Blog

/Blog
நவராத்திரி கவிதைகள்- 6

நவராத்திரி கவிதைகள்- 6

நவராத்திரி கவிதைகள் 6(3/10/2019) புத்தகம் என்பது கோயிலென்றே -அதை ...
நவராத்திரி கவிதைகள்- 4

நவராத்திரி கவிதைகள்- 4

நவராத்திரி கவிதைகள் 4(2/10/19) தோகை விரித்திடும் பொன்மயில் அழகில் தென்படும் பசுமை அவள்கொடைதான் வாகைகள் சூடிட நீதியும் எழுகையில் வெறிகொண்டு தொடர்வது அவள் படைதான் யாகங்கள் யாவிலும் ஆடிடும் கனல்மிசை ஏகி நடப்பது அவள் நடைதான் நாகத்தின் படத்திலும் நாதத்தின் இசையிலும் நாளும் அசைவது அவள் இடை தான் சூத்திரம் எழுதிய ஞானியர் நெஞ்சினில் சூட்சுமம் ஆனவள் பராசக்தி பாத்திரம் நிரம்பிடும் தானிய வகைகளில் பவித்திரம் ஆனவள் பராசக்தி காத்திடும் வலிமையின் காருண்ய ரூபமாய் கண்ணெதிர் தெரிபவள் ...
நவராத்திரி கவிதைகள்- 3

நவராத்திரி கவிதைகள்- 3

நவராத்திரி கவிதைகள் 3(1/10/2019) வாலை இதழ்களில் வளரும் நகை-அது வானத்துப் பொய்கையில் மலரும் முகை பாலா விழிகளில் சுடரும் நகை- அதில் பரவும் நெருப்பினில் அழியும் பகை சூலத்தின் முனைகளில் ஒளிர்வதென்ன -விரல் சொடுக்கிடும் முன்னர் ஒளிவதென்ன நீல ண்டத்தில் நெளிவதென்ன -அவள் நீவிய குண்டலி நாகமன்றோ சாந்தத் திருமுகம் சிரித்திருக்கும்-அவள் சந்நிதித் தூண்களும் சிலிர்த்திருக்கும் காந்தக் கயல்விழி குளிர்ந்திருக்கும்-நுதல் காட்டிடும் கண்மிசை கனலிருக்கும் கோடையும் பனியும் அவள் அசைவே- பயிர் கொழிப்பதும் காய்வதும் அவள் இசைவே ...
நவராத்திரி கவிதைகள் – 2

நவராத்திரி கவிதைகள் – 2

நவராத்திரி கவிதைகள் – 2(30-9-2019) இடைவெளியே இல்லா இவள் கருணை கிட்ட தடை – வெளியே இல்லை தனக்குள் – மடையை அடைக்கும் அகந்தை அடித்தே உடைத்தால் கிடைக்குமே சக்தி கனிவு . சிறகசைத்துப் பாடுகிற சின்னப் பறவை உறவென்று வானத்தை உன்னும் _ பிறவியினைப் பெற்றவர்க் கெல்லாம் பராசக்தி தாய்தானே உற்றிந்த உண்மை உணர். உன்னில் ஒரு துளியாய் உள்ளாள் அவளைநாம் உன்னும் பொழுதே உருத்தெரிவாள் – இன்னும் தொடரும் பிறவித் துயர்நீங்க தேவி சுடரடிகள் ...
நவராத்திரி கவிதைகள்-1

நவராத்திரி கவிதைகள்-1

| நவராத்திரி கவிதைகள் – 1(29/9/2019) கரும் பட்டு வானில் போர்த்து கண் தூங்கச் சொன்னாள் தேவி வரும் ஒற்றைக் கதிருக்குள்ளே விதையாக நிற்கும் நீலி ஒரு வார்த்தை சொல்வாள் என்றே உலகமே ஏங்கும் நேரம் கருவாகும் வேதத்துள்ளே கலையாகி நின்ற காளி ஆற்றோர நாணல் தூங்க ஆராரோ பாடும் அன்னை நேற்றோடு நாளை இன்றி நிகழ் கணம் சமைத்தாள் முன்னை காற்றாகிப் புயலாய் மாறி கடுங்கோபம் தீர்ந்த பின்னை ஊற்றாகி ஒளியும் ஆவாள் உயிர்ப்பித்துத் தந்தாள் ...

அஞ்சலி: எங்கள் தலைமை ஆசிரியர் -திரு பி.வி.பத்மநாபன்

ஆசிரியர் ஒருவர் தன் பணியை ஆழமாக நேசித்து மாணவர்கள் மேல் நிபந்தனையில்லாத நம்பிக்கையும் கொண்டிருந்தால் அவர் காலங் காலமும் நினைக்கப்படுவார் என்பதற்கு நிகரற்ற உதாரணம் எங்கள் தலைமை ஆசிரியர் திரு பிவி பத்மநாபன் அவர்கள் நான் மணி மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தபோது அவர் உதவித் தலைமை ஆசிரியர். இரண்டு ஆண்டுகளில் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார் அவர் என் வாழ்வில் பல திருப்புமுனைகளுக்குக் காரணமாக போகிறார் என்பது எனக்கு அப்போது தெரியாது நான் பத்தாவது படிக்கும்போது ...
More...More...More...More...