Blog

/Blog

ஓஷோ மரபும் மீறலும் ஜெயமோகன் உரைகளின் தொடர்ச்சியில்..

    ஓஷோ பற்றிய உரைகள் நிகழ்த்திய மற்ற இரண்டு நாட்களும் ஜெயமோகன் ஓஷோ உருவான பின்புலம் பற்றி பேசவே அதிக நேரம் அர்ப்பணித்தார். ஓஷோ புதுமையானவர்தான் ஆனால் புதியவர் அல்ல என்பதை வெவ்வேறு தரவுகளைக் கொண்டு நிறுவ முற்பட்டார். பண்டைய ரிஷிகள் வகையறாவில் ஓஷோ சேர்க்கப்படலாம் என்பதை வலியுறுத்தும் பொருட்டு அவர் தந்த விளக்கங்கள் ஏற்கத் தக்கவையாக இருந்தன. ரிஷி என்ற சொல் மெய்ப் பொருளை உணர்ந்தவர்கள் என்கிற பொருளில் மட்டுமே காலங்காலமாய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ...

ஓஷோவும் கோவில்பட்டி கடலை மிட்டாயும்(ஜெயமோகனின் முதல்நாள் உரை)

பலரையும் போலவே என் பதின் பருவத்தில் தான் ஓஷோவை வாசிக்கத் தொடங்கினேன்.ரிபெல் என்கிற புத்தகம்தான் நான் முதலில் வாசித்த ஓஷோவின் புத்தகம். ஓஷோ எழுத்துகள் ஒரு சுகமான சுழல். உள்வாங்க உள்வாங்க உற்சாகமாக உள்ளிழுத்துக் கொண்டே செல்லும். தமிழின் ஆன்மீக நூல்களில் பரிச்சயம் இருந்தால் வாசிக்க வாசிக்க புதிய திறப்புகளை ஓஷோ வழங்கிக் கொண்டே இருப்பார். 91 –92 வாக்கில் இந்த வாசிப்பின் முற்றிய மனநிலையில் முன்பின் நான் உணர்ந்திராத அனுபவத்துக்கு ஆளானேன். எங்கேனும் நடந்து போய்க்கொண்டு ...

பக்தி என்ன செய்யும்?

  இதுபோன்ற கேள்விகளுக்கு திரும்பத் திரும்ப கவியரசர் கண்ணதாசனிடமிருந்தும் எனக்கு பதில்கள் கிடைக்கும். இன்று அதிகாலை புதுக்கோட்டையில் நடை பழக்கத்துக்குக் கிளம்பி செய்துகொண்டிருந்த பனிக்கு பயந்து காப்பிக் கடை ஒன்றில் ஒதுங்கினேன். தஞ்சாவூர் கவிராயர் வர்ணிப்பதுபோல வயிற்றில் விபூதி குங்குமம் பூசி இருந்த பாய்லரும், நெற்றியில் விபூதி குங்குமம் பூசி இருந்த சரக்கு மாஸ்டரும் தங்கள் வேலைகளை தொடங்கி இருந்தார்கள். கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா என்பதுபோல கேட்டதுமே காப்பி கிடைத்தது. குவளையுடன் அமர்ந்தபோது கவியரசரின் பாடல் ...

ஜெயமோகனின் நீலம்- வாசிப்பனுபவம்

“அதோ நீல மயில் ஒன்று தோகை விரித்தாடுகிறது என்றாள் சம்பகலதை. அதோ இன்னொரு இன்று மயில்  அதோ என்று கை நீட்டிக் கூவினர் கோபியர். நதிக்கரையில் மலைச்சரிவில் மரக்கிளைகளில் அலர்ந்தெழுந்தன ஆயிரமாயிரம் பீலி விழிகள். வான்நோக்கி பிரமித்து நின்றன பித்தெழுந்த நீல பார்வைகள்”   .”நீலம்” நாவலில் ஜெயமோகன்.   வெண்முரசு நாவல் வரிசையில் கிருஷ்ணார்ப்பணமாய் மலர்ந்திருக்கும் நாவல் நீலம். ஆயிரம் ஆயிரம் மயிற் பீலிகள் கண்களாய் விரிய கண்ணனைக் கண்டது போன்ற அனுபவத்தை இந்த நாவல் ...

ஆ.மாதவன் – நிழல்விழப்பறந்த கிருஷ்ணப் பருந்து

  ஆ மாதவன் என்றதுமே நினைவுக்கு வருபவை எள்ளலும் எதார்த்தமும் கைகோர்க்கும் அவருடைய சிறுகதைகள். பூனைகளின் அட்டூழியம் மிகுந்த குடியிருப்பில் இருப்பவள் கருக்கொண்டு தனக்குள் ஒரு பூனையே ஒரு கொண்டு வளர்வதாக பேறு காலம் வரை பதைபதைத்துப் போவாள். குழந்தை பிறந்த மயக்கத்தில் இருப்பவளுக்கு” மகாலட்சுமி போல பெண் குழந்தை” என்பது “மகா லட்சணமாய் பூனைக் குழந்தை” என்று காதில் விழும். வறுமையை பொருட்படுத்தாமல் இலக்கிய நண்பரை உபசரித்து இருப்பதையெல்லாம் வைத்து ஒப்பேற்றி ஒரு வழியாய் ரயில் ...
கணக்கிலே தோற்றாள்

கணக்கிலே தோற்றாள்

மழைக்கொரு கணக்கு வைத்தாள்; முளைத்திங்கே மெல்ல மெல்லத் தழைக்கிற பயிருக்கெல்லாம் தயாபரி கணக்கு வைத்தாள்; இழைக்கொரு கணக்கு வைத்தாள்; இங்கேநான் நாளும் செய்யும் பிழைக்கொரு கணக்கு வைக்கப் பராசக்தி முயன்று தோற்றாள்;   பார்வையின் எல்லைக்குள்ளே பத்திரமாய்த்தான் வைத்தாள் ஆர்வத்தால் வினைகள் சேர்த்தால் அவள்பாவம் என்ன செய்வாள்? சேர்வதைப் பெருக்கித் தள்ளி செத்தையைக் கூட்டித் தள்ளி சோர்வுடன் நிமிர்வாள் -நானோ சேற்றினைப் பூசி நிற்பேன்   சொன்னசொல் கேளாப் பிள்ளை செல்லமாய் வளர்த்து விட்டால் என்னதான் சிரமம் என்றே என்வழி அறிந்து கொண்டாள் இன்னமும் பொறுமை காத்தே இதமாக சொல்லிப் பார்த்தே தன்வழி திருப்பப் பார்க்கும் தயையினை என்ன சொல்வேன்!   கோபத்தில் காளியாமே? கோரமாய் சிரிப்பா ளாமே? ...
More...More...More...More...