வாழ்க்கை என்பது வார்க்கப்படுவது
வேண்டிய விதமாய் வார்த்திடலாம்!
சூழ்நிலை எப்படி இருந்தால் என்ன
ஜெயிக்க நினைத்தால் ஜெயித்திடலாம்
ஏழ்மையும் செல்வமும் தலைவிதியல்ல
எதையும் முயன்றால் மாற்றிடலாம்!
வாழத் தெரிந்து வாழ்வை நடத்திடு
வானம் ஒருநாள் வசப்படலாம்!

கற்ற கல்வியோ கதவுகள் திறக்கும்
காற்றாய் நுழைவது உன்வேலை
பெற்ற வாய்ப்போ சாவிகள் கொடுக்கும்
புதையல் திறப்பது உன்லீலை!
வெற்றி உனக்கொரு வலிமை கொடுக்கும்
வென்றுகொண்டிருப்பது சுகபோதை!
பற்றிய துறைகளில் முத்திரை பதித்தால்
பூமிக்கு உன்கதை புது கீதை!

அஞ்சிக் கொண்டே அடிகள் வைத்தால்
அசையும் செடியும் பூதமடா!
நெஞ்சில் உரமுடன் நிமிர்ந்து நடந்தால்
நீ சொல்லும் சொல்வே வேதமடா!
கொஞ்சம் கொஞ்சமாய் முயற்சிகள் செய்த
குறுகிய வாழ்க்கை போதுமடா!
விஞ்சும் விதமாய் நீ எழும் போது
விதியின் திசைகள் மாறுமடா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *