Blog

/Blog

மீனாட்சி வெண்பா அந்தாதி

வைர வடிவழகே வண்ணக் கலையழகே மைவிழி பூத்த மலரழகே-பைரவி மாடக்கூ டல்நகரின் மாதங்கி மீனாட்சி பாடத் தருவாய் பதம் பதந்தருவாய் தேவீ! பழக இனந் தந்து நிதந்தருவாய் நூறு நலன்கள்-இதந்தருவாய் ஆலவாய் ஆளும் அழகியே மீனாட்சி மூலக் கனல்தூண்ட முந்து முந்து நகைமழையும் மூக்குத்தி வெய்யிலும் அந்தியில் ஆதவன் ஆக்குமே-சுந்தரி! வண்ணத் திருவடியில் வைத்தவிழி மாறாமல் எண்ணம்போல் வாழ்வைநீ ஈ. ஈகை உனக்கழகு;என்தாயே நீவழங்கும் வாகை எனக்கழகாய் வாய்க்காதோ-தேகமெனும் புல்லாங் குழல்துளைகள் பொங்கும் அருள்ஸ்வரங்கள் எல்லாமும் நீயாய் ...
புலியைத் தின்ற பசு

புலியைத் தின்ற பசு

இந்தத் தலைப்பைப் பார்த்ததும் ஏதோ உருவகக் கட்டுரை என்று நினைத்துவிடாதீர்கள். பலம்பொருந்திய ஒரு மனிதரை சாதுவான மனிதர் தேர்கடித்ததைப் பற்றி என்று கருதி விடாதீர்கள். நான் சொல்வது நான்கு கால்கள் கொண்ட பசுவைத்தான். இப்போது புலியா புளியா என்று குழம்புவீர்களே.. தெரியும். புலிதான் சுவாமி. புளியல்ல. இது எங்கோ காட்டு வழியில் நடந்தாலும் கூட எப்போதோ நடக்கும் அதிசயம் என்று விட்டுவிடலாம். பெருநகரம் ஒன்றில், காலைவேளையில், என் நடைப்பயிற்சியின் போது நான் பார்த்த காட்சி. எனவேதான் பூசி ...
கண்ணதாசன் -எந்த ஆலயத்து மணியோ!

கண்ணதாசன் -எந்த ஆலயத்து மணியோ!

54 வயது வரை உலக வாழ்வு. கவிதை, கட்டுரை,திரைப்பாடல்,புதினம்,பத்திரிகைகள் அரசியல்,ஆன்மீகம் என எத்தனையோ தளங்களில் அசகாய முத்திரை. வாசிப்பு வளர்ந்து எழுத்தாகி, அனுபவம் பழுத்து கருத்தாகி, அமர எழுத்துகளாய் ஒளிவீசச் செய்த உன்னதப் படைப்பாளி,கவியரசு கண்ணதாசன். திறந்த ஏடாய் விரிந்த வாழ்வில் கண்ணீரும் வியர்வையும் கலந்து காலம் அழிக்க முடியாத விதமாய் கவிதை வரிகளை வடித்த அமரத்துவம் அவருடைய எழுத்துகளின் மகத்துவம்.. நான்கு வரிகளை வாசித்தாலும், அவரின் பாடல் வரிகளை யோசித்தாலும் வாழ்வின் பாதையில் பளீரென்று பாயும் ...

பின்னுரையாய் என்னுரை

சில ஆயிரம் பேர்களே வசிக்கும் சின்னஞ்சிறிய கிராமம்தான் திருக்கடவூர். அதனுள் பொதிந்து கிடக்கும் புராணப் பின்புலமும் அங்கு நிகழ்ந்த சம்பவங்களுக்குக் கிடைக்கும் சான்றாதாரங்களும், அந்த மண்ணில் நின்று அருளாளர்கள் இசைத்த அற்புதமான பாடல்களும் அந்தச் சிறிய கிராமத்தை பண்பாட்டின் களஞ்சியமாய் ஆக்கின. பூமியின் மார்பில் புதைந்த காலச்சுவடுகளில் பல, காலச்சுவடுகளாய் ஆன கதைதான் திருக்கடவூரின் கதை. திருக்கடவூர் அபிராமியம்மை ஆலயத்தின் பரம்பரை அறங்காவலரின் பெயரனாகப் பிறந்தபோதே இந்நூலை எழுதும் பணி எனக்கு விதிக்கப்பட்டிருக்கும் என்று திண்ணமாக எண்ணுகிறேன். ...

திருக்கடவூர்-27

திருக்கடவூர் பிள்ளையெனப் பெயர்பெற்றவர் – துன்பம் தீர்ப்பதிலே கர்ணனென வளம் பெற்றவர்! திருக்கடைக்கண் அபிராமி அருள்பெற்றவர் – இன்று திருக்கயிலை நாதனிடம் இடம் பெற்றவர்! -அருளிசைக்கவிமணி.சொ.அரியநாயகம் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் திருமுகத்தில் சிந்தனை ரேகைகள் ஓடின. பூம்புகார் பண்பாட்டுக் கல்லூரி நிர்வாகத்தில் தன்னுடைய உழுவலன்பர் கே.கனகசபைப் பிள்ளையுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. ஒருவருக்கொருவர் பேசித் தீர்வு காணும் ஒத்திசைவு நிலையையும் தாண்டி கருத்து பேதங்கள் வலுத்தன. அடிகளாரை தலைவராகக் கொண்ட தெய்வீகப் பேரவை அரசின் அங்கீகாரம் ...
More...More...More...More...