adurai-eenakshi-emple-620111
உன்கையில் உருவான உயிருள்ள பொம்மைகள்
உன்போல பொம்மை செய்யும்;
ஊர்கூடி சீர்கூடி உல்லாச கொலுவைத்து
உன்பேரைப் பாடி உய்யும்;
பொன்னள்ளித் தருகின்ற பூரணி! அபிராமி!
பொற்பதம் பாடுகின்றோம்;
புன்வினை நீக்கிடும் புண்ணியச் சந்நிதி
பணிந்திடக் கூடுகின்றோம்;
நன்னிலை சேரவே நல்லருள் கூடவே
நவராத்ரி ஆரம்பமே!
நவகோள்கள் ஆண்டிடும் நவகோண நாயகி
நேர்வரும் ஆனந்தமே!
இன்னமும் பிறவிகள் இல்லாமல் செய்பவள்
இன்றெமைக் காக்க வருக
இழையோடும் சுவாசமே ஹிருதய வாசமே!
எழில்கொஞ்சம் மீனாட்சியே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *