Blog

/Blog

பஞ்சபூதங்களும் ஒரு பறவையும்-2 (சக்திஜோதி கவிதைகளை முன்வைத்து..)

 மெல்லிய வடிவழகும் அதனினும் மெல்லிய இயல்புகளும் கொண்டவளாய் காட்டப்படும் சங்க இலக்கியத் தலைவியரின் குரல், கனமானது. குழைவையும் கனிவையும் தாண்டிய கம்பீரம் ஒளிர்வது. இறைஞ்சுதலாய்,ஏங்குதலாய் ஒலிக்கும் அதே குரல் நுண்ணுணர்வின் உச்சப் பொழுதுகளில் காட்டும் கணநேர விசுவரூபங்களை சங்கப் புலவர்களின் சூரியத் தூரிகைகள் கனல் சித்திரங்களாய் தீட்டிச் செல்வதுண்டு.அவளே அறியாத அவளின் பெற்றிமைமீது ஒளிபாய்ச்சும் சங்கச் செவ்வியை சக்திஜோதியின் கவிதைகளில் காணலாம். இங்கு சக்திஜோதி காட்டும் பெண் தன் காதலுக்குத் தூது செல்ல பிரபஞ்சத்தையே இறைஞ்சுகிறாள். “எவ்விதமாயும் ...

பஞ்சபூதங்களும் ஒரு பறவையும் -1 (சக்திஜோதி கவிதைகளை முன்வைத்து..)

                            ஐவகை நிலங்களை ஆழ உழுது பெயர்த்தெடுத்த கிழங்குகளை ஐம்பூதங்களுக்கும் படையலிடும் விதமாய் வேர்மணம் வீசும் கவிதைகள், சக்தி ஜோதியின் கவிதைகள். மண்மணம்,பண்மணம், பெண்மணம் ஆகியமூன்று சொற்களின் எல்லைகள் கடலாய் விரிய அவற்றிடையே இந்தக் கவிதைகள் தூய வெண்சங்காய்த் துலங்குகின்றன. தமிழின் பண்ணியல்புகள் பழகி வரும் சொற்கள் கொண்டு, பெண் மனதின் நுண்ணியல்புகள் காட்டி அதன்வழியே இந்த மண்ணின் நெடுமரபை அறிய வாய்க்கும் விதமாய் கவிதைகள் மலர்வது மிகவும் அரிது. அந்த வகையில் சக்திஜோதியின் கவிதைகள் ...

கருப்பாயி என்றால்….

கருப்பாயி என்றால் கறுப்பென்றா அர்த்தம்? கருப்பையிலே கொண்டாள் ககனம்- சிரிப்பாலே மின்னல் உருவாக்கி மேக மெனப் பொழிவாள் பின்னலிட்ட பிச்சியைப் பற்று கோடை வருங்கால் குளிர்மழையும் ஆவாளே மேடை வருங்கால் மனம்நிறைவாள் -ஜாடையில் எந்தவொரு பெண்ணும் இவளோ எனும்படிக்கு வந்துநிற்கும் பெண்ணை வழுத்து கண்கள் விடுகதையாம் கால்களோ காவியமாம் வண்ணச் சிறுகதையாம் வஞ்சியிடை-எண்ணிலொரு நாவல் பழநிறத்து நாயகியாம் சாமளையாள் காவலென்று வந்த கனிவு தின்னும் கனிக்குள்ளே தேவி விதைவைத்தாள் சின்ன மழலைக்குள் சொல்வைத்தாள்- கன்னியவள் உன்னில் எதைவைத்தாள்? ...

இவன் ஆதியோகி ..இவன் ஆதியோகி….

(நான்கைந்து நாட்களுக்கு முன் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினர் அழைத்தனர். ஆதியோகியாம் சிவனின் முரண் இயல்புகளை வர்ணிக்கும் பாடலடொன்றை எழுதித் தரக் கேட்டனர். திருமதி ஜெயஶ்ரீ அவர்கள் மஹாசிவராத்திரியில் இசைத்த அந்தப் பாடல்…இதுதான்) இருளோடு ஜோதி… ஒளிவீசும் நீதி எழில்மங்கை பாதி… இவன் ஆதியோகி நடமாட சுடலை.. பொடிபூசும் மேனி உடனாட கணங்கள்… இவன் ஆதிஞானி சடையோடு புனலாம்… கரமேந்தும் அனலாம் சிரம்மீது நிலவாம்… விழிமூன்றும் வெய்யிலாம் பொன்போல மேனி …திருநீல கண்டம் பொன்கூரை வீடு …கையில்திரு ...

திருமாலும் பழஞ்சோறும்

அமெரிக்கா வாழ் அறிஞரும் ஆய்வாளருமான திரு.நா.கணேசன் திருமாலுக்கும் பழைய சோற்றுக்கும் உள்ள சிலேடைச்சிந்தனைகளை புதுப்பித்தார். சோறு என்றால் முக்தி என்றொரு பொருளும் உள்ளது நினைவுக்கு வந்தது. அந்த அடிப்படையில் இந்த வெண்பாக்களை எழுதினேன் மாவடு ஊறவே மாவலி சென்னியில் சேவடி வைத்தவன், சேர்த்துப்பு-மேவாத பாற்கடலில் ஊறும் பழையனவன், முக்தியாம் சோற்றுக் குதவுவனோ சொல் சாதம் பழையதொக்கும் சாரங்கா-வல்வினையின் சேதம் பழையதடா சீர்மிக்க -பாதம் பலதோஷம் தீர்க்கும் பழையதே யன்றோ ஜலதோஷம் இல்லாத ஶ்ரீ கொண்டதோ குள்ளவுரு கேட்டதோ ...
More...More...More...More...