எல்லா சொற்களும் என்முன் வரிசையாய்… நில்லாச் சொற்களும் நங்கூரமிட்டன; பொல்லாச் சொற்கள் பொடிப்பொடி ஆயின; சொல்லாச் சொற்கள் சுரக்கவே யில்லை; பசித்தவன் எதிரில் பந்தி விரித்தும் ரசித்தேன் அன்றி ரணமெதும் இல்லை; முந்திக் கொள்கிற…
(ஈஷாவின் உணவரங்கமான பிக்ஷா ஹாலில் உருவான பாடல்) எனது தந்தை சோறிடுவான் என் சிரசில் நீறிடுவான் என்மனதில் வேர்விடுவான் என்னுடனே அவன் வருவான் காலங்களோ அவனின்புஜம் கவிதைகளோ அவனின் நிஜம் தூலமிது அவனின் வரம்…
வந்தவர் போனவர் வகைதெரியாமல் சொந்தம் பகையின் சுவடறியாமல் சந்தடி ஓசைகள் சிறிதுமில்லாமல் செந்துர ஒளியாய் சந்திரப் பிழிவாய்…… அந்தக் கனவில் அவள்மட்டும் இருந்தாள் செந்நிறப் பட்டில் சூரிய ஜரிகை கண்கள் மூன்றினில் கனிகிற…
களிற்று வடிவே கலியின் முடிவே கண்ணிறை அழகே சரணம் ஒளிக்கும் ஒளியே ஓமெனும் ஒலியே ஒப்பில் முதலே சரணம் துளிர்க்கும் தருவில் தோன்றும் தளிரே துணையே திருவே சரணம் களிக்கும் மகவே கருணைக் கனலே…
இதுவரை மக்கள் தொலைக்காட்சியில் மகான்கள் பற்றி பேசி வந்தேன்…இனி திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.50 மணிக்கு “பிறவிப் பெருங்கடல்”என்னும் தலைப்பில் பேசுகிறேன்.. பிரியமான மனிதர்களிலிருந்து பிரம்மாண்டமான ஆளுமைகள் வரை….. சின்னச் சின்ன…
(பூஜ்யஶ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகள் நலம்பெற வேண்டி…) நல்லால மரமொன்று நெடுநாளாய் இருக்கிறது சொல்லாத வேதமெல்லாம் சொன்னபடி நிற்கிறது கல்லால மரநிழலில் கால்மடித்த உபதேசி நில்லாமல் தொடங்கிவைத்த நெடுமரபின் நீட்சியது; வேதபுரப் பறவைகளும் வந்ததிலே…
பிம்பங்கள் எதுவும் பேசவில்லை-உன் படங்களின் மௌனம் என்ன நிறம்? நம்மிடை மலர்ந்தது நேசமெனில்-அதன் நேர்த்தியும் பதமும் என்னவிதம்? இம்மியும் நெருக்கம் குறையவில்லை-இரு இதழ்களின் சுழிப்பாய் இந்த இதம் நிம்மதி தருமுன் தழுவலினை-இந்த நொடியினில் நினைத்தேன்..என்ன…
உடலெனும் கனவு; சுடலையில் விறகு; கடலெனும் வினைகள் கடந்திடும் படகு; படகில் சிலபேர் பவவினை கடப்பார்; படகைச் சிலபேர் பாதியில் கவிழ்ப்பார்; கற்றவை ,கேட்டவை, கண்டவை என்று பற்றுச் சரக்குகள் பலவும் குவிப்பார் விற்று…
காரணம் தெரியவில்லை.. அவன் காம்போதி வாசித்தான் சுரங்களின் சுவடறியா.. கரங்களில் குழலேந்தி இதுவரை தொட்டறியா துளைகளில் விரல்தடவி எவரும் கேட்டறியா இதத்தில் இங்கிதத்தில்… தவமியற்ற அமர்ந்தவுடன் தேடிவந்த வரம்போல காரணம் தெரியவில்லை…அவன் காம்போதி வாசித்தான்…