Blog

/Blog

திருக்கடவூர்-25

கோகனக மலர்மாதிருவர் அருளுடையார் பொறையுடையார் கேகனக சபைப்பிள்ளை எனும் பேருடையார் மதுர வாக்கார்! -பிச்சைக்கட்டளை ஆஸ்தான புலவர் நாராயணசாமி செட்டியார் வடக்கு வீதியிலிருந்து சந்நிதித் தெரு நோக்கி வரிசையாய் சில பெட்ரோமாக்ஸ் விளக்குகள் வருவது தெரிந்தது. வேட்டியும் முண்டாசும் மட்டும் அணிந்த ஆகிருதியான ஆட்கள் அவற்றைத் தாங்கி வந்து கொண்டிருந்தார்கள். அரைக்கை பனியனும் மடித்துக் கட்டிய வேட்டியுமாய் இருவர் பின்தொடர நடுநாயகமாய் கோயில் நோக்கி சென்று கொண்டிருந்தார் கனகசபைப்பிள்ளை. பிச்சைப்பிள்ளை நிறுவிய பிச்சைக் கட்டளையின் அதிபர். ஆனால் ...

திருக்கடவூர்-24

“கைப்போது கொண்டுன் முகப்போது தன்னில் கணப்போதும் அர்ச்சிக் கிலேன்; கண்போதி னாலுன் முகப்போது தன்னை யான் கண்டு தரிசனை புரிகிலேன்; முப்போதில் ஒருபோதும் என்மனப் போதிலே முன்னி உன் ஆலயத்தின் முன்போது வார்தமது பின்போத நினைகிலேன்; மோசமே போய் உழன்றேன்; மைப்போத கத்தின் நிகரெனப் போதும்எரு மைக்கடா மீதேறி யே மாகோர காலன் வரும்போது தமியேன் மனங்கலங் கித்தி மயங்கும் அப்போது வந்துன் அருட்போது தந்தருள் ஆதிகட வூரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! ...

திருக்கடவூர்-23

கலையாத கல்வியும் குறையாத வயதுமொரு கபடு வாராத நட்பும் கன்றாத வளமையும் குன்றாத இளமையும் சலியாத மனமும்அன் பகலாத மனைவியும் தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும் தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு துன்பமில் லாத வாழ்வும் துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய அலையாழி அறிதுயில்கொள் மாயனது தங்கையேல் செய்! ஆதிகட வூரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி; அருள்வாமி; அபிராமியே! -அபிராமி பட்டர் (அபிராமியம்மை பதிகம்) பலகையில் ...

திருக்கடவூர்-22

சின்னஞ்சிறிய மருங்கினில் சார்த்திய செய்யபட்டும் பென்னம்பெரிய முலையும் முத்தாரமும் பிச்சிமொய்த்த கன்னங்கரிய குழலும் கண்மூன்றும் கருத்தில்வைத்துத் தன்னந்தனி யிருப்பார்க்கு இதுபோலும் ஒரு தவமில்லையே! -அபிராமி பட்டர் அபிராமி சந்நிதியில் தனியொருவராய் முதுகு நிமிர்த்தி அமர்ந்திருந்த சுப்பிரமணியன் அசைவற்றிருந்தார். கைகள் மேல்முகமாய் விரிந்த நிலையில் துடைகள் மீதிருந்தன. உள்ளங்கைகளின் மேல் அதீதமான சக்தியின் மெல்லிய அழுத்தத்தை உணர்ந்தார். தன்னிரு கரங்கள்மீதும் சிற்றாடை உடுத்திய சின்னஞ் சிறுமியின் பாதங்கள் ஜதி சொல்லி அசைவது போல் தோன்றியது. சற்றே நிமிர்ந்திருந்தது. நெற்றிக்கு ...

திருக்கடவூர்-21

தானே எழுந்தஇத் தத்துவ நாயகி வானேர் எழுந்து மதியை விளக்கினள் தேனார் எழுகின்ற தீபத்து ஒளியுடன் மானே நடமுடை மன்றறி யீரே! -திருமந்திரம் “ஏன் ஓய்! இந்த ஸ்வார்ஷ் பாதிரியார் நம் சரபோஜி மன்னருக்கு அனுகூலரா? சத்துருவா? அல்லது அனுகூல சத்துருவா?” சட்டநாதக் குருக்கள் கேட்ட கேள்வி அப்பு குருக்களுக்குப் புரியவில்லை. “ஏன் கேட்கிறீர்?” என்றார். “கும்பினி அரசாங்கத்திடம் போராடி இவரை பாதிரியார் மன்னராக்கினாரே, இப்போது மகாராஜாவுடன் கும்பினி அரசாங்கமே நேரடியாக ஆட்சி செய்யுமாம். ஐயாயிரத்து அறுபத்தியிரண்டு ...

திருக்கடவூர்-20

திருக்கடவூர்-20 தன்னை அறியார் தலைவன் தனையறியார் முன்னை வினையின் முடிவறியார் – பின்னைக் குருக்களென்றும் பேரிட்டுக் கொள்ளுவர்கள் ஐயோ தெருக்கள் தனிலே சிலர்! -ஸ்ரீ குருஞானசம்பந்தர் (சிவபோகசாரம்) திருக்கடவூர்க்காரர்களின் வாழ்வை இயக்கும் ஆதார மையங்களே உழுவதும் தொழுவதும்தான். ஊரின் நடுநாயகமாய் விளங்கிய திருக்கோயில் ஒவ்வொருவரின் அன்றாட வாழ்விலும் புகுந்து ஊடாடியது. வீதி நடுலே நிற்கும் பசுவைத் தொட்டுக் கொண்டும் வருடிக்கொண்டும் செல்பவர்களைப் போல் அமுதகடேசரையும் அபிராமியையும் சார்ந்தே வாழ்ந்த வாழ்க்கை அமைதியாகவும் ஆனந்தமாகவும் இருந்தது. முப்போக விளைச்சல் ...
More...More...More...More...