Blog

/Blog

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

என்ன செயல் செய்தாலும் மனதில் ஒரு நிறைவு இருக்க வேண்டும். ஒரு தொழில் செய்தாலும், சமையல் செய்தாலும், வாசலில் ஒரு கோலம் போட்டாலும் நிறைவு இருக்க வேண்டும். ஆனால் வாழ்க்கையின் உச்சகட்டமான நிறைவு எது என்றால் அம்பிகை வழிபாடு. அம்பிகையைத் தொடர்ந்து வழிபடுவதால் ஏற்படும் நிறைவு எத்தகையது என உணர்த்துவது இந்தப் பாடல். பாடல், உடையானை என்று தொடங்குகிறது. அவள் தான் உடையவள் நாமெல்லாம் உடைமைகள், எப்போதுமே உடையவர்களுக்குத்தான் உடமைகள் மீதான கவனம் இருந்துகொண்டே இருக்கும். சராசரியாக ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

பிறவா வரம் பெறுங்கள்! இன்றைக்கு நாம் கோவிலுக்குப் போகிறோம் என்றால் பூஜைக்குத் தேவையான எல்லாமே உடனடியாக கிடைக்கிறது. கோவில் வாசலிலேயே அர்ச்சனைத் தட்டு கிடைக்கிறது. முன்பே கட்டிவைத்த பூமாலை காத்திருக்கிறது. ஏன் புதுப்பூ கொண்டு வரவில்லையென்று கடவுள் நம்மிடம் கேட்கப்போவதும் இல்லை. கேட்டால் நாம் பதில் சொல்லப் போவதுமில்லை. வழிபாட்டில் மிகவும் முக்கியமான அம்சம் சிரத்தை. சிரத்தையுடன் செய்கிற பக்தியில் உருக்கமும் நெகிழ்ச்சியும் பெருக்கெடுக்கும். “விரவும் புதுமலர் இட்டுநின்பாத விரைக்கமலம் இரவும் பகலும் இறைஞ்சவல்லார்” சிரத்தையுடன் புதிய ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

மறக்கவும் முடியுமோ? அபிராமி சமயம் என்றால் என்ன என்று விளக்கத்தைத் தருகிற பாடல் இது. இன்றைக்கும் உங்களுக்கு ஒரு பொம்மை தேவைபடுகிறதா. ஒரு பாடம் தேவைப்படுகிறதா.ஒரு உருவம் தேவைப்படுகிறதா, எல்லா இடத்திலும் இறைவனை தரிசிக்கிற பக்குவம் உங்களுக்கு வர வில்லையா என்று உருவ வழிபாடு செய்பவர்களைப் பார்த்து சிலர் பேசுவார்கள். சக்கரங்களாகிய தாமரை மலரில் வீற்றிருக்ககூடிய அபிராமி தேவியே, நான் உலகத்தில் எந்தப் பிரபஞ்சத்தைப் பார்த்தாலும் நான் பார்த்துக் கொண்டிருப்பது அம்பிகையின் திருவுருவம். அவளுடைய ஜடா மகுடத்தினை ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

அடுத்த பாடலில் மறுபடியும் ஊரைப் பார்த்து பிரகடனம் செய்வது போல் சொல்கிறார். என்னைப்போய் துர்தேவதை வழிபாட்டில் ஈடுபடுவன் என்று சொல்லி விட்டீர்களே, என்னைப் போய் வாமாச்சாரம் செய்பவன் என்று சொல்லிவிட்டீர்களே. சின்னச் சின்ன தெய்வங்களை நான் வணங்குகிறேன் என்று சொல்லிவிட்டீர்களே, இப்போது தெரிகிறதா? நீங்கள் சொல்லும் சின்ன தெய்வங்களெல்லாம் அவளுக்கு ஏவல் செய்பவர்கள். நான் அவளுடைய பிள்ளை பார்த்துச் சொல்லாமல் அம்பிகையைப் பார்த்தே விண்ணப்பிக்கிறார். சிலரை வெளிப்படையாகப் பார்த்தால் வஞ்சகர் என்று தெரியாது. ஆனால் நமக்கு தவபலம் ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

காட்டுவித்தவள் அவளே நம் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சின்னச் சின்ன சம்பவங்கள் அவள் நமக்குத் துணையிருக்கிறாள் என்று காண்பிக்கும். அது போதுமா நமக்கு? அவள் எவ்விதத்தில் இருக்கிறாளோ அவளை அந்தவிதமாகவே காணவேண்டும் என்கிற ஆவல்தான் எல்லா பக்தர்களுக்கும் வரும். அதைக் காண்பதற்கான தகுதியையும் அவள்தான் தருகிறாள். மாமா மச்சான் என்று பழகிக்கொண்டிருந்த அர்ஜுனனுக்கு விஸ்வரூபம் காட்டுகிறபோது அதற்குரிய கண்களை அருளுகிறார் கிருஷ்ண பரமாத்மா. அம்பிகையை உள்ளவண்ணம் அறிந்து கொள்கிற தகுதியையும் அவளே தருகிறாள். அவளுடைய திருவுருவத்தை இதயத்திலே பதிப்பது, ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

வஞ்சகர் கூட்டு வேண்டாம் அதுவரை தன்மேல் இருந்த பழிச் சொற்களுக்கு மறைமுகமாக பதில் சொல்லி வந்த பட்டர் இந்த இடத்தில் நேரடியாகச் சொல்கிறார். அவரை எல்லோரும் வாமபாக வழிபாடு செய்பவர். வாமார்த்தத்திலே ஈடுபடுபவர். துர்தேவதைகளை கும்பிடுபவர் என்று சொன்னார்கள். இந்த விநாடியில் அவர் சொல்கிறார். உனது கண்களைப் பார்க்கும்போது உனக்கும் எனக்கும் இருக்கிற உறவு தெரிகிறது. தாயே உன் விழியால் உன் அருளை நீ சொரிகிறாய். ஆனால் என்னுடைய வழிபாட்டு நெறியை நீ பார்ப்பாயேயானால் உனக்கு வேதம் ...
More...More...More...More...