அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
இனியேது பிறவி? இந்திரலோகத்தில் கேட்டதையெல்லாம் தரக் கூடிய மரம் இருக்கிறது. அதன் பெயர் கற்பக விருட்சம். அந்த கற்பக விருட்சத்தின் கீழ் ஒருவன் அது கற்பக விருட்சம் என்பது தெரியாமல் உட்கார்ந்தான். ரொம்ப களைப்பாக இருக்கிறதே இளநீர் கிடைத்தால் பரவாயில்லை என்று நினைத்தான்; இளநீர் வந்தது. இளநீரைக் குடித்தபிறகு இளநீர் போதுமா? பசியாறுவதற்கு. நல்ல அறுசுவை உணவு கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தான். அறுசுவை உணவு வந்தது. சாப்பிட்ட பிறகு புழுக்கமாக இருக்கிறதே, நல்ல குளிர்ந்த ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
பணிபவர் பட்டியல் அம்பிகையினுடைய பாதங்களை வழிபடுவர்களுக்கு என்னவெல்லாம் கிடைக்கு மென்று சொல்ல வருகிறார் பட்டர். சொல்ல வரும்போதே அம்பிகையினுடைய திருவடிகளை யாரெல்லாம் வணங்குகிறார்கள் என்பதையும் சொல்கிறார். நயனங்கள் மூன்றுடை நாதன் என்கிறார். இவனுக்கும் மூன்று நயனங்கள்; இவளுக்கும் மூன்று நயனங்கள். ஆனால் மூன்று கண்கள் உள்ளவர்களுக்கெல்லாம் அவர்தான் நாதன். எவ்வளவு பேர்களுக்கு மூன்று கண்கள் இருக்கின்றன? நம் அனைவருக்குமே இருக்கின்றன. நெற்றிக்கண் என்று நாம் சொல்வது யோக மரபிலே ஆக்ஞா என்று சொல்லக்கூடிய நெற்றிப் பொட்டில் இருக்கக்கூடிய ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
வாழ்விற்கு அவள்தான் முதலீடு ஏற்கெனவே சில பாடல்களில் அம்பிகையினுடைய திருவுருவத்தை மனதில் எப்படி வரித்துக் கொள்வது என்பதை ஒரு தூரிகையை எடுத்து வரைந்து காட்டியது போல் பட்டர் வரைந்திருக்கிறார். இன்னொரு சித்தரத்தை அபிராமி பட்டர் நமக்காகத் தீட்டிக் கொடுக்கிறார். கடம்ப மலர்கள் அம்பிகைக்கு மிகவும் உகந்தவை. கடம்ப மலர்களால் கோர்க்கப்பட்ட மாலைகளை அம்பிகை பெரிதும் விரும்புகிறாள். ஐந்து மலர்களைக் கொண்ட அம்புகளை அவள் தன் படைக்கலனாகக் கொண்டிருக்கிறாள். தனு என்றால் வில். நள்ளிரவு நேரத்திலே பைரவ மூர்த்தியால் ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
உயிரின் ஒரே குறை குறையொன்றுமில்லை என்பது உண்மை தான் – ஆனால் உயிர்களுக்கு ஒரேயொரு குறை இருக்கக்கூடும். அந்தக் குறையும் இப்போது அபிராமி பட்டருக்கு இல்லை. இனிமேல் நான் பிறந்தால் அது என் குறையில்லை; அது உன் குறை என்று அபிராமியிடம் சொல்லிவிட்டார். வினைகள் திரும்பத் திரும்ப மூளுவது நம்மாலே, வினைகள் திரும்பத் திரும்ப மூளுவது நம்மாலே, வினைகள் மூள்வது ஒரு செயலைச் செய்வதால் அல்ல அந்த உணர்வினாலேயே மூளுகிறது. ஓர் ஆளைப் பார்க்கிறீர்கள். அவர் உங்களுக்கு ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
அழகிற்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அவள் ரொம்ப அழகு என்று யாராவது ஒரு பெண்ணைப் பார்த்துச் சொன்னீர்கள் என்றால் என்ன மாதிரி அழகு என்று கேட்பார்கள். ஒரு பெண்ணுடைய அழகைப் பார்த்தால் நீங்கள் யாருடனாவது ஒப்பிட முடியும். ஏறக் குறைய இந்தப் பெண்மாதிரி அழகு. அந்த பெண் மாதிரி அழகு என்றாவது சொல்லலாம். அம்பிகை எப்பேர்ப்பட்ட அழகு என்றால் அம்பிகை மாதிரி அழகு. அவளை யார் கூடவும் ஒப்பிட முடியாது. ஒப்பிடுவது என்பது எப்போது வரும்? ஒன்றைப் ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
பெண்மையின் பேரழகு! ஒரு விஷயம் எந்தப் புலன் மூலம் நம் கவனத்திற்கு வருகிறதோ, அந்தப் புலனுக்கு முதலில் மகிழ்ச்சி வரும். நமக்கு மிகவும் பிடித்தமான ஒரு குரலைக் கேட்கிறபோது காதில் தேன் பாய்கிறது என்று சொல்கிறோம். கண்களை கடவுள் நமக்குக் கொடுத்ததன் முழுப்பயன் அம்பிகையின் தரிசனத்தில் கிடைக்கிறது. ஒரு பெரிய திரையங்கம். எங்கெங்கோ இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் ஒரு காட்சிக்கு என்று வருகிறார்கள். வருபவர்களையெல்லாம் காவலாளி பொருட்படுத்தவே இல்லை. ஆனால் அந்த திரையரங்கத்தின் உரிமையாளருடைய கார் வருகிறது என்றால் ...