அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
பரஞானத்துக்கும் அபரஞானத்துக்கும் அடையளமானவை அம்பிகையின் திருமுலைகள். அவை ஓன்றுக்கொன்று இணையாக இறுகியும் இளகியும் முத்துவடம் சூடிய மலைகள் போல் தோன்றி வல்லமை பொருந்திய சிவபெருமானின் திருவுள்ளத்தை ஆட்டுவிக்கும் கொள்கை கொண்டன. இந்த இயல்பு கொண்ட நாயகியின் இடை பாம்பின் படம்போல் இருக்கிறது. குளிர்ந்த மொழிகளைப் பேசுகின்ற அபிராமியின் திருவடிகளில் வேதங்களே சிலம்புகளாகத் தவழ்கின்றன. இந்தப் பாடலும் அம்பிகையின் திருவுருவை மனதில் பிரதிஷ்டை செய்யக் கூடியதாகும். இடங்கொண்டு விம்மி இணைகொண்டு இறுகி இளகி முத்து வடங்கொண்ட கொங்கைமலைகொண்டு இறைவர்வலிய ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
நமக்காகவே வருவாள் எளிய ஒர் உயிருக்காக இறைவன் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் அபரிமிதமானவை. விடுதலைக்கு வழிதெரியாமல் ஒர் உயிர் தத்தளிக்கும்போது உரிய சூழலை ஏற்படுத்தி திருவடி தீட்சையும் தந்து ஆன்மிகப் பாதையில் உறுதியுடன் நடையிடச் செய்தால் அதற்கு நாம் எவ்வள்வு புண்ணியம் செய்திருக்க வேண்டும் அப்போது மலர்ந்த குவளை மலர்கள் போன்ற கண்களையுடைய இறைவியும் சிவந்த நிறமுள்ள அவளின் கணவரும் ஒன்று சேர்ந்து நமக்காக இங்கே வந்த தன் அடியவர்கள் திருக்கூட்டத்துடன் இருக்கச் செய்து நம் தலையின் ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
பேதைமனம் போடும் பொய்க்கூத்துகள் பட்டியலில் அடங்காது. அகப்பேயின் ஆட்டம் அடங்கி அம்ப்பிகையின் திருவடிமேல் நாட்டம் பிறக்கிற வரையில் அவள் அருகிலும் வராமல்,அகன்றும் விடாமல் சற்று தள்ளியே நிற்கிறாள். அவள் தள்ளி நிற்பதெல்லாம் பேதைமை அகன்று அவளுடைய பொன்னடிகள் மேல் அன்பு பிறந்ததும் அருகில் வந்து அருள்செய்யத்தான். திருநுதலில் விழிகொண்ட அந்தத் தேவியை விண்ணவர்கள் யாவரும் தேடிவந்து பணியக் காத்திருக்கிறார்கள். அவளோ நம் பேதைமை அகல்வதற்காக சற்றுத் தொலைவில் காத்திருக்கிறாள்.அவளுடைய திருவடிகளில் அன்பு செய்ய வேண்டும் என்ற எண்ணம் ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
இராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்திக்க ஒரு நாத்திகர் வந்தார். கடவுள் இல்லை என்னும் கருத்தை நிறுவ ஆணித்தரமான வாதங்களை வைத்தார். அவர் வைத்த வாதங்களை மிகுந்த கவனமுடன் கேட்ட பரமஹம்சர்,’அடடா! எவ்வளவு அழகாக வாதிடுகிறீர்கள்! இந்த வாதங்களையெல்லாம் கேட்கிற போது கடவுள் இல்லை என்று நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்ளத்தான் எனக்கும் தோன்றுகிறது. ஆனால் நான் என்ன செய்வேன்! கடவுள் உண்டு என்பது எனக்குத் தெரியுமே! என்ன செய்வேன்!” என்றாராம். கடவுள் உண்டு என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்தவர்களுக்கு ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
அம்பிகையின் திருவுருவை நம் சிந்தையில் உயிரோவியமாகத் தீட்டி அந்த மரகதத் திருமேனியை நம் மனதில் பிரதிஷ்டை செய்யும் அற்புதத்தை படிப்படியாய் நிகழ்த்துகிறார் அபிராமிபட்டர். பவளக்கொடி போன்ற திருமேனி. அதில் பழுத்த கனிபோல் அம்பிகையின் செவ்விதழ்கள்.பனிபடர்ந்த ஒளிமுறுவல் அந்தச் செவ்விதழ்களில் நடமிடுகிறது. திருமுலைகளின் சுமைதாங்காத இடைகளோ சிவபெருமானை வீழ்த்திய வல்லமை கொண்டவை. அவளுடைய திருவடிகளைப் பணிந்தால் தேவர்கள் உலகமே உங்கள் ஆளுகைக்கு வந்துவிடும் என்கிறார் அபிராமிபட்டர். பவளக் கொடியிற் பழுத்த செவ்வாயும் பனிமுறுவல் தவளத் திருநகையும் துணையா எங்கள் ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
அம்பிகையின் திருவுருவை மனத்தில் குறித்து அதைச் சிந்திப்பதே உயர்ந்த தியானம் என்பார் அபிராமி பட்டர்.அதன் முதல் படிநிலையாக அம்பிகையின் திருக்கரங்களில் கரும்பும் தாமரையும் இருப்பதை முதல்காட்சியாகக் காட்டுகிறார். அம்பிகையின் தாமரைத் திருமேனியில் வெண்முத்து மாலையும் இடையில் பலமணிகள் கொண்ட சங்கிலியும் கோர்க்கப்பட்டிருப்பதை அடுத்த காட்சியாகக் காட்டுகிறார். அம்பிகைக்குத் தன் திருமேனியில் இடப்பாகத்தைத் தந்த பெருமானோ திசைகளை மட்டுமே ஆடையாக அணியும் திகம்பரன் என்னும் அழகியமுரணும் இந்தப் பாடலில் இடம்பெறுகிறது. கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன ...