Blog

/Blog

அபிராமி அந்தாதி- வாழ்வில் நிரம்பும் வசந்தம்

3.விரலருகாய்….வெகுதொலைவாய்... அம்பிகைமீது அன்புச் சகோதரர் இசைக்கவி ரமணன் எழுதிப்பாடும் பாடல்களில் ஒரு வரி… “விரலருகாய் வெகுதொலைவாய் இருக்கின்றாய்…உன்னை  வென்றோம் என்றவர் நெஞ்சில் அமர்ந்து விழுந்து விழுந்து சிரிக்கின்றாய்”. சென்றடையாச் செல்வம் என்று நாயன்மார்கள் இறைவனைக் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு அதே இறைவன் தொடரும் துணையாய் வந்து கொண்டேயிருக்கிறான். முந்தைய அந்தாதிப் பாடல் அம்பிகையை விழுத்துணை என்கிறது.வாழ்வில் மனிதனுக்கு எத்தனையோ துணைகள். பயணங்களில் கிடைக்கும் வழித்துணை ,இல்லறத்தைப் பகிர்ந்து கொள்ளும் வாழ்க்கைத்துணை, செய்யும் தொழிலில் உதவும் வணிகத்துணை. இவற்றில் பல வழியிலேயே போகும்.சில வந்தவுடன் போகும்.சிலவோ போகவென்றே வரும். ஆனால் அம்பிகை நிலையான துணையாய் நிரந்தரப் பற்றுக்கோடாய் பக்கத்திலேயே இருக்கிறாள்.”துணையும்” என்கிறார் அபிராமி பட்டர். பெரும்பாலும் ...

அபிராமி அந்தாதி -வாழ்வில் நிரம்பும் வசந்தம்

2. புதிரின் விடைபோலப் புலரும் இளங்காலை 2009 ஆம் ஆண்டு. அக்டோபர் மாதம் 15ஆம் நாள். விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் மயிலாடுதுறையிலிருந்து திருக்கடவூர் சென்று கொண்டிருந்தேன். என் நினைவுகள் இருபத்தோராண்டுகள் பின்னோக்கிப் பறந்தன.தொழிலதிபர் திரு.ஏ.சி. முத்தையா அவர்களின் துணைவியார் திருமதி தேவகி முத்தையா அவர்கள் அதிதீவிரமான அபிராமி பக்தை. அபிராமி அந்தாதி குறித்து அவர் மேற்கொண்டிருந்த ஆய்வுநூல் 1988ல் திருக்கடவூர் அபிராமியம்மை சந்நிதியில் வெளியிடுவதாகத் திட்டம். என் நினைவு சரியாக இருக்குமேயானால் தை அமாவாசையில் அநத விழா திட்டமிடப்பட்டிருந்தது. அந்த மாவட்டங்களில் நிகழ்ந்தசிலவகை இனக்கலவரங்கள் காரணமாக ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

( அபிராமி அந்தாதி நூலுக்கு என் விளக்கவுரை, ” அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்” என்னும் தலைப்பில் வெளிவந்தது. அந்நூலின் சில பகுதிகளைத் தொடர்ந்து பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்)      1. பேசி முடியாப் பேரழகு பொன்புலரும் காலைகளிலோ,முன்னந்தி மாலைகளிலோ நெடுந்தொலைவில்,ஏதோவோர் ஆலயத்திலிருந்து காற்றில் கலந்துவரும்தெய்வீக கானங்கள் சில நம்மை காலக்கணக்குகள் மறக்க வைக்கும்.மற்றவற்றை விட்டு  சற்றே விலகி மனம் லயிக்கச் செய்யும். அதற்குமுன் பலமுறை கேட்டிருந்தாலும் முதல்முறை கேட்கும் மலர்ச்சியைத் தரும் பாடல்கள் அவை.அவற்றில்   ஒன்று, சீர்காழியின் கணீர்க்குரலில் வரும் இந்தப் பாடல்…        “சின்னஞ்சிறு பெண்போலே         சிற்றாடை இடையுடுத்தி         சிவகங்கைக் குளத்தருகே         ஸ்ரீதுர்க்கை சிரித்திருப்பாள்” முன்பின் ...

சுகாவுடன் ஓர் உரையாடல்

எவ்வளவுதான் கடுமையான பணிச்சுமையாய் இருக்கட்டும். சுகா சிலகடமைகளிலிருந்து தவறுவதேயில்லை. திரைப்படப் பணிகள் ஒருபக்கம்,இளையராஜா 1000 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு ஒரு பக்கம் என கடும் வேலைகளுக்கு நடுவிலும் நண்பர்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக வந்து நிற்பார்! அதாவது நெருங்கின நண்பர்களை கலாய்க்க ஊசிமுனையளவு இடம் கிடைத்தாலும் அதில் ஓர் ஊரையே புகுத்தி ஊர்வலம் விடுவது,அவரைப் பொறுத்தவரை இருட்டுக்கடை அல்வா தின்பது மாதிரி. முனைவர். கு. ஞானசம்பந்தன் அவர்களை கோவையில்தான் முதன்முதலாக சுகா சந்தித்தார் என்று ஞாபகம். நட்சத்திர ...

போதாது போதாது போ

(நண்பர் திரு.என்.சொக்கன்,வெண்பாவில் வல்லவர்.ஓரிரு நாட்களுக்கு முன் சிவன் குறித்து போதாது போதாது போ என்னும் ஈற்றடியுடன் சில வெண்பாக்களைப் பதிந்திருந்தார். அந்த ஈற்றடியால் கவரப்பட்டு, சில நண்பர்களும் நானும் அதே ஈற்றடியில் தொடர்ந்து வெண்பாக்கள் பதிந்தோம். நான் எழுதிய வெண்பாக்கள் இவை) போதாது போகமென்ற போதை சலிப்பேற போதாரும் மஞ்சமும் புண்செய்ய- ஆதியனை போத வடிவனை போய்த்தொழவே கண்ணிரண்டும் போதாது போதாது போ நாகம் இருந்தாடும் நாதன் சிரசிருந்தே ஏகும் நதியின் இசைகேட்டு தாகமும் மீதூறக் காசிநகர் ...

கறுப்பு வெள்ளை

( நமது நம்பிக்கை மாத இதழில் ஒவ்வொரு மாதமும் கடைசிப் பக்கத்தில் என் கவிதை இடம்பெறும். பெரும்பாலும் அந்தப் பக்கம் வண்ணப் பக்கமாகவே அமையும். ஒரு மாதம் மட்டும் வெவ்வேறு விளம்பரங்கள் வந்ததால் வடிவமைப்பு நிர்வாகத்தில் கடைசிப் பக்கம் கறுப்பு வெள்ளையாக அமையும் என்று முடிவெடுத்தோம். எதிர்பாராத இந்த சமரசத்தை, திட்டமிட்டு நடந்தது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த நினைத்து இந்தக் கவிதையை எழுதிக் கொடுத்தேன்) கறுப்பு வெள்ளை புகைப்படத்தில் கனவின் வண்ணம் நூறு கறுப்பு வெள்ளை திரைப்படத்தில் ...
More...More...More...More...