Blog

/Blog
இணைவெளி-மரபின் மைந்தன் முத்தையாவின் 60ஆவது புத்தகம்- மலேசியாவில் வெளியீட்டுவிழா

இணைவெளி-மரபின் மைந்தன் முத்தையாவின் 60ஆவது புத்தகம்- மலேசியாவில் வெளியீட்டுவிழா

ஏன்னுடைய 60ஆவது புத்தகம் 23.05.2016 அன்று மலேசியாவில் வெளியிடப்படுகிறது. கவிதை வாழ்க்கை வரலாறு ஆன்மீகம் இலக்கியம் மொழிபெயர்ப்பு திறனாய்வு,சுய முன்னேற்றம் உட்பட பல்வேறு துறைகளில் இதுவரை 59 நூல்கள் வெளிவந்துள்ளன. 60 ஆவது புத்தகமாக ” இணைவெளி” எனும் தலைப்பில் கவிதைநூல் வெளிவருகிறது. இந்நூலில் அந்தரங்கம், பகிரங்கம், அமரத்துவம்,தெய்வீகம் ஆகிய நான்கு பகுதிகளில் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இதனை மலேசியாவில் கோலாலம்பூர் நகரில் ம.இ.கா. தலைமையகத்தில் உள்ள நேதாஜி அரங்கில் மலேசிய அரசின் இளைஞர் நலம் மற்றும் ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

அவரும் உடன்வருவார் கடவுளுக்கும் நமக்குமான உறவில் இரண்டு நிலைகள் மிகவும் முக்கியமானவை. ஒன்று உலகில் ஏற்படுகிற நிலை. இன்னொன்று அந்தரங்கமான நிலை. தனிப்பட்ட நிலையில் ஓர் உயிருக்கும் இறைவனுக்கும் இருக்கக்கூடிய நெருக்கத்தை. இந்தப் பாடலில் சொல்கிறார். எங்கெல்லாம் தாமரை இருக்கிறதோ அங்கெல்லாம் அம்பிகை இருக்கிறாள். அவளுடைய ஞானசக்தி கலைமகளாகச் செயல்படுகிறது. அவளுடைய சுபிட்ச சக்தி மகாலெஷ்மியாக இயங்குகிறது. யோக மரபில் மனித உடலில் இருக்கக்கூடிய நூற்றுக்கணக்கான சக்கரங்கள் தாமரை மலர்களாய் இருக்கின்றன. அத்தனை தாமரைகளிலும் அவள் வீற்றிருக்கிறாள். ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

மனிதன் சில கருவிகளை வைத்துக்கொண்டுதான் இயங்குகிறான். ஒன்று அவனுடைய நினைவு, இன்னொன்று அவனுடைய மொழி, நீங்கள் பிறந்ததிலிருந்து ஆயிரம் முறை அபிராமியை தரிசனம் செய்திருக்கலாம். வீட்டில் உட்கார்ந்து கற்பனை செய்தால் அந்த உருவம் முழுமையாக நமது மனதில் வருகின்ற பக்குவம் படிந்திருக்காது. நினைவுக்கு அவள் எட்டுவதில்லை. மொழியில் எவ்வளவு சொல்லமுடியும். அவளை தரிசித்தேன் எப்படி இருந்தது தெரியுமா என்று நீங்கள் ஆயிரம் பக்கங்கள் எழுதலாம். அப்போது கூட அந்த நினைவு வராது. இசைக் கச்சேரிகளில் பார்த்தால் ஓர் ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

எட்டாத அற்புதம் எளிதில் வெளிப்படும் திரும்பத் திரும்ப அம்பிகையினுடைய திருவுருவத்தை நம் மனதிலே அவர் எழுதிக் கொண்டே வருகிறார். எந்தத் திருவுவை எல்லா இடங்களிலும் அவர் காண்கிறாரோ அதைத்தான் தேவரும், மூவரும் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். தேவர்களுக்கும், மூவர்களுக்கும் தென்படாதது பக்தர்களுக்கு பளிச்சென்று தென்படுகிறது. சங்காலே செய்யப்பட்ட வளையல்களுக்கு சூடகம் என்று பெயர். அம்பிகையின் கைகள்தான் நமக்கு முதலில் தெரிகிறது. அம்மா கடைத்தெருவிற்குப் போய்விட்டு வந்தால் குழந்தை அம்மாவின் முகத்தைப் பார்க்காது. கைகளைத்தான் பார்க்கும். அம்மாவின் காலடிச் ...

நம்நாடு நம்தேர்தல்-மரபின்மைந்தன்முத்தையா

பழைய கதை..அரசாட்சியில் அன்று!! ———————————————————- அத்தனை குடிமக்களையும் ஓர் அரசர், பொதுவில் வைக்கப்பட்டிருந்த அண்டாவில் ஒரு குவளை பாலூற்றச் சொன்னாராம். “யாருக்குத் தெரியப் போகிறது என்றொரு குடிமகன் ஒரு குவளை தண்ணீரை ஊற்றினானாம். அப்படியே அனைத்து குடிமக்களும் நினைக்க அண்டா முழுவதும் தண்ணீர் மட்டுமே இருந்ததாம். புதிய கதை….குடியாட்சியில் இன்று!! ————————————————————- தேர்தல் என்னும் திறந்த பாத்திரத்தில் வாக்குகள் என்னும் பாலை வார்க்க பாரத மாதா அழைத்தாள். பலரும் சோம்பலிலோ அலட்சியத்திலோ அழைப்பை புறக்கணித்தனர். உடனே தீயவர் ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

எங்கெங்கும் அவள் காட்சி காசைக் கரியாக்குவது என்றால் அது பட்டாசு வெடிப்பதும் வாணவேடிக்கை விடுவதும் என்று சிலர் சொல்வார்கள். தெரிந்து தான் செய்கிறோம், நாம் விடும் வாணங்கள் நிலையாக ஆகாயத்தில் நட்சத்திரமாக இருக்கப் போவதும் கிடையாது. ஒரு சில விநாடிகள் ஆகாயத்திலே மின்னி மறையக்கூடிய வாண வேடிக்கையை பார்த்துவிட்டுப் பின் கண்களை மூடினால் உள்ளே அது மின்னிக்கொண்டு இருக்கிறது. அப்படியிருக்கிறபோது ஆயிரம் கோடி சூரியப் பிரகாசத்தோடு தோன்றுகிற அம்பிகையை ஆகாயத்தில் பார்த்தவர் அபிராமி பட்டர். அவளுடைய திவ்ய ...
More...More...More...More...