இருளுக்குப் பின்தான் பூபாளம்!
இரண்டே சிறகுகள் இருக்கும் பறவை எதிர்த்திசைக் காற்றைக் கிழித்துவிடும்! மருண்டு தவிக்கிற மனிதா&உனது முயற்சிகள் உன்னை மலர்த்திவிடும்! வேர்பிடிக்கும்வரை தாவரமெல்லாம் வலிகள் தாங்கிப் போராடும்! யார்தான் வெற்றியை எளிதில் பெற்றது? இருளுக்குப் பின்தான் பூபாளம்! தற்காலிகம்தான் தோல்விகள் & அவற்றைத் தலைவிதி என்பது பழையகதை! குற்றாலத்து அருவியைப் போல் நீ குதித்துக் கிளம்ப ஏது தடை! சோதனை வருகிறபோதினில் தானே சூரியன் போல் நீ எழவேண்டும்! மேதினி முழுவதும் வெளிச்சம் தெளித்து முடித்த பின்னால் தான் விழ ...
பூமிப் பரப்பில் புதிய தலைமை
பூமிப் பரப்பில் புனிதத் தலைமை புறப்பட்டு வந்தது புதிதாக! சாமி எங்கள் விவேகானந்தன் சத்தியமூர்த்தி வடிவாக! விரும்பும் கடமைகள் துறந்திடச் சொல்வது வெட்டிப் பேச்சு வேதாந்தம்! இரும்பு போல் உடம்பை உரம் பெறச் சொன்னது விவேகானந்தன் சித்தாந்தம்! தோல் பந்துக்குள் மூச்சுக் காற்றெனும் தத்துவ மிரட்டல்கள் அவன் வெறுத்தான்; கால்பந்தாட்டம் கடவுளைக் காட்டும் ‘கிளர்ந்தெழு தோழா’ என உரைத்தான்! பொன்னை பொருளை அள்ளிக் குவிப்பவன் பூமியின் தலைவன் ஆவதில்லை! தன்னை வெல்லும் தகுதி இருந்தால் தலைவன் அவன் ...
ரகசியம்தான் அதிசயம்!
பார்க்க முடியா இடங்களில் எல்லாம் பாம்புச்சட்டை கிடக்கிறது; கேட்கும் குயிலிசை கண்ணுக்குத் தெரியாக் கிளையில் இருந்து பிறக்கிறது; ஊரே உறங்கிக் கிடக்கும் வேளையில் ஒவ்வொரு பொழுதும் விடிகிறது! யாரும் அறியா நொடியில் தானே எங்கோ அரும்பு மலர்கிறது! உன்னில் இருக்கும் இலட்சியம் அப்படி உருவம் பெறட்டும் தனிமையிலே! தன்னை இழைத்துத் தவம் போல் தவித்துத் தானாய் மலர்ந்திடு புதுமையிலே! நீயும் நானும் வியக்கிற படைப்புகள் நேற்று வரையில் ரகசியம்தான் ஓய்வில்லாத உழைப்பின் உச்சியில் ஒருநாள் பூத்த அதிசயம்தான்! ...
புதுக் கணக்கு
மலையைப் புரட்டும் இலட்சியத்தோடு மனிதா தொடங்கு புதுக்கணக்கு; விலையாய் உழைப்பைக் கொடுத்தால் போதும் வளைந்து கொடுக்கும் விதிக்கணக்கு; புலம்பல் ராகம் பாடுபவர்க்கு புலரும் பொழுதுகள் புதிர்க்கணக்கு; கிளம்பும் கதிர்போல் எழுந்தால் உனது கிழக்கில் தினமும் ஒளிக்கணக்கு; வாழ்வின் போக்கை விளங்கிக் கொண்டால் வரவு வைப்பாய் புகழ்க்கணக்கு; நோக்கம் எதுவென நன்றாய்த் தெரிந்தால் நிச்சயம் வெல்லும் மனக்கணக்கு; வரவு செலவாய் வெற்றி தோல்விகள் வரட்டும்; எழுது நிஜக்கணக்கு; சரியாய் எதையும் செய்து கொண்டே வா; ஒருநாள் வெல்லும் உன் ...
மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்
அங்கும் இங்கும் திரியும் பறவை ஆகாயத்தை அளப்பதென்ன? அங்குச நுனியில் அடங்கும் யானை ஆரண்யத்தை அழிப்பதென்ன? கொத்தித் தின்னும் கோழிகள் கூடக் காட்டுப் பருந்தை எதிர்ப்பதென்ன? அத்தனை வெட்டும் தாங்கும் பூமி பூகம்பத்தில் குதிப்பதென்ன? இன்னொரு முகத்தை மறைத்துக் கொண்டே எல்லாம் இங்கே இயங்கி வரும் என்றோ ஒருநாள் எல்லை மீறிட எல்லாம் நமக்கு விளங்கிவிடும்! உருவம் பார்த்து எடை போடாதே உள்ளே இருப்பது தெரியாது! திரைகள் விலகத் தெரிவது தெரியும் அதுவரை நமக்குப் புரியாது! அவரவர் ...
வசந்தப் போர்க்களம்
புலிக்குப் பிறந்தது பூனையாகலாம் புழுவின் இனத்திலும் யானை தோன்றலாம் கணக்கு மாறினால் காலம் மாறலாம் காலப் போக்கிலே எதுவும் நேரலாம் பழைய தோல்விகள் பாடமாகலாம் புதிய வெள்ளத்தில் ஓடமாகலாம் சுழல்கள் யாவுமே பழகிப் போகலாம் சிறிது தூரம்தான்! கரையில் சேரலாம்! உழைக்கும் யாருக்கும் உயர்வு உள்ளது உணர்ந்து வாழ்வதே உனக்கு நல்லது ஜெயிக்கப் பிறந்தநீ எதற்குத் துவள்வது? நெருப்பின் நடுவிலும் சிரிக்கப் பழகிடு! முயலின் கால்களின் புயலின் போர்க்குணம் மானின் கொம்பிலும் வாளின் போர்க்குணம் முயன்று பார்ப்பதே ...