Blog

/Blog

நானிலம் காப்பாள் மடியில்

பச்சைப் பட்டின் முந்தானை -அந்தப் பரமனின் நெற்றியை ஒற்றும் பச்சை வண்ணத் திருமேனி-எங்கள் பரமனின் பாதியைப் பற்றும் பச்சைப் புயலாம் மயிலினிலே-ஒரு பிள்ளை பூமியை சுற்றும் பச்சை மாமலை திருமாலோ-அவள் பிறந்த வகையின் சுற்றம் மாம்பழம் பெற்ற முதல்பிள்ளை -எங்கள் மாதுமை மடியினில் துஞ்சும் தேம்பி யழுத பிள்ளைக்கோ-பால் திருஞானத்துடன் விஞ்சும் சாம்பல் மேட்டினில் சாம்பசிவம்-உடன் சாம்பவிக் கொடிநின்று கொஞ்சும் கூம்பிய உயிர்கள் மலர்ந்துவிட-அவள் குளிர்மலர் அடிகளே தஞ்சம் நாயகிஎங்கள் சிவகாமி -இந்த நானிலம் காப்பாள் மடியில் ...

அடக்கும் அங்குசம்

கட்டிவைத்தும் மனக்களிறு கட்டுப்படாது-அதுகாமங்கொண்டு பிளிறுவதை விட்டுவிடாதுதட்டிவைக்க அவள்வராமல் தலையடங்காது-எங்கள்தேவதேவி குரல்தராமல் நிலையடங்காதுஅங்குசத்தைக் கொண்டுநின்றாள் ஆலயத்திலே-நம்அகந்தையெல்லாம் தளரவைக்கும் ரௌத்திரத்திலேஅங்கயற்கண் பார்வைபட்ட ஆனந்தத்திலே-அடஆனையெல்லாம் பூனையாகும் சிவலயத்திலே!பாணமைந்தும் கரும்புவில்லும் பூங்கரத்திலே-ஒருபார்வையிலே மனமடங்கும் அவள்பதத்திலேகோணங்களோ ஒன்பதுஸ்ரீ சக்கரத்திலே-நவகோள்களெல்லாம் வணங்கிநிற்கும் ஸ்ரீபுரத்திலே சிந்துரத்தில் தோய்ந்தபாதம் சமர்க்களத்திலே-கொடும்சினமெழுந்து சூலமேந்தும் அமர்க்களத்திலேவந்தபகை மாய்க்கும் அன்னை ஒளிரதத்திலே-அவள்வைத்தசுடர் பற்றிக்கொள்ளும் வினைப்புனத்திலே ...

சொல்லாய் மலர்கிறவள்

ஏந்திய வீணையில் எழுகிற ஸ்வரங்கள் எண்திசை ஆண்டிருக்கும் மாந்திய அமுதம் பொய்யென தெய்வங்கள் மதுரத்தில் தோய்ந்திருக்கும் பூந்தளிர் இதழ்களில் பிறக்கிற புன்னகை புதுப்புது கலைவளர்க்கும் சாந்தமும் ஞானமும் சரஸ்வதி தேவியின் சந்நிதி தனில்கிடைக்கும் படைப்புக் கடவுளின் பத்தினித் தெய்வம் படையல் கேட்கிறது விடைக்கும் மனங்களின் அறியாமை தனை விருந்தாய்க் கேட்கிறது நடையாய் நடந்து நல்லவை தேடிட நிழல்போல் தொடர்கிறது படைகள் நிறைந்த மன்னவர் பணியும் பெருமிதம் தருகிறது பனையோலை முதல் கணினித் திரைவரை பாரதி ஆளுகிறாள் தனையே ...

இது இராமாயணம் அல்ல….

காத்துக் கிடந்தது குகன்படகு கள்ளத் தோணிகள் திடீர் வரவு…….. மோதிய அலைகளில் ஆடியபடியே பாதங்கள் படுமென ஏங்கியபடியே நாயகன் திருமுகம் தேடியபடியே தோழமை எனும்சொல் சூடியபடியே காத்துக் கிடந்தது குகன்படகு கள்ளத் தோணிகள் திடீர் வரவு…….. துடுப்புகள் ஏனோ அசையவுமில்லை திடுக்கிட்ட வேடன் தெளியவுமில்லை வழக்கத்தின் மாற்றம் விளங்கவுமில்லை இலக்குவன் ஏதும் அறியவுமில்லை காத்துக் கிடந்தது குகன்படகு கள்ளத் தோணிகள் திடீர் வரவு…….. சொந்த நதியிலா சொந்தம் தொலைவது எந்தத் திசையில் நாவாய் செல்வது வந்ததும் சென்றதும் ...

பரிபுரை திருவுளம்

அவள் தரும் லஹரியில் அவளது பெயரினை உளறுதல் ஒருசுகமே பவவினை சுமைகளும் அவளது திருவிழி படப்பட சுடரெழுமே சிவமெனும் சுருதியில் லயமென இசைகையில் சிறுமியின் பரவசமே புவனமும் அவளது கருவினில் தினம்தினம் வளர்வது அதிசயமே நதிமிசை பெருகிடும் அலைகளில் அவளது நெடுங்குழல் புரண்டு வரும் சிதைமிசை எழுகிற கனலினை அவளது சிறுவிரல் வருடிவிடும் விதியதன் முதுகினில் பதிகிற எழிற்பதம் வினைகளைக் கரையவிடும் மதியென எழுகிற திருமுக ஒளியினில் கதிர்மிசை சுடருமெழும் கனல்பொழி நுதல்விழி கருணையின் இருவிழி கயலென ...

சிரித்து நிறைகின்றாள்

மலைமகள் இரவுகள் நிகழ்ந்திடும் பொழுதுகள் மலேய நாட்டினிலே கலைமகள் அலைமகள் கடைவிழி பதிந்திடும் காவிய வீட்டினிலே நலம்பல வழங்கிடும் நாயகி எங்கெங்கும் நின்று ஜொலிக்கின்றாள்! சிலைகளில் மலர்களில் பனியினில் வெயிலினில் சிரித்து நிறைகின்றாள்   மங்கலத் திருவடி நடமிடும் கொலுசொலி மழைவரும் ஒலிதானே! பங்கயத் திருமுகம் பொலிந்திடும் கலைநயம் பகலவன் ஒளிதானே! அங்கென இங்கென ஆயிரம் மாயைகள் அவளது களிதானே! எங்களின் அன்னையின் கைவிரல் தாயங்கள் எழுகடல் புவிதானே!   வீசிய பாதங்கள் விசைகொள்ளும் விதமே வருகிற ...
More...More...More...More...