சங்கிலியாரின் கனவிலே சிவபெருமான் வந்து சுந்தரருடைய சிறப்புகளையெல்லாம் சொல்லி அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார். இவர் திருமணமானவர் என்று சங்கிலியார் சொல்லிக்காட்ட அவர் உன்னைப் பிரிந்து போகாத வண்ணம் உறுதிமொழி வாங்கிக்கொள். சத்தியம்…
அடியவர்களில் இறைவனுக்கு தோழர் என்ற நிலையிலே திகழ்ந்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். தம்பிரான் தோழன் என்றும் வன்தொண்டர் என்றும் போற்றப்பட்டவர் இவர். அவருக்கு சிவபெருமான் பலவகைகளிலும் ஒரு நண்பராகத் துணை நின்றிருக்கின்றனர். சுந்தரரின் புகழைக் கேள்விப்பட்ட…
அதேபோல சிவஞானம் கைவரப்பெற்று திருஞானசம்பந்தர் தேவாரம் பாடத் தொடங்கி இறைநெறியில் ஈடுபட்ட கால கட்டம் அவருடைய மூன்றாவது வயதிலிருந்து துவங்குகிறது. அப்போதே தன் துணைவியார் மதங்கசூளாமணியோடு பங்குபெற்று திருஞானசம்பந்தரின் பதிகங்களை யாழிலிட்டு வாசித்து பாடுகிற…
இன்றும் இறைநெறியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்கள் என்று இருப்பவர்களிடையே கருத்து மோதலும் யார் பெரியவர் என்கிற ஆணவப்போக்கும் ஒரு சில இடங்களில் தென்படுவதைக் காண்கிறோம். இறைவனுடைய தொண்டர்கள் என்றால் அவர்கள் ஒருவருக்கொருவர் பணிவும் பக்தியும்…
‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்’ தங்கள் அனுபவத்தில் இறைத்தன்மையை உணராதவர்கள்தான் தமக்குள்ளே சண்டையிட்டுக் கொள்வார்கள். உலகம் முழுவதும் தன் அனுபவத்தில் உணர்ந்து அவன் பெருமைகளை ஓத வேண்டும். அத்தகைய அருமைப்பாடு கொண்டவன் சிவபெருமான் என்கிறார்…
திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம் உருவாக என்ன காரணம் என்ற கேள்விக்கு சேக்கிழார் சொல்லும் விடை முக்கியமானது. “உலகில், இரண்டு வகையான இருள் உண்டு. ஒன்று, பூமியைப் போர்த்துகின்ற புற இருள். இன்னொன்று மனிதர்கள்…
‘உலகெலாம்’ என்று தொடங்குகிறது பெரியபுராணம். தமிழின் பெரும்பாலான பேரிலக்கியங்கள், ‘உலகம்’ என்ற சொல்லிலேயே தொடங்குகின்றன. “உலகம் உவப்ப” என்று தொடங்கும் திருமுருகாற்றுப் படை, தமிழர்களின் சிந்தனை உலகளாவியதாகவே இருந்திருக்கிறது என்பதன் அடையாளம். “யாதும் ஊரே”…
கண்ணனையே நினைத்து, கண்ணனில் கலந்த ஆண்டாள் இந்த உணர்வின் உச்சம் தொட்டவர். “உள்ளே யுருகி நைவேனை உளளோ இலளோ என்னாத கொள்ளை கொள்ளிக் குறும்பனை கோவர்த்தனைக் கண்டக் கால் கொள்ளும் பயன் ஒன்றில்லாத கொங்கை…
தென்றல் வந்து தீ வீசும். கண்ணன், கால மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் ஜீவநதி. கண்ணனைப் பற்றிய கர்ண பரம்பரைக் கதைகளும், பாகவதமும், மகாபாரதமும் ஏற்படுத்தி ஆழ்வார்களின் அமுத மொழிகள். திருமாலே பரம்பொருள் என்ற தங்களின் நம்பிக்கையை…
டார்வினின் பரிணாமக் கொள்கையின்படி குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்றால் அது உடலளவிலான பரிணாமத்தை மட்டுமே குறிக்குமென்றும், ஆன்மா என்று பார்க்கிற போது பசுவின் ஆன்மாவே அடுத்த பரிணாமத்தில் மனித ஆன்மாவாக மலர்கிறது என்றும், காரண…




