Blog

/Blog

சார்லி சாப்ளின் மௌனத்தின் நாயகன்

அந்தச் சிறுவன் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாய் இருந்தான்.நோயின் தீவிரம் அந்தப் பிஞ்சு மனதை சோர்வடையச் செய்யாமல் இருக்க அவனுடைய தாய் ஜன்னலருகே அமர்ந்து கொண்டு வெளியே நடப்பவற்றை நடித்துக் காட்டி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தாள்.அன்னையின் அங்க சேஷ்டைகளை அரும்புப் புன்னகையுடன் ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவன்தான் வெள்ளித் திரையின் சேஷ்டை நாயகனாய் வலம் வந்த சார்லி சாப்ளின். அந்த அன்னைதான் வறுமையின் கொடுமையால் தன் மகனுக்கிருந்த ஒரே மாற்றுடையை அடகு வைத்து அடுத்தவேளை உணவுக்கு வழிதேடினாள்.அதே அன்னைதான் ...

வாழ்வின் பொருளென்ன…நீ வந்த கதையென்ன…

கார் சாத்தூரை நெருங்கிக் கொண்டிருந்தபோது ஜேசுதாஸ் குரலில் ஒலித்துக் கொண்டிருந்தது”தெய்வம் தந்த வீடு” என்ற பாடல்.அந்தப் பல்லவியில் துரத்தும் கேள்வி ஒன்று உண்டு.Haunting Question என்பார்கள்.”வாழ்வின் பொருளென்ன ..நீ வந்த கதையென்ன”என்கிற அந்தக் கேள்வி,வலிமையானது சாத்தூர் தாண்டியதும் அழைக்கச் சொல்லியிருந்தார் டென்சிங்.மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர்.நமது நம்பிக்கையில் தொடர்ந்து எழுதி வருபவர். அவருடைய நெடுநாள் நண்பரும், நமது நம்பிக்கை இதழின் தொடக்கநாள் தொட்டு துணையிருக்கும் நல்ல வாசகரும் நலம் விரும்பியுமான கோவில்பட்டி காளிதாஸ் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தேன். ...

ஒருவகை ஞானம்

ஒதுங்கிய கூரை ஒழுகலாச்சு ஓலைகளின் மேல் தங்கப் பூச்சு பதுங்கிய பூனை வெளிவந்தாச்சு புழுக்களிடத்தில் புலிக்கென்ன பேச்சு தூண்டில் முனையில் தூங்கும் முதலை நீண்ட நதிமிசை நெருப்புச் சுடலை தீண்டிய கிளர்ச்சியில் தவிக்கும் விடலை தாண்ட வேண்டும் தன்னலக் கடலை கைப்பிடி அவலில் குசேலனின் அன்பு பொய்யாய் இருந்தால் பெறுவனோ பங்கு எய்தவன் கைகளில் எத்தனை அம்பு எல்லாம் தெரியும் ; எதற்கு வம்பு நிலைக்கண்ணாடி நீட்டுது காலம் நினைப்பும் மிதப்பும் நபும்சகக் கோலம் விலைக்குக் கிடைக்குது ...

சொல்லித்தான் பார்க்கிறேன்

கத்திகள் கேடயங்கள் கதைபேசும் களத்தினிலே புத்தர்கள் நடத்துவதோ புத்தகக் கண்காட்சி * பார்வைக்கு சுகமாக பொய்நிலவு விற்கையிலே சூரியன் கடை போட்டால் சீந்துபவர் யாருமில்லை * செயற்கைப் பூக்களுக்கு சாவில்லை என்பதனால் சுயமறிந்தோர் கொடுப்பாரோ சிரஞ்சீவி பட்டம்? * நூலிருக்கும் பட்டத்தை நில்லென்று கைகாட்டும் வாலில்லாக் குரங்குமனம் வாலறிவு பெற்றிடுமோ? * ஓலா கார் ஊபர் காரில் ஓயாமல் வழிசொல்லும் கோலாகலப் பெண்ணே கண்முன்னே வாராயோ… * தன்னா சனந்தன்னை தான்செய்ய வாய்ப்பு வந்தால் பொன்னா சனமாய் ...

ஜெயமோகன் கீதை உரை-நிறைவு- இறகின் நிறங்கள்

கீதை தொடர் உரைகளின் நிறைவு நாளில் முந்தைய மூன்று நாட்களின் உரைகளை முதலில் தொகுத்துச் சொன்ன ஜெயமோகன் கீதையை வாசிக்கும்முறை பற்றி விரிவாகச் சொன்னார்.மனனம் ஸ்வாத்யாயம்,தியானம்என்னும் படிநிலைகளுக்கு உட்படுத்தி,ஒரு பிரதியை அணுகும்போது வாசிப்பனுபவம் முழுமை பெறுவதை விளக்கினார். அப்போது எனக்கொன்று தோன்றியது. தியன சுலோகங்கள்,அல்லது நம் முயற்சியின்றி நமக்குள் ஒலிக்கத் தொ0டங்கும் மூத்தோர் வரிகள்,தனி கவனத்திற்குரியவை.எப்போதோ அவை எழுதப்பட்டு விட்டாலும் நமக்கென்று முதிர்கணமொன்றில் அருளப்படுபவை. ஆயிரமாயிரம் வரிகளைக் கடந்து வருகையில் நம் சூழலுக்கொப்பவோ நம் தகுதிக்கொப்பவோ சில ...

கீதை குறித்து ஜெயமோகனின் உரை-3- ஒளி ஊடுருவும் தருணம்

ஜெயமோகனின் மூன்றாம் நாள் கீதை உரையினை வலையேற்றத்தில் கேட்டேன்.முரண்பாடுகளுக்கும் முரணியக்கத்துக்கும் நடுவிலான வேறுபாடுகளை விரித்துரைக்கும் இந்த அமர்வு நிறைய விவாதங்களை முன்னெடுக்கும் தளமாக அமைந்ததில் மகிழ்ச்சி. விவாதத்திற்கு முன்னதாக இந்த உரையின் முக்கியமான பகுதிகள் என்று நான் கருதும் சிலவற்றைப் பதிவு செய்கிறேன். தன் வாழ்வில் தொடராக நிகழ்ந்த சோக நிகழ்வுகளால் உயிராகிய காண்டீபத்தை தண்டவாளத்தில் கிடத்தமுற்பட்டு புறப்பட்டுப் போன புலர்காலைப் பொழுதில் ஒரு புல்லினில் வெய்யில் ஊடுருவிய காட்சி “கீதை முகூர்த்தம்” நிகழ்ந்ததைக் குறிப்பிடும் இடமும் ...
More...More...More...More...