பொறுப்பில்லாத மனிதர்க்கு வாழ்க்கை
பொம்மலாட்டம் போலிருக்கும்
இறுக்கிய கயிறுகள் இழுக்கிற இழுப்பில்
கைகால் அசையும் நிலையிருக்கும்!

நெருப்பில்லாத மனதுக்கு வாழ்க்கை
நாடகம் நடப்பது போலிருக்கும்
நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாய்
நிலை புரியாத வலியிருக்கும்

சலிப்புணராத மனிதர்கள் வாழ்க்கை
சூரியவெளிச்சம் போலிருக்கும்
முனைப்புடன் தினமும் முயற்சிகள் தொடங்கி
முத்திரை பதிக்கும் வெறியிருக்கும்!

களைப்புணராத பயணம்தான் வாழ்க்கை
கனவைத் தொடுகிற பலமிருக்கும்
உழைப்பெனும் அற்புதம் உணர்ந்தவர்க்கே
உலகம் என்றும் துணையிருக்கும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *