Blog

/Blog

இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-7

சங்கிலியாரின் கனவிலே சிவபெருமான் வந்து சுந்தரருடைய சிறப்புகளையெல்லாம் சொல்லி அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார். இவர் திருமணமானவர் என்று சங்கிலியார் சொல்லிக்காட்ட அவர் உன்னைப் பிரிந்து போகாத வண்ணம் உறுதிமொழி வாங்கிக்கொள். சத்தியம் வாங்கிக் கொள் என்று சிவபெருமான் சொன்னார். இதைச் சொன்னதே சிவபெருமான்தான் என்பதை அறியாமல் சுந்தரர் இருக்க சங்கிலியார் சத்தியம் கேட்கிறார். உங்கள் சன்னதியில் நான் சத்தியம் செய்தால் நான் அதை மீற முடியாது. எனவே நீங்கள் கோவிலுக்குள் இல்லாமல் மகிழ மரத்தின் ...

இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-6

அடியவர்களில் இறைவனுக்கு தோழர் என்ற நிலையிலே திகழ்ந்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். தம்பிரான் தோழன் என்றும் வன்தொண்டர் என்றும் போற்றப்பட்டவர் இவர். அவருக்கு சிவபெருமான் பலவகைகளிலும் ஒரு நண்பராகத் துணை நின்றிருக்கின்றனர். சுந்தரரின் புகழைக் கேள்விப்பட்ட ஒரு நிலக்கிழார் குண்டையூர் என்கிற ஊரில் இருந்தார். அவர் சுந்தரருக்கு வேண்டுகின்ற செந்நெல் பருப்பு முதலியவற்றை அவரது துணைவியாராகிய பரவை நாச்சியாரின் இல்லத்திற்கு அனுப்பி வந்தார். பஞ்ச காலத்தில் அவரால் முடியவில்லை. உடனே அவர் சிவபெருமான் வணங்க சிவபெருமான் குபேரனை ஏவி ...

இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-5

அதேபோல சிவஞானம் கைவரப்பெற்று திருஞானசம்பந்தர் தேவாரம் பாடத் தொடங்கி இறைநெறியில் ஈடுபட்ட கால கட்டம் அவருடைய மூன்றாவது வயதிலிருந்து துவங்குகிறது. அப்போதே தன் துணைவியார் மதங்கசூளாமணியோடு பங்குபெற்று திருஞானசம்பந்தரின் பதிகங்களை யாழிலிட்டு வாசித்து பாடுகிற தொண்டிலே ஈடுபட்டவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர். அதற்கு துணையாக இருந்தவர் அவர் துணைவியார் மதங்க சூளாமணியார். திருச்சாத்த மங்கை என்கிற திருத்தலத்தில் அந்தணர் குலத்திலே தோன்றி ஒருவராகிய திருநீல நக்கர் இல்லத்திற்கு திருஞானசம்பந்தர் எழுந்தருளினார். அவரோடு திருநீலகண்ட யாழ்ப்பாணரும், மதங்க சூளாமணியும் வந்திருந்தனர். ...

இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-4

இன்றும் இறைநெறியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்கள் என்று இருப்பவர்களிடையே கருத்து மோதலும் யார் பெரியவர் என்கிற ஆணவப்போக்கும் ஒரு சில இடங்களில் தென்படுவதைக் காண்கிறோம். இறைவனுடைய தொண்டர்கள் என்றால் அவர்கள் ஒருவருக்கொருவர் பணிவும் பக்தியும் நிரம்பியவர்களாக விளங்க வேண்டும் என்பதைப் பெரிய புராணம் வலியுறுத்துகிறது. தொண்டு நெறியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிற யாருக்கும் இந்த பணிவின் அம்சம் பொருந்தும். முற்றிய நெற்கதிர்கள் வளைந்து நிற்பதைக் காட்ட வந்த சேக்கிழார், “தத்தமிழ் கூடினார்கள் தலையினாற் வணங்குமாற் போல்” என்று ...

இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-3

‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்’ தங்கள் அனுபவத்தில் இறைத்தன்மையை உணராதவர்கள்தான் தமக்குள்ளே சண்டையிட்டுக் கொள்வார்கள். உலகம் முழுவதும் தன் அனுபவத்தில் உணர்ந்து அவன் பெருமைகளை ஓத வேண்டும். அத்தகைய அருமைப்பாடு கொண்டவன் சிவபெருமான் என்கிறார் சேக்கிழார். “நிலவுலாவிய நீர்மலி வேணியன்” ஒளியும் தண்ணீரும் எவ்வளவு முக்கியமோ, இறைவனும் அவ்வளவு முக்கியம். வெய்யில் காலங்களில் ஒரு மேசையும் இரண்டு பானையும் போட்டு தண்ணீர்ப்பந்தல் வைப்பவர்கள்கூட, அது யாரால் அமைக்கப்பட்டது என்பதைப் பலகைகள் வைத்துப் பிரபலப் படுத்துகிறார்கள். ஆனால் உலகம், ...

இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-2

திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம் உருவாக என்ன காரணம் என்ற கேள்விக்கு சேக்கிழார் சொல்லும் விடை முக்கியமானது. “உலகில், இரண்டு வகையான இருள் உண்டு. ஒன்று, பூமியைப் போர்த்துகின்ற புற இருள். இன்னொன்று மனிதர்கள் மனதைக் கவ்வும் அக இருள். கதிரவன், எப்படி புற இருளை நீக்குகிறதோ அது போல், அக இருளை நீக்குவது திருத்தொண்டர் புராணம்” என்கிறார் சேக்கிழார். “இங்கு இதன் நாமம் கூறின் இவ்வுலகத்து முன்னாள் தங்கு இருள் இரண்டில், மாக்கள் சிந்தையுள் சார்ந்து ...
More...More...More...More...