Blog

/Blog
2016 நவராத்திரி – 1

2016 நவராத்திரி – 1

உன்கையில் உருவான உயிருள்ள பொம்மைகள் உன்போல பொம்மை செய்யும்; ஊர்கூடி சீர்கூடி உல்லாச கொலுவைத்து உன்பேரைப் பாடி உய்யும்; பொன்னள்ளித் தருகின்ற பூரணி! அபிராமி! பொற்பதம் பாடுகின்றோம்; புன்வினை நீக்கிடும் புண்ணியச் சந்நிதி பணிந்திடக் கூடுகின்றோம்; நன்னிலை சேரவே நல்லருள் கூடவே நவராத்ரி ஆரம்பமே! நவகோள்கள் ஆண்டிடும் நவகோண நாயகி நேர்வரும் ஆனந்தமே! இன்னமும் பிறவிகள் இல்லாமல் செய்பவள் இன்றெமைக் காக்க வருக இழையோடும் சுவாசமே ஹிருதய வாசமே! எழில்கொஞ்சம் மீனாட்சியே! ...

ஞானப்பெண்ணே

வானை அளக்கிற ஆற்றலுடன் இன்று வந்தனர் மானிடர் ஞானப்பெண்ணே – தன்னைத் தானும் அளக்கிற ஆற்றலினை -அவர் தேடிடச் சொல்லடி ஞானப்பெண்ணே! உச்ச வரம்புகள் இல்லாமலே – இன்று ஊதியம் காண்கிறார் ஞானப்பெண்ணே அச்சம் சோர்வுடன் துக்கமெல்லாம் – வந்து அண்டாமல் வாழச்சொல் ஞானப்பெண்ணே! நாடு கடக்கிற கல்விகற்றே – இன்று நாளும் பறக்கிறார் ஞானப்பெண்ணே வீடு வருகிறபோதினிலே – அவர் வேதனை கொள்வதேன் ஞானப்பெண்ணே! சற்றும் சிரமங்கள் ஏதுமின்றி – இன்று செல்வங்கள் சேர்க்கிறார் ஞானப்பெண்ணே ...

இன்னும் ஒரு தடவை

முன்னே ஒரு தடவை – உங்கள் முயற்சிகள் தோற்றிருந்தால் இன்னும் ஒரு தடவை – உங்கள் இயக்கம் தொடர்ந்திடட்டும் என்றோ விழுந்தவிதை – அதை எண்ணிக் கிடந்திருந்தால்… இன்னொரு தாவரமாய் – அது எப்படி எழுந்திருக்கும்? முன்னே ஒரு தடவை – உங்கள் மனம் கொஞ்சம் சேர்ந்திருந்தால் இன்னும் ஒரு தடவை – உங்கள் இதயம் மலர்ந்திடட்டும் என்றோ மறைந்த கதிர் – அதை எண்ணிக் கிடந்திருந்தால் இன்றைய கிழக்கினிலே – அது எப்படி உதித்திருக்கும்? முன்னே ...

துளியும் தளராதே

மலிவு விலையில் மண்ணுலகெங்கும் பகைவர்கள் கிடைப்பார்கள்! மிகவும் விரைவாய் மனிதா உன்மேல் பழிசொல்ல நினைப்பார்கள்! தலைகுனியாமல் வாழ நினைத்தால் தடைகள் படைப்பார்கள்! தாண்டி வரும்வழி தெரிந்தவர்தானே சரித்திரம் படைப்பார்கள்! ஊரின் பழிச்சொல் ஒலிக்கட்டுமே உன் உள்ளத்தைக் கேட்டுவிடு! நேர்வழி நடப்பது உண்மையென்றால் & அதில் உறுதிகள் காட்டிவிடு! யாரோ சொல்வதை பாரம் சுமந்து இதயம் நோகாதே! நாளை உன்னை நாடே போற்றும் துளியும் தளராதே! ஆற்றின் போக்கை எதிர்த்துக் கொண்டு மீன்கள் நீந்திவரும்! காற்றின் போக்கை கிழித்துக் ...

பொள்ளாச்சி “சி”ந்தையிலே

சமீப காலமாய், இலக்கியத் துறையில் புத்தெழுச்சி காண்கிறது பொள்ளாச்சி. பூபாலன், அம்சப்பரியா போன்ற கவிஞர்கள் நெறிப்படுத்தும் பொள்ளாச்சி இலக்கிய வட்டமும் இதற்குக் காரணம். மூத்த தலைமுறையில் பூத்த தமிழ்க் குறிஞ்சிகள் பலரின் தமிழ்மணத்தையும் இந்நகரம் தக்க முறையில் தக்க வைத்துள்ளது. குழந்தைகளைப் பற்றி எழுதுவதுபோல் எழுதிக் கொண்டுவந்து, “இருள்கள் வெளிச்சப்படுத்தி விடுகின்றன பெண்ணில் ஒளிந்திருக்கும் ஆண்மையையும் ஆணில் ஒளிந்திருக்கும் பெண்மையையும்” என ஓங்கியடிக்கிற கீதா பிரகாஷ் “பேரிரைச்சலுக்கு அப்பால் சென்று புதிதாய் ஓர் அண்டத்தில் என்னை விழைக்கிறேன்” ...

அ.ச.ஞா. சொற்பொழிவுக்கலை – மரபின்மைந்தன் முத்தையா

(சாகித்ய அகாதெமியும் பொள்ளாச்சி என்.ஜி.எம். கலை அறிவியற் கல்லூரியும் நிகழ்த்திய அமரர்.அ.ச.ஞானசம்பந்தன் நூற்றாண்டு நினைவுக் கருத்தரங்கில் வாசித்த கட்டுரை) தத்துவவ நுட்பங்களையும் தமிழிலக்கியங்கள் முன்மொழியும் விழுமங்களையும், காவியங்களின் கவினுறு காட்சிகளையும் சொற்பொழிவுகள் வழியே மக்கள் மத்தியில் பரவச் செய்த மூத்த முன்னோடிகளில் குறிப்பிடத்தக்கவராக விளங்கியவர், அறிஞர் அ.ச.ஞா. “பெருஞ்சொல் விளக்கனார்” என்று போற்றப்பெற்ற பேரறிஞர் அ.மு.சரவண முதலியார் அவர்களின் திருமகனாகிய அ.ச.ஞா, பிள்ளைப் பருவந்தொட்டு, தத்துவச் செறிவுமிக்க மேடைகளில் ஓடி விளையாடியவர் ஆவார். தூத்துக்குடியில் நிகழ்ந்த சைவசித்தாந்த ...
More...More...More...More...