Blog

/Blog

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

நினைவிலே நிறுத்து! ஒவ்வொருவருக்கும் மேனியில் பதியும் சில தழும்புகள் அவர்கள் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிற அடையாளங்களாக இருக்கும். மலேசியாவில் மத்திய அமைச்சர் பொறுப்பில் இருக்கும் தேர்ந்த இலக்கியவாதி, அன்புச் சகோதரர் டத்தோ.எம்.சரவணன் தன் கன்னங்களில் இருக்கும் தழும்புகளைக் காட்டி,”இவை அரசியல் தழும்பல்ல. ஆன்மீகத் தழும்பு” என்று மகிழ்ச்சியுடன் சொல்வார். பத்துமலை முருகன் கோவிலுக்கு கன்னங்களில் வேல்குத்தி காவடி எடுத்ததில் ஏற்பட்ட தழும்புகளையே அப்படிக் கூறிகிறார். சிவபெருமானின் பக்தனான இராவணன் வீரத்தில் தலைசிறந்தவன். அவன் வீழ்ந்து கிடந்த போது ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

சொன்னதைச் செய்பவள் மலர் என்றாலே தாமரை. மாமலர் என்றால் பெரிய தாமரை. அதுவும் பனி படர்ந்திருக்கிறது. பனி பொருந்திய குளிர்ந்த திருவடித்தாமரைகளை வைக்க அம்பிகைக்கு எவ்வளவோ இடங்கள் உண்டு. அவள் திருவடிகளை தன் தலைமேல் தாங்குவதற்கு திருமால் தவமிருக்கிறார். சிவபெருமான் காத்திருக்கிறார். நான்கு வேதங்களும் திருவடிகள் பதியாதா என்று ஏங்கிப்போய் பார்க்கின்றன. இவற்றையெல்லாம் தாண்டி நாற்ற மெடுக்கிற என் நாய்த் தலையின் மேல் உன் திருவடிகளை வைக்கிறாயே. அம்மா, நீ எவ்வளவு பெரிய கருணைக்கரசி என்று பட்டர் ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

தாமரைக்காடு அம்பிகையை தாமரைத் தோட்டமாக தரிசிக்கிற பாடல் இது. அருணம் என்றால் சூரியன், சூரியனைப் பார்த்து மலரக்கூடியது தாமரை. அந்தத் தாமரையிலும் நம் சித்தமாகிய தாமரையிலும் அவள் அமர்ந்திருக்கிறாள். அம்பிகையினுடைய தன பாரங்கள் தாமரை மொக்குகளைப் போல் இருக்கின்றன. அவளுடைய கண்களும் தாமரைப் பூக்களாக இருக்கின்றது. முகமும் தாமரைப் பூவாக இருக்கின்றன. கைகளும் தாமரைப் பூக்களாகத் தோன்றுகின்றன. பாதங்களும் தாமரைப் பூக்களாகத் தோன்றுகின்றன. பேரழகின் திருவடிவை நீங்கள் தவிர்க்கவே முடியாது. இராமன் கணை பட்டு வாலி விழுந்து ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

பொய்யும் மெய்யும் பாடவோ? என்றுமே மிகவும் உயர்ந்த விஷயங்களை பார்த்தவர்கள், கேட்டவர்கள், அனுபவித்தவர்களுக்கு சராசரி விஷயங்களில் ஈடுபாடு இல்லாமல் போகும். அம்பிகை எப்பேர்ப்பட்டவள் என்கிற அற்புதத்தில் அபிராமி பட்டரின் மனம் லயிக்கிறது. இரண்டே இரண்டு நாழி நெல் கொடுக்கிறார், சிவபெருமான். இதை வைத்துக் கொண்டு உயிர்களைக் காப்பாற்று என்று கொடுக்கிறார். அதை வைத்துக் கொண்டு அண்டமெல்லாம் உய்ய அறம் செய்கிறாள். தாய்மார்களிடம் இந்தக் குணம் இருக்கும். கணவர் எவ்வளவு குறைவாக சம்பாதித்தாலும் அதை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்துவது ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

அவளை அறிந்த இருவர் சக்தி தத்துவம் முதலில் எல்லா சக்திகளின் விஸ்தீரணங்களையும் தனக்குள்ளே அடக்கிக் கொண்டு ஒரு பெரும் அரும்பாக இருந்தது. அது மடல் விரிந்தபோது எப்படி அரும்பு விரிந்த மாத்திரத்திலே வாசனை எல்லாப் பக்கமும் பரவுகிறதோ அதுபோல் இந்தப் பிரபஞ்சம் என்கிற அற்புதம் நிகழ்ந்தது. தனக்குள்ளே அடக்கி வைத்திருந்த முழுப் பிரபஞ்சத்தை தன் மலர்ச்சியினாலே அம்பிகை வெளிப்படுத்துகிறாள். ஒரு கருவிற்குள் குழந்தை இருக்கிறது. நீங்கள் ஸ்கேன் செய்து பார்த்தால் ஓர் உருவம் மாதிரி தெரிகிறது. ஏதும் ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

அவளுக்கு ஆவதென்ன? ஆயிரம் மின்னல்கள் கூடி ஒரு திருமேனி கொண்டது போல் தோன்கிறாள் அபிராமி. நம் அகம் மகிழும்படியான ஆனந்தவல்லி அவர் எனும் பொருள்பட, “மின்னாயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குன்றது தன்னாள் அகமகிழ் ஆனந்தவல்லி” என்கிறார் அபிராமி பட்டர். அவனை நாம் வணங்குவதால் ஏதும் பயனுண்டா என்ற கேள்விக்கு அபிராமி பட்டர் இந்தப் பாடலில் பதில் சொல்கிறார். விரலில் மோதிரம் போடுகிறோம். நம் விரலில் இருப்பதால் அந்த மோதிரத்திற்கு ஏதாவது பெருமை உண்டா? யார் விரல்களில் மோதிரம் ...
More...More...More...More...