Blog

/Blog
கண்ணதாசன் – ஆதார சுருதி

கண்ணதாசன் – ஆதார சுருதி

    எவ்வளவு பெரிய சங்கீதக் கலைஞராக இருந்தாலும் அவர்கள் சின்னதாய் ஒரு ராகத்தை முணுமுணுக்க விழைந்தாலும் அதற்கு உடனே சுருதி தேடுவார்கள். ஆரோகணம் அவரோகணம் எல்லாவற்றிலும் ஆல வட்டம் போடும் ஆற்றல் இருந்தாலும் கூட ஆதார சுருதி இன்றி அவர்களுக்கு அணுவும் அசையாது.   மறைந்து 39 ஆண்டுகள் ஆனபிறகும் கூட கவியரசர் கண்ணதாசன் இவ்வளவு தூரம் கொண்டாடப்படுவதற்கு காரணம் அவர் நம் வாழ்வின் ஆதார சுருதியாய் அமைந்ததுதான்.   காதல் -குடும்பம் –துரோகம்- உயர்வு- ...

கவியரசர் நினைவுநாள்

கலையானவன் -நீ – நிலையானவன் கவிவாணர் தமக்குள்ளே தலையாயவன் சிலையாவன் -தமிழ் -மலையானவன் சிந்தைக்குள் தினம் வீசும் அலையானவன்   காற்றானவன் – நீ – காற்றானவன் காற்றோடு கலக்கின்ற பாட்டானவன் நேற்றானவன் -நீ இன்றானவன் நிலையாகப் பெருகிவரும் ஊற்றானவன்   இசையானவன் – நீ- இசையானவன் என்றைக்கும் யாம்செல்லும் திசையானவன் விசையானவன் -உந்து விசையானவன் விம்முகிற கண்களிலே கசிவானவன்   நதியானவன் – ஜீவ – நதியானவன் விதிகூட விழுங்காத மதியானவன் கதியானவன் – எங்கள்- ...
பாரதியாரின் நண்பர் மகன் கோவையில் வாழ்கிறார்

பாரதியாரின் நண்பர் மகன் கோவையில் வாழ்கிறார்

கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் வீட்டுமனை குடியிருப்பு ஒன்றில் சில ஆண்டுகள் முன் ஒரு வில்லா வாங்கியிருந்தேன் .வார இறுதிகளில் அங்கு செல்வது வழக்கம். அக்கம்பக்கத்தவர்கள் அன்பானவர்கள். அவர்களுக்கு அக்டோபர் மாத நமது நம்பிக்கை இதழை அன்பளிப்பாக வழங்கினேன். நடைப்பயிற்சி முடிந்து வருகையில் ஒரு வீட்டிலிருந்து பெரியவர் ஒருவர் வந்தார்.பலமுறை பார்த்திருக்கிறேன். பார்க்கும் போதெல்லாம் பரஸ்பரம் வணக்கமும் புன்னகையும் பரிமாறிக் கொள்வோம். “ஒரு நிமிஷம்” என்றபடியே வந்தவர் கைகளில் நமது நம்பிக்கை இதழின் ஒரு பக்கம் மடித்து ...
நவராத்திரி கவிதைகள் 10

நவராத்திரி கவிதைகள் 10

நவராத்திரி கவிதைகள் 10 (7/10/19) (06.10.2019அன்று சென்னையில் நிகழ்ந்த “முப்பெருந் தேவியர்” எனும் தலைப்பிலான கவியரங்கில் தலைமையேற்றுப் பாடிய கவிதை) பட்டாக இருள்போர்த்து பராசக்தி நடக்கின்ற பண்டிகைதான் நவராத்திரி பக்கத்தில் கலைமகளும் அலைமகளும் கைகோர்த்து பவனிவரும் சுபராத்திரி எட்டாத உயரங்கள் எட்டிடவே செய்கின்ற ஏகாந்த நவராத்திரி எந்திரத்தில் மந்திரத்தில் தந்திரத்தில் விக்ரஹத்தில் ஏந்திழையாள் வரும்ராத்திரி கட்டான குழலோடு பொட்டோடு மலரோடு கற்பகத்தாள் வரும்ராத்திரி கயிலையிந்த மயிலையென கபாலிவந்து அமர்கின்ற குளக்கரையின் அருள்ராத்திரி எட்டடுக்கு மாளிகைக்கும் ஏழைகளின் குடிசைக்கும் ...
More...More...More...More...