Blog

/Blog

நாளும் இங்கே நிகழ்த்திவிடு

உள்ளங்கால்கள் வலித்தால் கூட ஓய்வு கொள்ள நேரமில்லை வெள்ளம் போலக் கனவுகள் வந்தும் வடிகால் மறந்தால் வாழ்க்கையில்லை முள்ளும் மலரும் நிறைந்தது பாதை மயங்கி நின்றால் பயணமில்லை தள்ளிப் போட்டால் தேங்கிப் போகும் தொடர்ந்து முயன்றால் தோல்வியில்லை முடியா தென்னும் முனகல் குரலை முளைக்கும் போதே நசுக்கிவிடு கிடையாதென்றவை கிடைக்கும் இந்த கணக்கின் சூட்சுமம் கையிலெடு தடையாய் தெரிந்த தயக்கம் எல்லாம் தொட்டால் நொறுங்கும் தெளிந்துவிடு நடையாய் நடந்தோ கிடையாய் கிடந்தோ நாலும் இங்கே நிகழ்த்திவிடு தன்னால் ...

முளைக்கும்

“வானில் ஒருவன் விதைவிதைத்தால் வயலில் அதுவந்து முளைத்திடுமா?” ஏனோ இப்படி ஒரு கேள்வி எழுந்தது ஒருவன் மனதினிலே ஞானி ஒருவர் முன்னிலையை நாடிச் சென்றே அவன் கேட்டான் தேனாய் சிரித்த பெரியவரோ தெளிவாய்ச் சொன்னார். “முளைக்கும்” என்று வீசிய விதைக்கு உரமிருந்தால் வீசும் காற்றும் துணையிருந்தால் ஓசையின்றி அந்த விதை ஒரு வயல் தன்னைச் சேர்ந்துவிடும் ஆசைப்படுவது என் உரிமை அதற்கென உழைப்பது உன் கடமை பேசும் வார்த்தைக்கு வலியுண்டு பொலிவுடை சொற்களே பேசிடுவாய் எண்ணம் சொல் ...

பழகும் அழகுகள்

காற்றில் ஏறும் குளிரழகு காலை வானத்தின் நிறமழகு நேற்றைய வாழ்வின் வலியழகு நாளையின் நம்பிக்கை ஒளியழகு வெய்யில் பருகும் குளமழகு வியர்வை பருகும் நிலமழகு வையம் வழங்கும் வாய்ப்பழகு வெல்லும் நேரத்தில் பணிவழகு நீரில் அலையும் கயலழகு நீளும் பாதையின் வளைவழகு நேரில் சவால்கள் நல்லழகு நேர்மையின் வெற்றி நிலையழகு பார்த்தன் வில்லின் கணையழகு பாரதி மீசையின் முனையழகு மூத்தவர் அனுபவச் சொல்லழகு முயற்சியின் தீவிரம் மிக அழகு ...

அடைந்துவிடு

தூவிய விதையில் வான்மழையின துளிகள் படுவது யாராலே ஏவிய கணைகள் இலக்குதனை எட்டி விடுவதும் எதனாலே மேவிய ஒழுங்குகள் எத்தனையோ மேதினி இயக்கத்தை ஆள்கிறது ஆவல் வளர்க்கும் விந்தையிது ஆண்டுகள் பலவாய் தொடர்கிறது! யாரோ முயற்சி தொடங்குகையிலே எவரோ துணையாய் வருகின்றார் ஊரோ உலகோ அறியு முன்னே உதவிக்கு அந்நியர் எழுகின்றார் சீராய் முயற்சி முன்னெடுத்தால் சரியாய் பாதை அமைந்துவிடும் நேராய் கடவுள் தெரிவதில்லை நடப்பவை அவர்துணை காட்டிவிடும் வீணாய்த் தயங்கிக் கிடக்காதே விருப்பம் நோக்கி நடைபோடு ...

களத்தின் சூட்சுமம்

எனக்குள் இருக்கிற நிர்வாகி எழுந்து பார்க்கிற நேரத்தில் கணக்குகள் நிரல்கள் திட்டங்கள் கண்ணைக் கட்டும் காலத்தில் தனக்குள் திட்டம் பலதீட்டி தாளில் கணினியில் அதைக்காட்டி கனக்கும் இமைகள் கசக்குகையில் களத்தின் சூட்சுமம் விரிகிறது, கேடயம் கவசம் துணையின்றி கத்தியை எடுப்பது வீரமல்ல பாடம் இதிலே புரிகிறது புதிதாய் வியூகம் அமைகிறது மூடிக் கிடக்கும் திசைதிறந்து முன்னே முன்னே நடைநடந்து தேடலைத் தொடர்தல் வாழ்வென்னும் திடமும் அதிலே வளர்கிறது, சீறும் அலைகள் சவால்களெனில் செய்யும் தொழிலே ஒருபடகு மாறும் ...

இன்று

இன்று முளைத்தது இன்று.. இதன் கன்றாய் துளிர்விடும் நாளை…. அன்றே முடிந்தது அன்று-அதன் அச்சம் சுமப்பவன் கோழை நன்றே நிகழ்ந்தது வாழ்வு – இந்த நிலையே தொடரட்டும் நாளை என்றே தொடருக யாவும் – இந்த எண்ணம் இறைவனின் லீலை ஒவ்வொரு நிமிடமும் வைரம் – அதை உணர்பவர் தொடுவார் உயரம் செவ்விய செயல்களின் சேர்க்கை – ஒன்று சேர்த்தால் அமைவதே வாழ்க்கை கருதிடும் கனவுகள் உண்டு – அவை கைவர வேண்டும் நன்று உறுதியை நெஞ்சினில் ...
More...More...More...More...