மார்கழி 3 அடியார்க்கு அடியார்; இப்பூங்கொடியார்
திருவெம்பாவையின் மூன்றாம் பாடலை முந்தைய இரண்டு பாடல்களின் தொடர்ச்சியாகக் காண முற்படுவோமேயானால்,வழக்கமாகப் பொருள் கொள்ளும் விதத்திலிருந்து சற்றே மாறுபட்ட சிந்தனை ஒன்று தோன்றுகிறது.வீட்டினுள் உறங்குகிற பெண்ணை கடைதிறவாய் என்று வெளியே உறங்கும் பெண்கள் கேட்க,அவர்களை பழ அடியார் என்றும் தன்னை புத்தடியோம் என்றும் அந்தப் பெண் வர்ணித்து ஆட்கொள்ள வேண்டுவதாக பொதுவாக உரை சொல்வார்கள். “பத்துடையீர்-ஈசன் பழ அடியீர்-பாங்குடையீர்” என்னும் வரி,உள்ளே இருக்கும் பெண் வெளியே நிற்பவர்களை விளிப்பது போலவும்,”புத்தடியோம்” என்று அவள் தன்னையே சொல்லிக் கொள்வது ...
மார்கழி 2- இது சுகபோகமல்ல..சிவயோகம்
ஈஷாவில் சூன்ய தியான தீட்சை பெற்ற புதிது.மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் சென்றிருந்தேன். தரிசனத்துக்குப் பின்னர் ஓர் ஓரமாக தியானத்தில் அமர்ந்தேன். சில நிமிடங்கள் சென்றிருக்கும். யாரோ ஒருவர் என்னை உலுக்கி எழுப்பினார்.நான் உறங்குவதாய் எண்ணி விட்டார் போலும். கண் திறப்பதற்குள் அவரைக் காணவில்லை. பக்தர்கள் ஒருவரையொருவர் தவறாகப் புரிந்து கொள்வது பலகாலமாய் உள்ளதுதான். இங்கே ஒரு பெண் உறங்குவதாய் நினைத்து இன்னொருபெண் தோழியருடன் வாயிலில் நின்று எள்ளி நகையாடுகிறாள். ” சோதிமயமான பரம்பொருளாகிய சிவபெருமான்மேல் உனக்குப் பாசமென்று ...
மார்கழி-1-ஏன் மயங்குகிறாள் இந்த மாது?
மார்கழியின் விடியற்காலைகளை பாவையர் கோலங்களும் பாவை பாடல்களும் புலர்வித்த காலங்கள் உண்டு..பெண்கள் கூடி பெருமான் பெருமை பேசி நீராடப் போவதாய் பாவை பாடல்களின் கட்டமைப்பு. இது சங்க இலக்கியங்களின் “தைந்நீராடல்” மரபின் நீட்சி என்பார்கள். பாவை பாடல் ஒவ்வொன்றையும் பல்வேறு நிலைகளில் காட்சிப்படுத்திப் பார்ப்பது அவரவரின் பக்குவத்திற்கேற்றது. திருவெம்பாவையின் முதல் பாடல் அப்படி காட்சிப்படுத்திப் பார்க்கத்தக்கது.”எல்லையிலாததும் அரியதுமான” பெருஞ்சோதிப் பிழம்பாகிய சிவபெருமானின் பெருமையை நான் பேசி வருகிறேன்.கூரியதும் பெரியதுமான கண்கள் கொண்ட பெண்ணே! கண் திறந்து பார்க்கவில்லையா?உன் ...
உன்னைப் புரியுமா உனக்கு?
இன்னொரு மனிதன் எழுதிய சீலையில் உன் தூரிகையை ஓட்டலாகாது; மௌனம் பரப்பிய மேடையில் ஏறி யவன சாஸ்திரம் இயம்பலாமா நீ; புராதனசிலைகளின் பக்கவாட்டில் கிறுக்குவதி லேயா கிளர்ச்சி உனக்கு? நீவிழிக் கும் வரை நிதானித் ததன்பின் சூரியன் உதிப்பதாய் சொல்லித் திரிகிறாய் விழுமுன் நிழலில் வண்ணங்கள் நூறு அழகாய்த் தெரிவதாய் அளந்து விடுகிறாய் விக்ரமாதித்தர்கள் முதுகினில் எல்லாம் வலியத் தொற்றும் வேதாளம் நீ வையமே உன்னை விரும்பிச் சுமப்பதாய் பொய்யும் புரட்டும் பரப்பி நடக்கிறாய் ஆறாம் வேதமும் ...
ஸ்ரீராம் மெஸ்ஸின் மூன்றாம் மேசை
மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி தெருவிலிருந்து பிரியும் குறுந்தெருவில் ஆண்டாண்டு காலமாய் ஸ்ரீராம் மெஸ், சைவ உணவுக்கு புகழ் பெற்ற இடமாய் விளங்குகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு உள்ளே நுழையவே ஏகக் கெடுபிடி நடக்கும். இப்போது மேல்தளம் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு விரிவாக்கம் கண்டிருக்கிறது. வாசலில் இருக்கும் அறிவிப்புப் பலகைகள் பள்ளிக்கூடங்களில் ஒட்டப்படும் அறிவுறுத்தல் போல் கறாரான வாசகங்கள் இருக்கும்.தலைமையாசிரியரின் கையெழுத்து ஒன்றுதான் பாக்கி. உணவுக்கு கூப்பன் வாங்கிய கையோடு, “மினரல் வாட்டருக்கு இங்கே பணம் செலுத்தவும்” என்னும் ...
சார்லி சாப்ளின் மௌனத்தின் நாயகன்
அந்தச் சிறுவன் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாய் இருந்தான்.நோயின் தீவிரம் அந்தப் பிஞ்சு மனதை சோர்வடையச் செய்யாமல் இருக்க அவனுடைய தாய் ஜன்னலருகே அமர்ந்து கொண்டு வெளியே நடப்பவற்றை நடித்துக் காட்டி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தாள்.அன்னையின் அங்க சேஷ்டைகளை அரும்புப் புன்னகையுடன் ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவன்தான் வெள்ளித் திரையின் சேஷ்டை நாயகனாய் வலம் வந்த சார்லி சாப்ளின். அந்த அன்னைதான் வறுமையின் கொடுமையால் தன் மகனுக்கிருந்த ஒரே மாற்றுடையை அடகு வைத்து அடுத்தவேளை உணவுக்கு வழிதேடினாள்.அதே அன்னைதான் ...