Blog

/Blog

நூதனமாய் ஒரு நூற்றாண்டு விழா

பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டிருந்த அந்த விழாப் பந்தலின் முன்வரிசையில், புன்னகை மாறாத முகத்துடன்,வருபவர்களை வணங்கிக் கொண்டும்,வணங்குபவர்களை வாழ்த்திக் கொண்டும் இருந்தார் அந்தப் பெரியவர்.அவருடைய பிறந்தநாளை அர்த்தமுடன் கொண்டாடும் விதமாக,அவர்தம் குடுபத்தினர் ராயவரம் சு.கதி.காந்தி மேனிலைப்பள்ளிக்குஒன்றரை கோடிரூபாய்கள் மதிப்பில் கட்டிடங்கள் கட்டிக் கொடுத்திருந்தார்கள்அந்தக் கட்டிடங்களின் திறப்புவிழா நிகழ்ச்சி அது..அந்தப் பெரியவரின் பெயர் திரு. எம்ஏஎம்.சுப.பழனியப்பச் செட்டியார்.அவர் வயது 100  ! யாருடைய உதவியுமின்றி நிற்பதும் நடப்பதும் கூட ஆச்சரியமில்லை.மிகுந்த தெளிவும் நுணுக்கமும் தேவைப்படும் பங்கு வர்த்தகத்தில் இன்றளவும் அவர் உற்சாகத்துடன் ...

சென்னை புத்தகக் கண்காட்சி

சென்னை புத்தகக் கண்காட்சியில் நமது நம்பிக்கை மாத இதழ், முந்தைய இதழ்களின் தொகுப்புகள்,சந்தா செலுத்தும் வசதியுடன் ஸ்டால் எண் 24 & 25ல் உள்ளன. என் புத்தகங்களும் கிடைக்கும்.விஜயா பதிப்பகம் மற்றும் ஈஷா ஸ்டால்களில் என் புத்தகங்கள் கிடைக்கும் ...

அழுதால்…?

தகுதிகளைச் சொல்லித்தான் பதவிகளையோ சலுகைகளையோ பெறமுடியும்.மணமகள் தேவை விளம்பரங்களில் கூட மாப்பிள்ளையின் மெய்கீர்த்திகளைப் பட்டியலிட்டால்தான் கல்யாண யோகம் கைகூடுகிறது. ஆனால் தன் தகுதியின்மைகளைப் பட்டியலிடுகிறார் மாணிக்கவாசகர். அவருக்கு சிவபெருமான் வேண்டுமாம். “யானே பொய், என் நெஞ்சும் பொய்,என் அன்பும் பொய்” (இத்தனை தகுதியின்மைகளை வைத்துக் கொண்டு எந்த நம்பிக்கையில் சிவனைப் பெற சிந்திக்கிறேன் தெரியுமா) “ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே” என்கிறார் மாணிக்கவாசகர். திருமுறைச் செல்வர். மு.கணபதி அவர்கள் அருகில் ஒரு கூட்டத்தில் அமர்ந்திருந்தேன்.அவர் திருமுறைகளில் ...

வ.உ.சி. வாழ்வில் இரண்டுமுறை விளையாடிய காந்தி

தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் வ.உ.சி.க்காக அனுப்பிய பணத்தை தன்னிடமே வைத்திருந்து “அந்தப் பணத்தை நான் அனுப்பிவிட்டேனா”என்று வ.உ.சிக்கே 21.04.1915 ல் கடிதம் எழுதிய காந்தி,20.01.1916 வரை தொடர்ந்து கடிதம் எழுதிய பிறகு 347 ரூபாய் 12 அணாவை காந்திக்கு அனுப்பினார் என்பது பழைய கதை. அதற்குப் பிறகு வ.உ.சி.சிறையிலிருந்த காலத்தில் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்து வந்த வேதியன் பிள்ளையும் அவரின் சகலை  தண்டபாணிப் பிள்ளையும் 1912ல் ஐயாயிரம் ரூபாய்கள் வசூலித்து இந்தியா திரும்பியதும் வ.உ.சி.யிடம் தரும்படி காந்தியிடம் தந்தனுப்பினார்கள். 1920 ...

எல்லாம் அவனே

பொன்னிநதி தீரத்தில் புறப்பட்ட கங்கையென புனிதத்தின் அலைவீசி வந்தான் அன்புநதி கடலாகி ஆர்ப்பரிக்கும் விதமாக ஆனந்த அலையிங்கு தந்தான் துன்பநதி நடுவினிலே தூசாகி அலைபவர்க்கு திருவடிகள் படகாக்கித் தந்தான் இன்பநதி சிவமாக இருகரையே தவமாக “இதிலிருநீ மீனாக” என்றான் கண்ணீரின் சுகவெள்ளம் கங்குகரை காணாமல் கன்னத்தில் வழிந்தோடச் செய்தான் மண்ணெங்கும் உலவுகிற மூலிகைத்தேன் காற்றாக மனிதர்க்கு இதம்செய்ய வந்தான் விண்ணென்ற ஒன்றைநாம் வாழ்கின்ற வையத்தில் விரித்திடவே வழிசொல்லித் தந்தான் வண்ணங்கள் கதைபேசும் வானவில்லின் முதுகேறி வானுக்கும் புதுசேதி ...

முதன்முதலாய் காசி போன போது…3

“கங்கையிரு கரையுடையான் கணக்கிறந்த நாவாயான்” என்று குகனை அறிமுகப்படுத்துவார் கம்பர்.இன்றும் கங்கைக்கரையில் கணக்கில்லாத நாவாய்கள் நிற்கின்றன.படகுக்காரர்களும் வேட்டைக்காரர்கள் போல் வாடிக்கையாளர்களைக் குறிவைத்துக் காத்திருக்கிறார்கள் .இரண்டு மணிநேரப் படகுப்பயணத்திற்கு 250 ரூபாய் என்று பேசிப் படகேறினோம் .கங்கைக்கரையிலிருந்து நதிக்குள் படகு புகுமுகத்தில் போக்குவரத்து நெரிசல்.படகின் கயிறவிழ்த்த கையோடு முட்டிக் கொண்டு நிற்கும் பத்துப் பதினைந்து படகுகளைக் கைகளால் தள்ளிக்கொண்டே படகோட்டி கங்கைக்குள் பிரவேசம் நிகழ்த்தினார்.ஒவ்வொரு படித்துரைக்கும் “காட்” என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.உடன் வந்த நண்பர்கள் காட் கதைகள் கேட்கக் காதுகளைத் தீட்டிக் காத்திருக்க மனம் கங்கைக்குள் இறங்கியிருந்தது.ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்ப் பிரவாகத்தில் இருக்கும் நீர்த்தடத்தில் இறங்கியிருப்பது ,தொடர் பிறவிகளின் ஆன்மப் பயணத்தில் ஒரு மைல்கல் என்று பட்டது.  இரவு ...
More...More...More...More...