Blog

/Blog

பிறவி வாசனை!

(14.04.2019 அன்று கோவையில் “வாசனைகளால் ஆனது வாழ்வு “எனும் பொதுத்தலைப்பில் நிகழ்ந்த கவியரங்கில் பிறவி வாசனை எனும் தலைப்பில் வாசித்த கவிதை. தலைமை: பொற்கிழிக் கவிஞர் சொ.சொ.மீ.சுந்தரம் ) மண்ணனுப்பும் வாசனையோ முகிலுக்காக மலர்களது வாசனையோ வண்டுக்காக கொண்டுவந்த பழையபல வாசனைகள் கடந்தகாலம் எண்ணுகிற நினைவுக்காக பண்டுபல பிறவிகளாய் வந்து வந்து பூட்டிவைத்த வாசனைகள் எதற்கோ என்றால் உண்டாக்கி வரும்பிறவி வேரறுத்து உயிர்கரைந்து போகின்ற முக்திக்காக எத்தனையோ பிறவிகளை எடுத்ததுண்டு ஏதேதோ வடிவெடுத்து வந்ததுண்டு இத்தனைபேர் அரங்கினிலே ...
“ஈஷா உள்ளே வெளியே”

“ஈஷா உள்ளே வெளியே”

 “ஈஷா  உள்ளே வெளியே” என்ற இந்த நூல் ஈஷாவைப் பற்றிய விளக்கங்களை தரும் நூல் மட்டுமல்ல.மனிதன் தான் அகரீதியான உணர்வுகளை எவ்வாறு உணர்ந்து இறைவழி அதை அனுஷ்டிக்க வேண்டும் என்பதை விவரிக்கும் ஒரு வேத நூலாகவே இந்நூல் விளங்குகிறது. இங்கு அறியப்படும் ஒரே ஆற்றல் அது பேறாற்றலான ஆதிசிவன் மட்டுமே.இதை ஒவ்வொரு வரிகளிலும் நாம் உணரும் வண்ணம் , ஆசிரியர் எழுதியிருப்பது அவர் ஞானத்தை வெளிப்படுத்தும் ஞானசாரமாகவே இந்நூல் திகழ்கிறது. “ஈஷா” எப்படி உயிரின் ஆற்றலை அறிவியலோடு ...
தமிழ்ப்பேராயம் வழங்கும் மகாகவி

தமிழ்ப்பேராயம் வழங்கும் மகாகவி

                                                             பாரதியார் விருது பெறுகிறேன்   எஸ்ஆர்எம் குழுமங்கள் நிறுவியுள்ள தமிழ்ப்பேராயம் வழங்கும் மகாகவி பாரதியார் விருதுக்கு நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன் எனும் தகவலை அறிந்து அகம் மிக மகிழ்கிறேன். நான் பார்த்து வியக்கும் படைப்பாளிகள் ...

ஆனந்த கீதனுக்கு அஞ்சலி

              என் பள்ளிப் பருவத்தில் என்னினும் சற்றே மூத்த சிலர் கல்லூரி மாணவர்களாக இருந்த வண்ணம் தமிழ் மேடைகளில் புதியன பலவும் செய்தார்கள். அத்தகைய குழுக்கள் கோவையில் வளர்ந்தன. அரசு பரமேசுவரன் தென்றல்ராஜேந்திரன், உமா மகேசுவரி, போன்றோர் உருவாக்கிய கலைத்தேர் இலக்கிய இயக்கத்தில் நான் இணைந்தேன். அதே காலகட்டத்தில் கோவை என்.ஜி.ஜி.ஓ காலனி பகுதியில் உருவான அமைப்பு இளமை இலக்கியக் கழகம். அவைநாயகன் காளிதாஸ் பி.பி. ஆனந்த் போன்றோர் ...

எதை தேர்வு செய்வீர்கள்?

குழந்தைகள் பெற்றோரிடம் தங்கள் தேவைகளை பட்டியலிடுவது பழக்கம். அன்று தொடங்கியது இந்த வழக்கம். மனிதனின் தேவைகள் எப்போதும் தீர்வதேயில்லை. தேவைகளை தீர்மானிக்க ஆர்வம் அடிப்படை. ஒரு குழந்தையை இனிப்புக் கடையில் விட்டால் ஆர்வம் காரணமாய், தீர்மானிப்பதற்குள் தடுமாறிப் போகிறது. அதேநேரம் அந்த இனிப்புகளை தின்னத் தொடங்கி திகட்டினாலோ, விட்டால் போதும் என்று தோன்றுகிறது. காலப்போக்கில் அந்த கடைக்கு போனதைக்கூட அந்த குழந்தை மறந்துவிடக் கூடும். ஆனால் மனிதனைப் பொறுத்தவரை ஆர்வத்தின் அடிப்படையில் எழுகிற தேவைகளும் தேடல்களும் நிர்ப்பந்தங்கள் ...

முனைவர் த ராஜாராம்

            மடி நிறைய தானியங்களுடன், விதைக்கும் விருப்பமுடன் கழனிக்கு வருபவர்கள் தான் எல்லோரும் .   அவர்கள் விரும்பிய விதமாய் விதை விதைத்து எண்ணம் போலவே பயிர் வளர்த்து விதமாய் மகசூல் காண்பவர்கள் எத்தனை பேர்? மேற்கொண்ட பணியை மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் செய்து முடித்தோம் என்னும் நிறைவு கொண்டவர்கள்  எத்தனை பேர்? இந்தக் கேள்விகளுடன்தான் கலைஞர்களும் இலக்கியவாதிகளும் தரும் பங்களிப்பை நாம் எடைபோட வேண்டியிருக்கிறது.   உயர்ந்த ரசனையும் ...
More...More...More...More...