Blog

/Blog

திருக்கடவூர்-7

வேழம் உரிப்பர் மழுவாளர் வேள்வி அழிப்பர் சிரமறுப்பர் ஆழி அளிப்பர் அரிதனக்கன்று ஆனஞ்சு உகப்பர் அறமுரைப்பர் ஏழைத் தலைவர் கடவூரில் இறைவர் சிறுமான் மறுக்கையர் பேழைச் சடையர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே! -சுந்தரர் காலனைக் காலால் காய்ந்த காலசம்ஹாரமூர்த்தியின் திருவுருவை தரிசித்ததும் மார்க்கண்டேயருக்கு மகத்தான உண்மையொன்று மனதில் உதித்தது.காசிநகரில் கங்கைக்கரையில் மணிகர்ணிகேசுவரராக விளங்கும் மகேசனின் அம்சமே காலசம்ஹாரர் என்பதைக் கண்டுகொண்டார். தான் திருக்கடவூர் வந்த நாள்முதலாய் கங்கையிடம் வைத்த சங்கல்பமும் ,அந்த சங்கல்பத்துக்கு மதிப்பளித்து திருக்கடவூர் ...

திருக்கடவூர்-6

மூலத் துவாரத்து மூளும் ஒருவனை மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற் காலுற்றுக் காலனைக் காய்ந்தங்கி யோகமாய் ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே -திருமூலர் மனக்கவலையின் உச்சத்திலிருந்த மிருகண்டு முனிவரின் உள்ளம், தன் பாட்டனாராகிய குச்சகரை நினைத்தேங்கியது.மிருகண்டு முனிவரின் தந்தை மிருக கண்டூயர். அவருடைய தந்தைதான் குச்சகர். கடகம் எனப்படும் திருக்கடவூரில் வாழ்ந்தவர் அவர்.தன் மகனுக்கு குச்சகர் இட்டபெயரென்னவோ கௌச்சிகர்தான்.பிரம்மச்சர்யப் பருவத்தில் பிரம்மம் தேடிப் பெருந்தவம் மேற்கொண்டார் கௌச்சிகர்.ஊண் மறந்து துயில் மறந்து அசைவிலாத் தவத்திலிருந்தவரைக் கல்லென்று நினைத்து ...

திருக்கடவூர்-5

நான்கு திசைகளையும் நோக்கியிருந்த எண்கண்களும் மூடியிருக்க ஆழ்ந்த தவத்திலிருந்தான் நான்முகன்.படைப்புத் தொழிலின் கருத்தாவாய் பொறுப்பேற்ற காலந்தொட்டு பரமனிடம் ஞானோபதேசம் பெற வேண்டும் என்ற சங்கல்பம் அவனுக்கு. எது எப்படி இருந்தாலும் ஒவ்வொரு நாளும் நான்கு சந்தியா வேளைகளிலும் சிவத்தியானம் செய்ய நான்முகன் தவறுவதில்லை. படைப்புக் கடவுளாகிய தன்னை ,புலர்காலைப் பொழுதில் கதிரவனும் பொன்னந்தி நேரத்தில் சந்திரனும் பணிந்து வணங்கும் போதெல்லாம் சிவத்தியானத்திலேயே ஒன்றியிருப்பான் சதுர்முகன். தன்னை வணங்கும் சூரியனின் பேரொளியோ சந்திரனின் தண்ணொளியோ தீண்ட முடியாத தவப்பெருக்கில் ...

திருக்கடவூர்-4

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட வித்தக விநாயக விரைகழல் சரணே! -அவ்வை வாசுகி மேருவைக் கடைந்த வேகத்தைக் காட்டிலும் பலமடங்கு கூடுதலாய் தேவர்களின் உள்ளங்களை கலக்கம் கடைந்தது. அரிதின் முயன்று பெற்ற அமுதக்கலசம் அவர்களின் ஞான திருட்டிக்கும் அகப்படாத எல்லையில் இருப்பது மட்டும் தெரிந்தது. எப்போதும் போல் திருமாலின் இதழ்களில் புன்னகை தவழ்ந்தது. என்ன நடந்ததென்று அவருக்குப் புரிந்தது. அதிர்ந்து நின்ற அமரர் தலைவனை அருகே ...

திருக்கடவூர்-3

கண்ணனை மாயன் றன்னைக் கடல்கடைந் தமுதங் கொண்ட, அண்ணலை அச்சு தன்னை அனற்தனை அனந்தன் தன்மேல், நண்ணிநன்கு உறைகின் றானை ஞாலமுண் டுமிழ்ந்த மாலை, எண்ணுமா றறிய மாட்டேன், யாவையும் யவரும் தானே! -நம்மாழ்வார் ஆலகாலம் பெருகிய சுவடேயின்றி மௌனம் கொண்டிருந்த பாற்கடலின் மையத்தில், மேருவை உரசி மேலெழுந்தது பேரலை, பால்நுரைகளில் மிதந்த பதுமமலர் மேலே பொன்னிறத் திருமேனி பேரொளி வீச, மின்னற் கொடிபோலும் முத்துச் சுடர்போலும் தென்றல் நடைபோலும் தேனின் மழைபோலும் அலைமகளாம் திருமகள் அசைந்தசைந்து ...

திருக்கடவூர்-2

வெண் மணி ஆர்க்கும் விழவினன் நுண்ணூல் சிரந்தை இரட்டும் விரலன் இரண்டு உருவா ஈர் அணி பெற்ற எழிற்தகையன் ஏரும் மாறு ஏற்கும் பண்பின் மணி மிடற்றன்! வெண்ணிற வாரிதியின் கடைசலா, வாசுகியின் சீறலா என்று இனங்காணவொண்ணாப் பேரோசை எங்கும் பரந்தது. அசுரர்கள் இதழ்களில் களைப்பையும் மீறிக் குமிழ்விட்டது புன்னகை. வானிருந்து கீழிறங்கும் விழுதென்று நீண்டு கிடந்த வாசுகியின் தலைப்பகுதியை அசுரர்கள் பற்றியிருக்க அமரர்கள் வால் பகுதியைப் பற்றியிருந்தனர். வாசுகியிடமிருந்து வெளிப்பட்ட வெப்ப மூச்சினில் அசுரர்களின் கரங்களில் ...
More...More...More...More...