Blog

/Blog

திருக்கடவூர்-19

காணரிய தில்லை கடவூரை யாறுகச்சி சோணகிரி வேளூர் துவாரசக்திகோணகிரி தண்டாத காசி தலத்துவிடை பஞ்சசக்தி கண்டானெல் லன்காலிங் கன்! -திருவண்ணாமலை திருக்கோவிலில் உள்ள கல்லெழுத்துப் பாடல் திருக்கடவூர் அம்பாள் ஆலயத்தின் முன் பத்மாசனமிட்டு அமர்ந்திருந்த குழுவினர் கண்மூடி மந்திர ஜபத்தில் ஈடுபட்டிருந்தனர். செந்நிற வஸ்திரங்கள் பூண்டு, கழுத்தில் உருத்திராக்கம் அணிந்திருந்தனர். அம்பிகையை முழுமுதற் பொருளாக வழிபடும் சாக்த மார்க்கத்தினர் என்பது பார்த்தாலே புரிந்தது. அவர்களில் சிலர் சோழி மாலைகள் அணிந்திருந்தனர். சிலர் சோழி மாலைகளைக் கைகளில் வைத்து ...

திருக்கடவூர்-18

திருக்கடவூர்-18 நற்றமிழ் வரைப்பின் ஓங்கும் நாம்புகழ் திருநாடென்றும் பொற்தடந் தோளால் வையம் பொதுக்கடிந்து இனிது காக்கும் கொற்றவன் அன்பாயன் பொற் குடைநிழல் குளிர்வதென்றால் மற்றதன் பெருமை நம்பால் வரம்புற விளம்பலாமோ! -தெய்வச் சேக்கிழார் “நம்முடைய மன்னர் பெருமானின் மனங்கவர்ந்த அமைச்சராகிய அருண்மொழித்தேவர், தமிழகத்தில் வாழ்ந்து வந்த நாயன்மார்களின் வரலாற்றை திருத்தொண்டர் மாக்கதை என்று புராணமாகப் பாடியிருக்கிறாராம். நம்முடைய ஊரில் வாழ்ந்த குங்கிலியக்கலய நாயனார், காரி நாயனார் ஆகியோரைப் பற்றி அதில் விரிவாக வருகிறதாம்!” என்றார் ஒரு புலவர். ...

திருக்கடவூர்-17

நின்றபடி நின்றவர்க்கு அன்றி நிறந்தெரியான் மன்றினுள்நின் றாடல் மகிழ்ந்தானும் – சென்றுடனே எண்ணுறும்ஐம் பூதமுதல் எட்டுருவாய் நின்றானும் பெண்ணுறநின் றாடும் பிரான்! -திருக்கடவூர் உய்யவந்ததேவ நாயணார் அமுதகடேசர் சந்நிதியில் அன்று பெருங்கூட்டம் திரண்டிருந்தது. முழுநீறு பூசி உருத்திராக்கம் அணிந்து சிவச்சிந்தையராய்த் திரண்டிருந்த அடியவர்களும், இல்லற நெறியில் இருந்தபடியே இறைநெறியில் இதயம் தோய்ந்த சிவநெறிச் செல்வர்களும் ஒருங்கே திரண்டிருக்க, அவர்கள் நடுவில் கனிந்த சிவப்பழமாய், கனலும் அருட்தவமாய் வீற்றிருந்தார் ஒருவர். ஆளுடைய தேவநாயனார் என்பது, அவருடைய தீட்சாநாமம். திருவியலூர் ...

திருக்கடவூர்-16

அழிவந்த வேதத்தழிவு மாற்றி அவனி திருமகட்காக மன்னர் வழிவந்த சுங்கந் தவிர்த்த பிரான் மகன்மகன் மைந்தனை வாழ்த்தினவே செருத்தந் தரித்துக் கலிங்கரோடத் தென்தமிழ் தெய்வப் பரணிகொண்டு வருத்தந் தவிர்த்து உலகாண்டபிரான் மைந்தற்கு மைந்தனை வாழ்த்தினவே! -இரண்டாம் இராஐராஐனை வாழ்த்தும் பழங்காலப் பாடல் மாமன்னர் குலோத்துங்கச்சோழ தேவர் அரசாணையினை சிரமேற்கொண்டு செயல்படும் திருக்கடவூர் மகாசபை இன்று மாலை வேலைக் காணன் திரு மண்டபத்தில் கூடுகிறது. உறுப்பினர் அனைவரையும் வந்துசேரசொல்லி முரசறைய உத்தரவு! உத்தரவு!திருக்கடவூரின் நான்கு முக்கிய வீதிகளிலும் மடவிளாக ...

திருக்கடவூர்-15

திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலையின் கலமறுத்தருளி வேங்கைநாடும் கங்கபாடியும் தடிகைபாடியும் நுளம்ப்பாடியும் குடமலைநாடும் கொல்லமும் கலிங்கமும் முரட்டொழிற் சிங்களர் ஈழமண்டலமும் இரட்டபாடி ஏழரை யிலக்கமும் முந்நீர்ப்பழந்தீவு பனராயிரமுந் திண்திறல் வென்றித் தண்டாற்கொண்டதன் எழில்வலர் ஊழியுளெல்லா யாண்டுந் தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத் தேசுகொள்கோ ராசகேசரி வர்மரான உடையார் ராசராச தேவர்க்கு! -இராஐராஐ சோழன் மெய்க்கீர்த்தி தண்டுக்குக் கீழே தண்ணீர் குறைந்தாலும், புதுப்புனல் வந்து புகுந்தாலும் தன்னிலை மாறாத தாமரை ...

திருக்கடவூர்-14

புல்லன வாகா வகைஉல கத்துப் புணர்ந்தனவும் சொல்லின வும்நய மாக்கிச் சுடர்பொற் குவடுதனி வில்லனை வாழ்த்தி விளங்கும் கயிலைபுக் கான்என்பரால் கல்லன மாமதில் சூழ்கட வூரினிற் காரியையே! -நம்பியாண்டர் நம்பிகள் (திருத்தொண்டர் திருவந்தாதி) வீரட்டானத்து வித்தகனைத் தேடி அருளாளர்கள் திருவடி நிலந்தோய திருக்கடவூர் வந்து செல்லும் போதெல்லாம் விழாக்கோலம் பூணுந் திருக்கடவூரில் அன்றும் ஆனந்தம் அலைவீசியது. தம்பிரான் தோழராம் நாவலூர்க்கோன் திருக்கடவூருக்கு எழுந்தருளியிருக்கிறார் என்றறிந்து தாமரையை மொய்க்கும் வண்டுகளாய் தெய்வத் தமிழ் பருக திரண்டது சைவ அன்பர்கள் ...
More...More...More...More...