Blog

/Blog

புதிய கணம்

  சிறகுகள் இருந்தும் என்னபயன் – அந்த சேவல்பறக்க மறந்துவிட்டால் உறவுகள் இருந்தும் என்னபயன் – உன் உணர்வுகள் மதிக்க மறந்துவிட்டால் பிறவி எடுத்தும் என்னபயன் – நீ பயனுற வாழ மறந்துவிட்டால் மறதி இருந்தும் என்னபயன் – நீ மனதில் குப்பைகள் சுமந்திருந்தால் வந்ததன் நோக்கம் உன்னுள்ளே – நீ வேட்டை நடத்திக் கண்டுபிடி எந்திர தினங்களை நடத்தாமல் – நீ எழுதினம் புதுமைகள் செய்தபடி முந்தைய தோல்விகள் மறந்துவிடு – நீ முயற்சியில் புதிதாய்ப் ...

வெற்றி சேரும்

நாற்றுகளின் தலைகலைத்து நடக்கும் தென்றல் நாளைகளின் மெல்லரும்பை சீண்டிப் பார்க்கும் கீற்றுகளைக் கொட்டுகிற முழுவெண் திங்கள் குளத்திலுள்ள அல்லிகளை சீண்டிப் பார்க்கும் நேற்றுகளின் நினைவுகளோ இன்று வந்து நிகழ்கணத்தை மெதுவாக சீண்டிப் பார்க்கும் ஊற்றெடுக்கும் உன்சக்தி என்னவென்றே உருவாகும் சவால்களெல்லாம் சீண்டிப் பார்க்கும் தன்போக்கில் நடக்கின்ற நதிக்குக் கூட தடைகள்தான் உந்துசக்தி யாகும் இங்கே உன்போக்கில் வாழ்வதென்று நினைத்தால் கூட உலகத்தின் போக்குன்ன உந்தித் தள்ளும் மின்போக்கில் போகுமொளி போலே நீயும் முன்னேனேற்றப் பாதையிலே மோகம் கொண்டால் ...
ஈஷா யோக மையம் -சில விளக்கங்கள்

ஈஷா யோக மையம் -சில விளக்கங்கள்

ஆதங்கத்திலும் ஆற்றாமையிலும் வெளிப்படுத்தும் வருத்தங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது.ஆனால் அந்த வீச்சிலேயே அபத்தங்களும் அபாண்டங்களும் புகார்ப்பட்டியலில் இடம் பெறும் போது உள்நோக்கம் குறித்த சந்தேகம் எழுகிறது. ஈஷா யோக மையத்தில் தங்கள் மகள்கள் சந்நியாசம் பூண்டது பற்றி புகார் கொடுத்திருக்கும் தம்பதியர் அடுக்கியிருக்கும் குற்றச்சாட்டுகளில்,தங்கள் குழந்தைகள் தங்களுடன் இல்லையே என்னும் ஆதங்கமும் ஆற்றாமையும் நீங்கலாய் எதிலும் உண்மை இல்லை. ” தங்களின் இரண்டு மகள்களை விட5000 குழந்தைகளைக் காக்க வேண்டும்.அவர்களின் சிறுநீரகங்களைத் திருடுகிறார்கள்” என்கிறார். உணர்ச்சி மேலீட்டில் ...

நடையிடு துணிவோடு

எல்லா விதைகளும் என்றோ முளைக்கும் என்பதே ஏற்பாடு வில்லால் தடுத்தா வீழும் காற்று….? கல்லால் அடித்தும் கனிதரும் மரங்கள் கற்பது உன்பாடு நல்லார் பொல்லார் உள்ளதே உலகம் நடையிடு துணிவோடு உன்னொரு கனவ இன்னொரு மனிதர் கலைத்திட முடியாது இன்னொரு வாய்ப்பு எவருக்கும் உண்டு ஐயம் கிடையாது தன்னில் இருக்கும் உறுதியை வளர்த்தால் தடைகள் தடுக்காது இன்னும் இன்னும் என்று நடந்தால் இதயம் களைக்காது வித்துகள் நடுபவன் விளைச்சலின் வழியே வெற்றியை அறிகின்றான் எத்தனை தடுத்தும் முயல்கிற ...

நம்பிக்கை ஜொலிக்கட்டும்

நித்தம் செய்கிற வேலைகள்தான் – அதில் நிதானம் கலந்தால் தவமாகும் புத்தம் புதியது விடிகாலை -அதில் புதுநடையிட்டால் நலமாகும் பித்து மனதின் பெருங்கவலை – ஒரு புன்னகை மருந்தில் குணமாகும் எத்தனை செல்வம் இருந்தென்ன – அட ஏழைக்குதவுதல் வளமாகும் வாழும் வாழ்க்கை பொதுவாகும் – அதில் வசந்தமும் கோடையும் நம்திறமை சூழும் வாய்ப்புகள் பொதுவாகும் – அதில் சொர்க்கம் படைப்பது நம்பொறுமை தாழ்வுகள் உயர்வுகள் வரும்போகும் – மனம் தளரா திருப்பது நம்முரிமை தோழமை பகைமை ...

வாக்களிக்க வாருங்கள்

வாசல்தேடிக் கும்பிடுவோர் விரல்கள் பாருங்கள் – அவர் விரல்களிலே என்ன கறை என்று தேடுங்கள் பேசும்பேச்சில் உண்மையுண்டா என்று கேளுங்கள் – ஒரு புதுவெளிச்சம் வரும்சுவடு தன்னைத் தேடுங்கள் ஆட்டம்காணும் ஆட்சியிங்கு தேவையில்லையே – வெறும் ஆள்பிடிக்கும் உத்திக்குநாம் அடிமையில்லையே ஓட்டு வாங்கி மறப்பவரை ஓடச் செய்யுங்கள் – நல்ல உயர்ந்த மாற்றம் தருபவரை ஆளச் செய்யுங்கள் கொள்கைகளை அடகுவைக்கும் கட்சிகள்வேண்டாம் – வெறும் கோஷ்டிகளை வளர்த்துவிடும் கட்சிகள் வேண்டாம் உள்ளபடி நல்லபடி ஆள்பவர் யாரோ – ...
More...More...More...More...