அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
அபிராமியின் பேரருள் கிடைக்க அவள் திருவடிகளில் பக்தி செய்தாலே போதும்.ஆனால் அவளுடைய அடியவர்கள் தரிசனமும் அவர்களின் அணுக்கமும் அவர்களுக்கு சேவை செய்யும் பேறும் கிடைக்க நிறைய தவம் செய்திருக்க வேண்டும். அபிராமியின் அடியவர்களைப் பேணுவதன் மூலம் ஒருவர் தன்னுடையபிறவித் தொடர்ச்சியை அறுத்தெறிய முடியும். “பின்னே திரிந்துன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்” என்கிறார் அபிராமி பட்டர். உண்மையான ஞானிகள் மனிதர்கள் மத்தியில் தென்படுவார்கள். ஆனால் அவர்களின் அணுக்கத்திற்கு அகப்பட மாட்டார்கள். நாம் நம் ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
உள்ளத்திலும் உயிரிலும் அம்பிகை நிறைந்து நிற்கையில் உலகில் உயர்ந்த விஷயங்கள் உன்னதமான விஷயங்கள் எல்லாமே அவள்தான் என்னும் எண்ணம்தான் ஏற்படுமன்றி அவற்றில் வேறுவிதமான நாட்டம் தோன்றாது. உழவாரப்படை கொண்டு மண்ணை திருநாவுக்கரசர் செப்பனிட,பொன்னும் மணியும் இன்னபிற இரத்தினங்களும் வெளிப்பட்டன. “இப்பொன்நீ இம்மணிநீ இம்முத்தும் நீ” என்றுதான் அவருக்குத் தோன்றியது. அதுபோல் அழகிய மணிகளைக் காணும்போது அம்பிகையின் அம்சமே அந்த மணிகளென்று மனம் சொல்லிற்று. உலகின் ஒளிகள் அனைத்திற்குமே அம்பிகைதான் ஆதாரம் என்பதால் மணியின் ஒளியும் அம்பிகைதான் என்னும் ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
உலக வாழ்வில் சில உயரங்களைத் தொடும் சாதனையாளர்களைக் கேட்டால்,சதாசர்வ காலமும் தங்கள் இலக்கினையே இதயத்தில் குறித்து அதிலேயே கவனம் குவித்து முனைப்புடன் முயற்சித்ததாகச் சொல்கிறார்கள். உள்நிலை அனுபவத்தின் உச்சம் தொடும் ஆன்மீக சாதனையாளர்களோ அதனினும் பலமடங்கு தீவிரமாய் அந்த கவனக்குவிப்பில் ஈடுபடுவார்கள்.அவர்களை உபாசகர்கள் என்றழைப்பதும் அதனால்தான். ஒரே சிந்தனையில் மனதைக் குவிப்பதும் ஒத்த சிந்தனை உள்ளவர்களுடன் உறவை வளர்ப்பதும் ஆத்ம சாதனையின் அதிமுக்கிய அம்சங்கள். “கொள்ளேன் மனத்தில் நின் கோலமல்லாது; அன்பர் கூட்டந்தன்னை விள்ளேன்;” என்கிறார். எல்லாச் ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
சராசரி குடும்ப வாழ்வில் கூட,பெண்கள் வகிக்கும் பொறுப்புகளின் நிலைமாற்றம் பிரமிக்கத்தக்கது. ஒருபுறம் பார்த்தால் அவள் கணவனைச் சார்ந்திருப்பவள் போல் தென்படுகிறாள். இன்னொருபுறம் பார்த்தால் கணவனைத் தாங்கும் ஆதாரசக்தியாகவும் இருக்கிறாள். கணவனைப் பற்றிப் படரும் கொடியும் அவளே.குடும்பம் என்னும் கொடியைத் தாங்கும் கொம்பும் அவளே. இல்லத்தரசிகளுக்கே இது பொருந்துமென்றால் பதினான்கு லோகங்களைப் பராமரிக்கும் இருப்பதில் ஆச்சர்யமென்ன? “கொடியே! இளவஞ்சிக் கொம்பே!” என்கிறார் அபிராமிபட்டர். ஆன்மீகத்தில் இருக்கும் வசதியே சில நேரங்களில் தகுதிக் குறைவும் தகுதியாகி விடுவதுதான்.ஒரு மாணவர் எவ்வளவுதான் ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
பெண்களைப் பொறுத்தவரை அழகின் அடையாளங்கள் மட்டுமின்றி அசைவின் அடையாளங்களும் முக்கியம். சலங்கையொலி வளையலொலி ஆகிய இரண்டுமே இயங்கிக் கொண்டேயிருக்கும் பெண்களை நமக்கு அறிமுகம் செய்யும்.அந்த அணிகலன்கள் அழகையும் உணர்த்தும். செயலையும் உணர்த்தும். அங்குமிங்கும் பரபரவென்று நடமாடும் பெண்களின் சலங்கையொலி துரித கதியில் கலகலக்கும்.அதேபோல அவர்கள் ஏதேனும் வேலை பார்த்துக் கொண்டேயிருந்தால் கைவளையல் சலசலக்கும். இறைவன் அளந்த இருநாழி நெல் கொண்டு உலகத்திற்கே படியளக்கும் புவனமுழுதுடையாள், மங்கலத்தின் திருவுருவாகத் திகழ்கிறாள். மலையான் மகளாகப் பிறந்ததால் மலையரசியும் அவளே. செங்கலசம் ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
தெளிவில் விளைகிற குழப்பம்போல் சுகமில்லை. சிலருக்கு சில விஷயங்களில் ஏற்படும் தெளிவு மிகத்துல்லியமான குழப்பங்களை ஏற்படுத்திவிடும். சோலைராஜ் என்ற என் நண்பரொருவர் அபுதாபியில் விளம்பரத்துறையில் இருக்கிறார்.அவருடைய பாட்டனார் வர்மக்கலைக்கே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். அந்தக் கலையில் மகாநிபுண்ர். ஒருநாள் தன்னுடைய வயல்வரப்பில் நடந்து போனபோது குறுக்கே ஒரு மாடு படுத்திரிந்தது. அதனை ஒரு தட்டுத் தட்டி விரட்டலாம் என்று குனிந்தார். எந்த இடத்தில் தட்டினால் என்ன விளைவு ஏற்படும் என்று மனம் சிந்திக்கத் தொடங்கியது. அந்த ...