Blog

/Blog

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

திருவடி வைக்க இடம் கொடுங்கள் அம்பிகை யார் தெரியுமா? ஒளி வீசக் கூடிய நிலாவை தன்னுடைய சடை முடியில் அணிந்திருக்கிற, பவளக்குன்று போல் தோன்றுகிற சிவபெருமானின் திருமேனியிலே படருகின்ற பச்சைக்கொடி, மணம் பொருந்திய கொடி. அம்பிகையினுடைய திருமேனியிலே குங்கும வாசனை வருகிறது என்று முதல் பாடலில் சொன்னார். அந்தக் குங்குமத்தின் நறுமணம் கமழக்கூடிய பசுங்கொடி போல் அம்பிகை இருக்கிறாள். அந்த அம்பிகையை மனதில் பதித்துக் கொள் என்கிறார் பட்டர். மனிதனுடைய இயல்பு அவனுக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

எங்கும் இருப்பவள் அவளே! இருத்தல் என்கிற நிலையைத் தாண்டி வாழுதல் என்ற நிலைக்கு நாம் வரவேண்டுமென்றால் அதற்கு ஒரு மார்கம் வேண்டும். வெறும் இருப்பை, வெறும் பிறப்பை அர்த்தமிக்க, ஆனந்தமிக்க வாழ்வாக மாற்றிக் கொடுப்பவள் அம்பிகை. எனவே அவளுடைய திருவடிகளை வணங்குவது என்ற நியமத்தை மேற்கொண்டதன் மூலமாக நாம் வாழத் தொடங்குகிறோம். பள்ளிக்கூடத்தில் ஒரு பிள்ளையை சேர்த்தால் அது வீட்டிற்கு வந்து ஒரு பிரம்பை எடுத்துக்கொண்டு நமக்கெல்லாம் பாடம் நடத்தத் தொடங்கும். ஓர் ஆசிரியர் உட்கார்ந்து போதிப்பதையும், ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

வெறுக்கவும் செய்வாளோ? ஒருவரை ஆட்கொள்ள வேண்டுமென்று முடிவு செய்துவிட்டால் அவர் என்ன தவறு செய்தாலும் மன்னித்துக்கொண்டே இருப்பாள் அம்பிகை. ராமகிருஷ்ணரிடத்தில் வந்தவர்களிலேயே மிகவும் முரட்டுத்தனமாக எதிர்கேள்விகள் கேட்டு நடந்து கொண்டவர் நரேந்திரர். ஆனால் எல்லோரை விடவும் நரேந்திரர்மேல் தனி அக்கறையும், அன்பும் காட்டி அவர் கேட்கிற எல்லாக் கேள்விகளையும் பொறுத்துப் போனார் பரமஹம்சர். சீடர்கள் யாரும் கேட்கத் துணியாத கேள்விகளையெல்லாம் நரேந்திரர் கேட்டார்.”உள்ளபடியே நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டார். ஒரு குருவைப் பார்த்து இப்படிக் கேட்டால் ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

கண்டு செய்வது சரியா? தவறா? தெய்வ மார்க்கத்திலே ஈடுபடுகிறபோது சிலருக்கு உயர்ந்த ஞானநிலை சித்திக்கும். அந்தப் பிறவி எடுக்கும்போது அந்த விழிப்பு தானாகவே உள்ளே தோன்றும். தோன்கிற போது அவர்கள் தன்போக்கிலே திரிந்து கொண்டிருப்பார்கள். சித்தன் போக்கு சிவன் போக்கு என்பார்கள். இன்றைக்கு வகை தொகையில்லாமல் திரிபவர்களுக்கெல்லாம் அந்த வார்த்தையைச் சொல்கிறோம். ஒரு சித்தன் எந்தப் போக்கிலே போகிறானோ அதுதான் சிவனுடைய போக்கு. அவனுக்கு நியமங்கள் கிடையாது. வழிமுறைகள் கிடையாது. தவங்கள் கிடையாது. சேஷாத்ரி சுவாமிகள் திருவண்ணாமலையில் ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

சிவபெருமானின் செம்பாகத்தில் இருப்பவள் என்று அம்பிகையைச் சொன்னாலும் அம்பிகை சிவபெருமானுக்கு அன்னையாகவும் இருக்கிறாள் என்கிறார் அபிராமி பட்டர். தத்துவ அடிப்படையில் சக்திதான் சிவத்தை ஈனும் என்ற சிவஞானசித்தியார் குறித்து ஏற்கெனவே சிந்தித்தோம். காந்தியடிகள் ஒரு நிகழ்ச்சிக்கு தன் மனைவியுடன் சென்றார். வரவேற்புரை நிகழ்த்தியவர் காந்தியடிகள் தன் மனைவியுடன் வந்திருக்கிறார் என்று சொல்வதற்குப் பதிலாக தன் தாயுடன் வந்திருக்கிறார் என்று சொல்லி விட்டார். காந்தியடிகள் பேசும்போது,”வரவேற்புரையாளர் தன்னையும் அறியாமல் ஓர் உண்மையை சொல்லியிருக்கிறார். கஸ்தூரிபா பலநேரங்களில் எனக்கு அன்னையாகவும் ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

இருப்பதை உணர்த்துவாள் அம்பிகையின் திருவுருவை படிப்பவர் மனங்களில் பதிக்கும் விதமாக அந்தாதியின் இந்தப் பகுதி அமைகிறது. வேதங்களே சிலம்பாக ஒலிக்கும் திருவடிகளைக் கொண்டவள். கைகளில் ஐந்து மலர்க்கணைகள் கொண்டவள். இனிய சொற்களைச் சொல்லும் திரிபுரசுந்தரி செவ்வண்ணத் திருமேனி கொண்டவள். தீமை செய்த அரக்கர்கள் அஞ்சும் விதமாக கைகளில் மேருவை வில்லாக ஏந்தும் தழல் வண்ணராகிய சிவபெருமானின் செம்பாகத்தில் குடி கொண்டிருப்பவள் என்பது இந்தப் பாடல் தருகிற வர்ணனை. வேதங்களே அவளுக்கு சிலம்பு. சில இடங்களில் குறிப்பாக ஸ்ரீ ...
More...More...More...More...