்பர்கள்
இதயத்தில் உன்னை வைத்தோம்
ஈரங்கள் விழியோடு நீயெங்கள் மொழியோடு
என்றேதான் வாழுகின்றோம்

நாதனின் இடபாகம் நிற்கின்ற பைரவி
நல்லருள் தர வேண்டுமே
நவராத்ரி நாயகி! நின்பதம் போற்றினோம்!
நீங்காத துணை வேண்டுமே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *