அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
உலகத்திலேயே ரொம்பக் கொடுமை என்ன வென்றால் தனக்கு ஒருவன் உதவமாட்டான் என்று தெரிந்தும் முயன்று பார்ப்போமே என்று போய் உதவி கேட்பதுதான் பெரிய கொடுமை. தான் வறுமை நிலையில் இருப்பதை வாய்திறந்து கேட்பது கொடுமை. பிச்சைக்காரனுக்குக்கூட வீட்டிலிருக்கும் பழையதைப் போட்டு விடுவார்கள். கடன்காரனுக்கு நாளைக்கு வா என்று சொல்லுவார்கள். கடன் கேட்டு வருபவனக்கும், பிச்சை கேட்டு வருபவனுக்கும் அதுதான் வித்தியாசம். அந்தக் காலத்தில் நிறையப் புலவர்களுக்கு இது போல்போய் பாட்டுப் பாடுவதுதான் வேலை. வீடு வீடாகப் போய் ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
இதயத்தில் எழுதிப்பார் எது தியானமென்று அபிராமி பட்டரைக் கேட்டால் அவர் நான் ஒரு தோற்றத்தை வரிக்கிறேன். அதை நீ மனதில் பதித்துகொள் என்கிறார். “இந்தத் தோற்றம் கோவில் கருவறையில் இருக்கிறது. அந்த அம்பிகைக்கு நல்ல சிகப்புப்பட்டு சார்த்தியிருக்கிறார்கள். அவளுடைய தன பாரங்களுக்கு நடுவில் பெரிய முத்து மாலையை அவள் அணிந்திருக்கிறாள். கருகருவென்று அலை போன்ற அவளுடைய கூந்தல், மூன்று கண்கள், இந்தத் தோற்றத்தை நீ மனதில் வைத்துக்கொண்டு ஓர் ஓரமாக அபிராமி அபிராமி என்று உட்கார்ந்திருந்தால் இதைவிடப் ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
ஓர் ஆசிரமத்தின் பீடாதிபதியுடன் மருதமலை திருக்குடமுழுக்கின்போது பேசிக்கொண்டிருந்தேன். உங்களுக்கு திருக்கடையூர் தானே என்று கேட்டவர், “இன்று நான் ஒரு பீடாதிபதியாக இருக்கிறேனென்றால் அதற்கு அந்தாதியில் இருக்கக்கூடிய பாடல் காரணம்” என்றார். அந்தப்பாடல் இந்தப்பாடல்தான். வையம் துரகம் மதகரிமாமகு டம்சிவிகை பெய்யும் கனகம் பெருவிலைஆரம் பிறைமுடித்த ஐயன் திருமனை யாள்அடித்தாமரைக்(கு) அன்புமுன்பு செய்யும் தவம்உடை யார்க்குளவாகிய சின்னங்களே. ஒருவர் இந்தப் பிறவியில் செல்வவளம் மிகுந்தவராக இருந்தால் இந்தப் பிறவியிலோ கடந்த பிறவியிலோ அபிராமி மீது பக்தி செலுத்தியவராக இருந்திருக்க ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
இறப்பும் இல்லை பிறப்பும் இல்லை தங்கள் கோட்டைக்கான காவலே நிலையான காவல் என்று நினைத்து அருளாகிய காவலை மறந்தன. அசுரர்கள் மேல் சினந்தார் சிவ பெருமான். அவர் சிரித்ததுமே முப்புரங்கள் எரிந்தன. அவரும் திருமாலும் சரணடைந்த திருவடிகளுக்கு உரியவளாகிய பராசக்தியை சரணடைந்தால் இந்த உலகத்தில் மரணம் பிறவி இரண்டுமே கிடையாது என்கிறார் அபிராமி பட்டர். பிறப்பு இறப்பு என்பார்கள் அதை தமக்கு சரியான வரிசையில் சொன்னவர் அபிராமி பட்டர்தான். மரணம் பிறவி என்கிறார். யாருக்குப் பிறவி உண்டு. ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
எத்தனை எத்தனை நாமங்கள் மூன்று பெரும் தேவியர்கள் இருக்கிறார்கள் அந்த மூவருக்கும் நாயகியாக இருப்பவள் பராசக்தி. நான்முகனின் நாயகியாகிய கலை வாணியின் ஆன்ம சக்தியாக அவள் இயங்குகிறாள். திருமாலினுடைய மார்பிலே எழுந்தருளியிருக்கிற திருமகளுடைய சக்தியாகவும் பராசக்திதான் விளங்குகிறாள். நமக்கு வானுலகைத் தந்துவிட்டு அவள் போய் இருக்கிற இடம் சதுர்முகமும், பைந்தேன் பரிமளயாகம் என்று முன்னாலேயே சொல்லியிருக்கிறார். இந்த மூன்று அம்சங்களும் அவளுடைய ஆட்சி. அந்த நாயகியே நான்முகியாகவும் நாராயணியாகவும் உள்ளாள். தாமரை போன்ற திருக்கரங்களில் மலர்கள் கொண்டிருக்கிறாள். ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
இசை வடிவாய் நின்ற நாயகி ஒரு பெரிய மருத்துவ உண்மையை அபிராமி பட்டர் இந்தப் பாடலிலே சொல்கிறார். தந்தையின் உடலில் இரண்டு மாதம் ஒரு துளியாக இருக்கக்கூடிய உயிர் சக்தி தாயினுடைய கருவறைக்குள் போகிறது. அது தாது சக்தி. அதற்குப்பிறகு உடல் உருவாகிறது. உடம்பு உருவாகி குறிப்பிட்ட சில வாரங்களுக்கு பிறகு உயிர் அதற்குரிய இடத்திலே வந்து சேர்கிறது. அந்த உயிரைக் கொண்டுவந்து அந்த உடலிலே பொருத்துகிற அற்புதத்தைச் செய்கிறவள் பராசக்தி. நாம் ஒரு வீடு மாற்றிப் ...