Blog

/Blog

களத்தின் சூட்சுமம்

எனக்குள் இருக்கிற நிர்வாகி எழுந்து பார்க்கிற நேரத்தில் கணக்குகள் நிரல்கள் திட்டங்கள் கண்ணைக் கட்டும் காலத்தில் தனக்குள் திட்டம் பலதீட்டி தாளில் கணினியில் அதைக்காட்டி கனக்கும் இமைகள் கசக்குகையில் களத்தின் சூட்சுமம் விரிகிறது கேடயம் கவசம் துணையின்றி கத்தியை எடுப்பது வீரமல்ல பாடம் இதிலே புரிகிறது புதிதாய் வியூகம் அமைகிறது மூடிக் கிடக்கும் திசைதிறந்து முன்னே முன்னே நடைநடந்து தேடலைத் தொடர்தல் வாழ்வென்னும் திடமும் அதிலே வளர்கிறது சீறும் அலைகள் சவால்களெனில் செய்யும் தொழிலே ஒருபடகு மாறும் ...

எதிர்த்துச் சொல்வதா? ஏற்றுக் கொள்வதா?

இந்தக் கேள்வி,வாழ்வின் எத்தனையோ தருணங்களில் தலைகாட்டியிருக்கிறது.நம்மால் ஏற்க முடியாத கருத்துக்களையோ,உடன்பட முடியாத யோசனைகளையோ யாரேனும் சொல்லும்போது, சில சமயங்களில் மறுத்திருக்கிறோம்.பல சமயங்களில் மென்று முழுங்கியிருக்கிறோம்.ஏன் மென்று முழுங்குகிறோம்? விவாதங்களை,தெரிந்து கொள்வதற்கும் திருத்திக் கொள்வதற்குமான சந்தர்ப்பங்களாய் சிந்திக்காமல்,சர்ச்சைக்கான வாசல்களாய்ப் பார்ப்பவர்கள் மாற்றுக் கருத்துச் சொல்ல மணிக்கணக்கில் யோசிப்பார்கள். இது பொதுவான கருத்து. இதையும் தாண்டிப் பார்த்தால் சில அடிப்படைக் காரணங்கள் உண்டு. சின்னஞ்சிறிய வயது முதல் நமக்குப் போதிக்கப்பட்டுள்ள பால பாடங்களில் ஒன்று,”எதிர்த்துப் பேசாதே” என்பது.பெற்றோர்,ஆசிரியர்,மூத்தவர்கள் என்று எல்லோரோடும் ...

காதில் கேட்ட பாட்டு

வானத்தில் எழுந்தகுரல் வாசகமா? இல்லை! வாழ்க்கையினை உணர்த்துமொரு வார்த்தைகூட இல்லை! ஞானத்தின் பாதைதரும் மந்திரமா ? இல்லை! நாளையினை உணர்த்துமொரு ஜோதிடமும் இல்லை! ஏதோவொரு பாட்டிசைக்க இறைவனுக்கு விருப்பம் என்செவியில் முணுமுணுப்பு கேட்டதுதான் திருப்பம் பாதிச்சொல் பாடியவன் பார்த்துவிட்டுத் திகைத்தான் பார்த்துவிட்டு வெட்கமுடன் பரம்பொருளும் சிரித்தான் நாதத்தால் இறைவனைப்போய் நாமடைய முயல்வோம் நாதத்தை அடைவதற்கே நாயகனும் முயல்வான் கீதத்தின் லயங்களுக்குக் காலமெல்லாம் பிரியன் பாதங்கள் அசைத்தாடும் பெருங்கொண்ட வெறியன் ஆட்டங்கள் ஆடுவதில் அவன்பெரிய மேதை ஆடவிட்டுப் பார்ப்பதிலோ ...

முதியோர் இல்லங்களை மூடவேண்டுமா?

மரபின் மைந்தன் அவர்களுக்கு வணக்கம். முதியோர் இல்லங்கள் பற்றிய சாடலும் முதியோர் இல்லங்களில் பெற்றவர்களை விடுபவர்கள் பற்றிய சாபங்களும் மேடைகளில், குறிப்பாக பட்டிமன்ற மேடைகளில் அதிகம் கேட்கிறோம். இன்று அயல்நாடுகளில் வேலைக்குப் போகிறவர்களுக்கு முதியோர் இல்லங்கள் வரப்பிரசாதங்கள்.இந்தியாவில் கூட கணவன் மனைவி வேலைக்குப் போகும் சூழலில் முதியோரில்லங்கள் பாதுகாப்பாக வசதியாக உள்ளன. இப்படியிருக்க இந்தவாதங்கள் அனாவசியமான குற்றவுணர்வை உருவாக்குகின்றன. இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? முதியோர் இல்லங்களில் பெற்றோரை விடுபவர்கள் பொறுப்பற்றவர்களா? -சிவசுப்பிரமணியன்,ஓசூர் “ஈட்டிய அனுபவக் களஞ்சியம் ...

முடிவிலா முதலாகினாய்

மார்புக்குக் கவசங்கள் அணிகின்ற கவனங்கள் மழலைக்குத் தெரியாதம்மா மாதாவுன் கண்பார்வை தனையன்றி உலகத்தில் முழுக்காவல் வேறேதம்மா ஊரெல்லாம் அறியுமே உன்பிள்ளை நானென்று உன்மௌனம் உதவாதம்மா உயர்வேதம் சொல்கின்ற எதுவுமுன் சொல்லுக்கு உறைபோடக் காணாதம்மா நாராக இருந்தாலும் நளினமலர்ச் சரமாகி நாயகி பதம்தீண்டுவேன் நானெனும் சுமைதாங்கி நான்மிகவும் இளைத்தேனே எப்போது கடல்தாண்டுவேன் தேரேறி வருகின்ற தேவீநின் கண்பட்டால் தேம்பும்மனம் தேறிடாதோ தேடுவார் தேடவே பாடுவார் தம்மையே தேடிவரும் மாதங்கியே சித்திர வீணையை ஏந்திடும் நாயகி சொக்கனின் உயிர்மீட்டினாய் செந்தூரன் ...

இது சிலப்பதிகாரம் அல்ல

அடிகளின் காப்பியம் அளிக்கிற சேதி கடைசியில் வெல்வது காலத்தின் நீதி அரசியல் பிழைத்தால் அறம் கூற்றாகும் கருதிய சதிகள் காற்றுடன் போகும் அரங்கேற்றத்தில் ஆடல் கோலம் தடுமாற்றத்தில் கோவலன் பாவம் பொன்னைக் கொடுத்துப் பெண்ணை வாங்கலாம் என்ன கொடுத்து உண்மை வாங்கலாம்? தாழ்ந்ததைச் செய்தால் தாழ்வையே கூட்டும் ஊழ்வினை அப்படி உருத்துவந்து ஊட்டும் மாதவி பிணக்கு கண்ணகி வழக்கு மாதர்கள் கைகளில் கோவலன் கணக்கு மாதரி கவுந்தி ஆதரித்தாலும் வீதியில் நிறுத்தும் விதிவிட்ட தூது கூடா நட்பால் ...
More...More...More...More...