Blog

/Blog

எப்போ வருவாரோ தொடரில்…..

தங்களை அன்புடன் அழைக்கிறோம் ...

பேச்சுப் பேச்சென்ன….பெரும்பூனை வந்தக்கால்….

குயிலிசை கேட்கக் கூடிய கூட்டம் வெய்யிலில் மழையில் வளர்ந்தது கண்டு கூண்டுக்குள்ளே கிடந்த கிளியோ குய்யோ முறையோ எனக் கத்திற்று மனனம் செய்தது மறந்து தொலைக்க கவனம் சிதறிக் கிளி அலறிற்று; மனப்பா டக்கிளி மறதி தொடர்ந்தால் தினப்பா டுக்கே திண்டாட்டம் என்பதால் தளர்ச்சியை மறைக்கத் திட்டம் பிறந்தது ‘புரட்சிக் கிளி’யென பட்டம் கொடுத்தனர் புரட்டுக் கிளியைப் புலவர் என்றனர் குயில்போல் சுயமாய் கீதம் வராததால் குயிலைப் பழிக்க கிளிகிளம்பியது ; தூக்கி விடச்சில காக்கைகள் கிடைத்தன ...

பனிபோல் இறங்கும் கவிதைகள்-கனிமொழி.ஜி.யின் மழை நடந்தோடிய நெகிழ்நிலம்

அகழும் பொழுதும் நெகிழும் இயல்பு கொண்டது நிலம். அதுவும் மழையேந்திய நிலமென்றால் கேட்கவே  வேண்டாம். மழைக்கும் நிலத்துக்குமான உறவு நுட்பமானது.மழை வரும் முன்பே மலர்ந்து, வாசனை பரப்பி, விழும் மழைத்துளியில் திடநிலை கரைந்து நிலம் குழைகிறபோது ‘சார்ந்ததன் வண்ணமாதல்” நிலத்தின் இயல்பா நீரின் இயல்பா என்கிற கேள்வி எழும். வாழ்வின் நுண்கணங்களுக்கு தன்னை ஒப்புக் கொடுக்கிற மனம்,அத்தகைய நிலம்தான். கனிமொழி.ஜி.யின் கவிதை நூலாகிய “மழை நடந்தோடிய நெகிழ்நிலம்”அத்தகைய நுண்கணங்களில் மலர்ந்து விகசிக்கும் கவிதைகளைக் கொண்டது. காரைக்கால் அம்மை ...

வந்தாள் ஒருநாள் தானாக

இந்தச் சிறுமியை துணைக்கழைத்தால்-வினை ஏதும் செய்திட முடிவதில்லை சொந்தப் புத்தியும் இயங்கவில்லை-இவள் செய்கைகள் எதுவும் விளங்கவில்லை வந்தாள் ஒருநாள் தானாக -என்னை வாட்டி வதைக்கிற தேனாக அந்த நாள்முதல் நானுமில்லை-அட அதன்பின் எனதென ஏதுமில்லை   ஒப்பிட  முடியாக் குறும்பியென-மெல்ல உள்ளே தள்ளிக் கதவடைத்தேன் அப்பொழுதும் அவள் அயரவில்லை-தனியே ஆடிக் களிக்கும் குரல் கேட்டேன்  எப்படி சாத்தியம் என்றறிய -நான் எட்டிப் பார்த்தேன் மனமழிந்தேன் சொப்புச் சாமான் வரிசையிலே -அவள் சுற்றும் கோள்களை வைத்திருந்தாள்     ...

ஏதும் குறையில்லை யே

சூல்கொண்டு நீலம் சுடரும் முகிலதுவும் பால்கொண்ட பிச்சி பெருமுலையோ-மால்கொண்ட நெஞ்சின் கனமோ நகருகிற வானமோ நஞ்சுண்ட கண்டம்தா னோ சாவா திருக்க சுடுங்கவலை யாலிங்கு மூவா  திருக்க மருந்துண்டு-ஏவாத அம்பால் புரமெரித்து ஆனை உரிபோர்த்த நம்பன் தருகின்ற நீறு பூதங்கள் ஐந்தின் பொறியகற்றும் போர்க்களத்தே நாதன்தாள் தானே நமதரணாம்-சீதங்கொள் வேலையெழும் நஞ்சை விருந்தாகக் கொண்டவனின் சூலமே நீயே சுடு. நீறோடு நீறாய் நெடுமேனி ஆகும்முன் ஆறோடே ஆறாய் அழியும்முன் -ஏறேறும் நாதன் கழலே நினையாயென் நெஞ்சமே ஏதும் ...

சிங்கப்பூர் வருகிறேன்

வாய்ப்புள்ள நண்பர்கள் வருகைதர அழைக்கிறேன் ...
More...More...More...More...