Blog

/Blog

புள்ளிகளை இணையுங்கள் ! பெரும்புள்ளி ஆவீர்கள்

“வீட்டில் ஏன் இருக்கிறாய்?ஊரில் இரு. ஊரில் ஏன் இருக்கிறாய்?நாட்டில் இரு. நாட்டில் ஏன் இருக்கிறாய்?உலகத்தில் இரு. உலகத்தில் ஏன் இருக்கிறாய்?பிரபஞ்சத்தில் இரு. பிரபஞ்சத்தில் ஏன் இருக்கிறாய்?பிரபஞ்சமாய் இரு!!” இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் என்ற கவிஞர் எழுதிய வரிகள் இவை. ஒரு மனிதன் தன்னுடைய வட்டத்தைப் பெருக்கிக் கொண்டே போகிற போது,அவனுடைய சக்தி வட்டமும் பெருகி விரிகிறது என்பதை இந்தக் கவிதை சொல்லாமல் சொல்கிறது.தன்னை பிரபஞ்சத்தில் ஒரு துளியாகப் பார்ப்பவர்கள் சாதாரண மனிதர்கள்.தங்களை பிரபஞ்சத்தின் ஒளியாகப் பார்ப்பவர்களே சாதனை மனிதர்கள். ...

சில வியூகங்கள்..சில விநோதங்கள்

ஆயுத சாத்திரம் அறத்தை மறந்தது பாய்கிற கணையோ பின்வழி வந்தது * நேர்வழி அபிமன்யு தேர்வழி எனினும் போர்வழி ஏனோ பாதை புரண்டது * துள்ளி யெழுந்த தூயனுக்கெதிராய் வெள்ளிகள் தானே விரைவாய்ப் பாய்ந்தன; * ஒற்றை இரவில் ஓங்கிய துரோகம் உற்றவர் வகுத்தனர் ஊழலின் வியூகம் * துரோணர் தடுத்தும் துரோகம் சூழ்ந்தது வரலாறு இதனை  வெட்கமென்றது * சரியாய் உடைத்தான் சக்கர வியூகம் நரியார் நுழைத்த சூழ்ச்சிகள் ஏகம்! * தரையைத் தொட்டது தற்காலிகமே ...

பாணன் ஒருவனின் பயணமிது-மரபின் மைந்தன் முத்தையா

( இசைக்கவி ரமணன் அவர்களின் நதியில் விழுந்த மலர் கவிதைத் தொகுப்புக்கு எழுதிய அணிந்துரை) பயணம் போகும் பாணன் ஒருவன், பகல் பொழுதொன்றில் மரநிழலில் ஒதுங்கி,கட்டு சோற்றினைப் பிரித்துண்டு,நீரருந்திசௌகரியமான சாய்மானத்தில் ஏட்டுச்சுவடியில் எழுதிப்பார்த்த வரிகள் இவை.அகம்கூட்டும் அவதானிப்பில் முகம்காட்டும் பல்லவிகளின் காது திருகி இழுத்துவந்து கவிதைகளாக்கிய எக்காளம் எல்லாப் பக்கங்களிலும் ஒலிக்கிறது.வாழ்க்கையின் மூலம் தேடித்திரியும் சாதகன் ஒருவனின் வாக்குமூலங்கள் இவை.எனவே வடிவம் குறித்தோ அடர்த்தி குறித்தோ அச்சமின்றி அவை வெடித்துக் கிளம்பி வெளிவருகின்றன. இசைக்கவி ரமணனை நன்கறிந்தவர்கள் ...

ம.பொ.சி-வாழ்வியல் சித்திரம்

தன்னுடைய தலைமையில் ஓர் இயக்கமே உருவான பிறகு கூட சின்னஞ்சிறிய இல்லமொன்றில் அச்சுக் கோர்த்துக் கொண்டிருந்த ஒரு தலைவரைக் காண ஒரு தொண்டர் கோவையிலிருந்து செல்கிறார். தனக்கு நன்கு அறிமுகமான அந்தத் தொண்டரை,உள்ளே அழைத்து அமரவைத்துப் பேசுகிறார். அந்தத் தலைவர்,ம.பொ.சி.கோவையில் கழகப் பணிகள் எப்படி நடக்கின்றன என்று கேட்கிறார். “குடந்தை பாலுவைஅழைத்து ரெண்டு கூட்டம் நடத்துனோங்கையா,ரெண்டு கிளைகளும் தொடங்கினோம்” என்கிறார் தொண்டர். அடுத்து ம.பொ.சி. கேட்கிறார்,”ஆமாம்,புவியரசு எப்படியிருக்கிறார்?” வந்த தொண்டர் அதிர்ச்சியுடன் “அய்யா” என்றதும்,ம.பொ.சி. அதிர்ச்சியாகி, ” ...

கம்பனில் மேலாண்மை-3

(கோவை கம்பன் விழாவில் 13.02.2016 அன்று “கம்பனில் மேலாண்மை” என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் தொடர்ச்சி) ஒரு நிறுவனம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் குறிப்பிட்ட வணிக வாய்ப்பைப் பெற வேண்டுமென்றால் அதற்கென்று சில நியதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும். அந்த நிறுவனத்தின் உயரத்திற்குப் பொருந்தாதவாறு மிக எளிய மனிதர்களிடம் சில சான்றாவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருந்தால் அதனைச் செய்தே ஆக வேண்டும். சுக்ரீவனின் நட்பினை வேண்டிப் பெறுதல் இராமனின் தகுதிக்கு உகந்ததல்ல என்பதை வாலியே சொல்கிறான். இராமன் யாருடைய துணையும் ...

கம்பனில் மேலாண்மை-2

(கோவை கம்பன் விழாவில் 13.02.2016 அன்று “கம்பனில் மேலாண்மை” என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் தொடர்ச்சி) ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் அவர்களின் குண இயல்பை எடைபோடும் ஆற்றல் என்று வரும்போது அனுமனை தாண்டிச் செல்ல இயலாது.முதன்முதலாக இராம இலக்குவரைப் பார்த்ததுமே, ” தருமமும் தகவுமிவர் தனமெனும் தகையரிவர் கருமமும் பிறிதொரு பொருள் கருதியன்று;அது கருதின் அருமருந்து அனையது;இடை அழிவு வந்துளது,அதனை இருமருங்கினும் நெடிது துருவுகின்றனர் இவர்கள்” என அனுமனால் துல்லியமாகக் கணிக்க முடிகிறது. இடர்நிலைப் பேராண்மை என்னு ...
More...More...More...More...