ஆதிசங்கரரும் கவியரசரும்
கவியரசர் கண்ணதாசன் மறைந்து பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு கவியரசர் கண்ணதாசன் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். சகோதரர் காந்தி கண்ணதாசன், கவிஞரின் புத்தக அடுக்கினைக் காட்டினார். எல்லாப்புத்தகங்களும் நேர்வசத்தில் அடுக்கப்பட்டிருக்க, அந்தப் புத்தகங்களின் மேல் ஒரேயொரு புத்தகம் படுக்கை வசத்தில் இருந்தது. கெட்டி அட்டையிடப்பட்ட அந்தப் புத்தகத்தை கையிலெடுத்துப் புரட்டினேன். காஞ்சி மகாபெரியவரின் “தெய்வத்தின் குரல்”. அதன் முதல் பக்கத்தில்,”இது என்னுடைய புத்தகம். இதை யாரும் இரவல் கேட்கக் கூடாது. அன்பன்,கண்ணதாசன்”என்று எழுதிக் கையொப்பமிட்டிருந்தார் கவிஞர். அவர் அடிக்கடி ...
வீணை வந்த விதம்…
நான் கல்லூரி மாணவனாக இருந்த போது திரு. சுகிசிவம் அவர்களும் கோவையில் இருந்தார். புத்தாண்டையொட்டி சென்னைக்கு அவர் சென்றிருந்தார். நானும் உறவினர் வீட்டு விசேஷம் ஒன்றிற்காக சென்னையில் இருந்தேன். அப்பு முதலி தெருவில் இருந்த அவருடைய இல்லத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அவரின் மூத்த சகோதரர் திரு.எம்.எஸ்.பெருமாள் அவர்களும் இருந்தார்.எம். எஸ் பற்றி பேச்சு வந்தது.திரு.பெருமாள் சொன்னார்,எம்.எஸ். சின் தாய் வீணை வித்வான் அல்லவா!மடியிலேந்தி வாசித்து வாசித்து, அந்த நாதம் கருப்பையில் குடிகொண்டு எம்.எஸ். ஆக பிறந்தது” என்று. ...
சஷ்டி நாயகன் சண்முகன்-6-காதல் முருகன்
“யானை தன் அணங்கு வாழ்க! மாறிலா வள்ளி வாழ்க!” என்று முருகன் வாழ்த்தில் வரும். அசுரர்களிடமிருந்து தேவர் குலத்தை மீட்ட முருகனுக்கு இந்திரன் தன் மகளாகிய தெய்வானையை மணமுடித்துத் தந்தான். வேட்டுவர் குலத் தலைவன் நம்பிராஜன் மகளாக வளர்ந்த வள்ளியை வேலன் தேடிப்போய் மணமுடித்தான். இருவருமே திருமாலின் புதல்வியர் என்றும் வெவ்வேறு இடங்களில் என்றும் கந்த புராணத்திலேயே செய்தி உண்டு. மாமன் மகள்கள் !! அருளாளர்கள் முருகன் மேல் இயற்றிய பனுவல்களில் வள்ளிக்கு கூடுதல்முக்கியத்துவம் தரப்படுவதைக் காணலாம். ...
சஷ்டி நாயகன் சண்முகன்-5-வேல்முருகன்
திருவாசகத்தில் பெரும்பாலானவர்களுக்கு நன்கு தெரிந்த பகுதி,சிவபுராணம். அதில் ஒரு வரி,”வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே”.இந்த வாக்கியம் முருகனுக்கும் முருகன் கை வேலுக்கும் மிகப்பொருத்தம்.வேதங்களுக்கு அப்பாற்பட்டவன் அவன் என்பதால் “சுப்ரமண்யோஹம்” என மும்முறை விளித்து வணங்கின. அவன்கை வேல்,ஆழ்ந்தது.அகன்றது.நுண்ணியது. வேலின் வீர தீரபராக்கிரமங்கள் எவ்வளவோ. அவை அனைத்திலும் மேம்பட்டது ஒவ்வொரு பக்தருக்கும் உடன்வரும் துணையாய் வேல் திகழ்கிறது என்பதை அருளாளர்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்துவதுதான். கடலை வற்ற வைத்தவேல், கிரௌஞ்ச மலையைப் பிளந்த வேல், மாமரத்தைப் பிளந்த ...
சஷ்டி நாயகன் சண்முகன்.4. அறுபடை முருகன்
சமீபத்தில் எழுத்தாளர் திரு.ஜெயமோகனுடனான அலைபேசி உரையாடலில் முருக வழிபாடு பற்றிப் பேச்சு வந்தது.பாரதம் முழுவதும் இருக்கும் முருக வழிபாட்டை சுட்டிய அவர், முருகனை தமிழ்க்கடவுள் என்று சொல்வது பற்றிய விவாதங்களை ஓரிரு சொற்களில் சுட்டினார். தொல்காப்பிய காலத்திற்கு முன்பிருந்தே முருகவழிபாடு தமிழகத்தில் உண்டு. சிவனை வடநாட்டினர் “ஹர் ஹர் மஹாதேவ்வ்” என்னும் முன்னரே அவன் தென்னாடுடைய சிவனாக இருந்திருக்கிறான். சிவன் ,முருகன் இருவருமே தமிழ்ச்சங்கத்தில் பங்காற்றியிருக்கிறார்கள். “கூடல் புரந்தொருகால் கூடல் புலவரெதிர் பாடல் அறிவித்த படைவேள்“ என ...
“குங்குமக் கோலங்கள் கோயில் கொண்டாட…’
இன்று இளங்காலையில், கோவை பந்தயச்சாலையில் நடை.காதுகளில் இசை ஒலிப்பான் பொருத்தியிருந்தேன். வாணி ஜெயராம் வாரி வழங்கிக் கொண்டிருந்தார். அவருடைய பாடல்கள் நம்மோடு பேசும்.முற்றிலும் புதிய மொழியில், இசையின் புதுப்புது நிறங்களில்… ஒரு பாடலின் நிறைவுக்கும் மறு பாடலின் தொடக்கத்திற்கும் நடுவிலான எதிர்பார்ப்பில் ஒளிர்கிறது எட்டாம் ஸ்வரம். வசீகர ஆலாபனைக்குப் பிறகு வெய்யிற்கீற்றாய் வருகிறது பல்லவி… “குங்குமக் கோலங்கள் கோவில் கொண்டாட கோதை நாயகன் வருவானடி கோடிக் காலங்கள் நான் தேடி நின்றேன் அவனை அறிவேனடி குங்குமக் கோலங்கள் ...