எல்லா விதைகளும் என்றோ முளைக்கும்
என்பதே ஏற்பாடு
வில்லால் தடுத்தா வீழும் காற்று….?
கல்லால் அடித்தும் கனிதரும் மரங்கள்
கற்பது உன்பாடு
நல்லார் பொல்லார் உள்ளதே உலகம்
நடையிடு துணிவோடு

உன்னொரு கனவ இன்னொரு மனிதர்
கலைத்திட முடியாது
இன்னொரு வாய்ப்பு எவருக்கும் உண்டு
ஐயம் கிடையாது
தன்னில் இருக்கும் உறுதியை வளர்த்தால்
தடைகள் தடுக்காது
இன்னும் இன்னும் என்று நடந்தால்
இதயம் களைக்காது

வித்துகள் நடுபவன் விளைச்சலின் வழியே
வெற்றியை அறிகின்றான்
எத்தனை தடுத்தும் முயல்கிற மனிதன்
இலக்கினைத் தொடுகின்றான்
புத்தக அறிவும் பட்டதன் தெளிவும்
புத்தியில் சுடராகும்
தத்துவம் என்பது தகுந்தவர் ஜெயிப்பது
இதுதான் நிஜமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *