Blog

/Blog

திருக்கடவூர்-13

பாலனாம் மறையோன் பற்றப் பயங்கெடுத் தருளு மாற்றால் மாலுநான் முகனுங் காணா வடிவுகொண் டெதிரே வந்து காலனார் உயிர்செற் றார்க்குக் கமழ்ந்தகுங் குலியத் தூபம் சாலவே நிறைந்து விம்ம இடும்பணி தலைநின் றுள்ளார். -சேக்கிழார் திருக்கடவூர் வீதிகளெங்கும் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. வாசல்களெங்கும் மாக்கோலங்கள் மின்னின. பூரண கும்ப உபசாரங்களுடன் நெற்றி நிறைய திருநீறு பூசிய கோலத்தில் ஊரெல்லையில் மக்கள் திரண்டிருந்தனர். ஆளுடைய பிள்ளையாம் மக்கள் திரண்டிருந்தனர். ஆளுடைய அடிகளாம் திருநாவுக்கரசரும் வழிபாட்டுக்காக திருக்கடவூர் எழுந்தருளப் போவதாய் செய்தி ...

திருக்கடவூர்-12

பெரும்புலர்க் காலைமூழ்கி பித்தர்க்குப் பத்தராகி அரும்பொடு மலர்கள் கொய்து ஆங்குநல் ஆர்வத்தை உள்ளே வைத்து விரும்பிநல் விளக்குத்தூபம் விதியினால் இடவல்லார்க்கு கரும்பினில் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே! -திருநாவுக்கரசர் சதுரமறைகள் அரண்செய்யச் சூழ்ந்ததுபோல் சதுர வடிவில் நான்கு பிரதான வீதிகளுடன் அமைந்திருந்தது திருக்கடவூர். திருக்கோவிலுக்கு நேரெதிரே சந்நிதித்தெரு நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்குவதுபோல் தோற்றமளித்தது. திருக்கோவிலைச் சுற்றி உள்சதுரமாய் நான்கு வீதிகள். அவற்றுக்கு மடவிளாகங்கள் என்று பெயர். திருக்கோவிலுக்கு வலப்புறம் பிரியும் மட விளாகம் வடக்குத் தெருவில் சென்று ...

திருக்கடவூர்-11

“அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன் வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும் குரவர் பணியன்றியும் குலப்பிறப்பாட்டியோடு இரவிடைக் கழிதற்கு என்பிழைப்பு அறியாது கையறு நெஞ்சம் கடியல் வேண்டும் பொய்தீர் காட்சிப் பிழையோய் போற்றி” -சிலப்பதிகாரம் (மாதவி கோவலனுக்கு வரைந்த இரண்டாம் கடிதம்) தாதிப்பெண்கள் சூழ வயந்தமாலை திருக்கடவூர் வீதிகளில் வீடுவீடாய் ஏறி இறங்கிக் கொண்டிருந்தாள்.பண்ணியங்களும் இனிப்புகளும் விநியோகிக்கப்பட்டன.”உங்கள் மாதவிக்குப் பெண்குழந்தை பிறந்திருக்கிறது”. பெருமையும் மகிழ்ச்சியும் பொங்கப் பொங்க ஒவ்வொருவருக்கும் தனித்தனியே தகவல் தந்தாள் வயந்தமாலை. ஒவ்வொருவரும் வெளிப்படுத்திய மகிழ்ச்சியும் ...

திருக்கடவூர்-10

” இளங்கதிர் ஞாயிறு எள்ளுந் தோற்றத்து விளங்கொளி மேனி விரிசடையாட்டி பொன்திகழ் நெடுவரை உச்சித் தோன்றித் தென்திசை பெயர்ந்தவித் தீவத் தெய்வதம் சாகைச் சம்பு தன்கீழ் நின்று மாநில மடந்தைக்கு வருந்துயர் கேட்டு வெந்திறல் அரக்கர்க்கு வெம்பகை நோற்ற சம்பு என்பாள்-சம்பாபதியினள்” – சீத்தலைச் சாத்தனார் (மணிமேகலை) சம்பாபதித் தெய்வத்தின் திருமுன்னர் கண்கள்மூடி கைகூப்பி நின்றிருந்தான் அந்த இளைஞன்.இருபத்தோரு வயதிருக்கும். முகப்பொலிவு செல்வப் பின்புலத்தையும் முகத்தெளிவு கலையுள்ளத்தையும் காட்டின. காவிரிப்பூம்பட்டினத்தின் தலைசிறந்த தரைவழி வணிகர் மாசாத்துவானின் மகன் ...

திருக்கடவூர்-9

“சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை” – சிலப்பதிகாரம் கடற்காற்றின் குளுமை சதிராடிக் கொண்டிருந்த இளங்காலைப் பொழுதில் திருக்கடவூர் வீதிகளில் கோலமிடத் தொடங்கியது கதிரொளி.வீதிகளெங்கும் மாவிலைகளும் தோரணங்களும் ஒளிபட்டு மின்ன, இன்றென்ன கொண்டாட்டம் என்றறியும் ஆவலில்,தன் தேரை விரைந்து செலுத்தி வந்து நோக்கினான் வெய்யிலோன். சித்திராபதியின் மனையிலிருந்து மெல்லென்றொலித்தன இசைக்கருவிகள்.குழலிசையும் யாழிசையும் இழைந்திருக்க ஒத்தபடி மத்தளமும் அதிர்ந்திருக்க,குடமுழா, இடக்கை கூடி ஒலிக்க நடந்து கொண்டிருந்தது நடன ஒத்திகை. பக்கத்து மனைகளில் தாயர்கள் பிள்ளைகளைத் ...

திருக்கடவூர்-8

ஆமடா குகையொன்று உள்ளே போகும் ஆயிரம்பேர் சித்தரப்பா அதிலிருப்பார் வாமடா காலாங்கி ஐயர் நின்று வல்லவொரு கற்பமெல்லாம் அங்கே தின்றார் ஓமடா எந்தனுக்கும் கற்பம் ஈந்தார் உயர்ந்தவொரு தயிலமெல்லாம் அங்கே ஈந்தார்! -போகர் (போகர் ஜெனன சாகரம்) ஆகாயத்திலிருந்து காணும்போது தாமரைபோல் தோன்றுவதால் அந்த மலைக்குக் கஞ்சமலை என்று பெயர்.சித்தர்களுக்கும் யோகிகளுக்கும் உகப்பான திருத்தலம். நீராடப் போயிருந்த குருநாதருக்காக வேகவேகமாய் சோறு சமைத்துக் கொண்டிருந்தார் அந்த சீடர். நடுத்தர வயதிருக்கும். நேரம் நெருங்கிவிட்டதென்ற பதட்டம். அன்னையும் தந்தையும் ...
More...More...More...More...