நாளை என்றொரு நாளுண்டு
எல்லாம் புதிதாய்த் தொடங்கவென இன்னொரு வாய்ப்பைத் தேடுகிறோம்; என்றோ செய்த தவறுகளை இன்று திருத்த எண்ணுகிறோம். புதிதாய் முயற்சி தொடங்கிவிட புத்தம் புது நாள் எதற்காக? இதயத்தின் ஆழத்திலும் முழுவிருப்பம் இருந்தால் போதும் நமக்காக! முன்னை விடவும் தெளிவிருந்தால் மன்னிக்கின்ற பரிவிருந்தால் இன்னும் கொஞ்சம் வெளிச்சம் வரும் என்றும் வாழ்வில் மகிழ்ச்சி வரும். மண்ணில் நிகழ்கிற விடியலெல்லாம் மற்றொரு வாய்ப்பை வழங்கத்தான்! எண்ணம் எதுவும் கைகூடும் என்கிற உறுதியை மொழியத்தான்! ஆளைக் கவிழ்க்கிற தோல்விகளும் அடியுடன் வீழ்த்தப் ...
புலப்படுத்தும்
நகரும் நிமிடங்கள் முதலீடு -இதில் நஷ்டக் கணக்குகள் கூடாது சிகரம் தொடுவது நம் இலக்கு -இதில் சுணக்கம் என்பதே ஆகாது! முகமில்லாத தினங்களுக்கும் -ஒரு முகவரி கொடுப்பது நம் உழைப்பு பகலும் இரவும் நம் வசத்தில் -இதில் பயன்கள் காணட்டும் நம்முனைப்பு பத்துவிரல்களின் பிடியினிலே -மிகப் பத்திரமாய் நம் நிகழ்காலம் யுத்த களத்தின் வீரனைப்போல் -நீ எழுந்தால் உனக்கே எதிர்காலம் புத்தகம் பேசும் உறுதிகளை – உன் புத்தியில் இறக்கிப் பயன்படுத்து நித்தமும் உன்னைப் புதுப்பித்து -அட ...
காலங்கள் காக்கட்டும்
மின்னல் வந்து இருள்தின்னும் ஒரு மழைநாள் இரவினிலே ஜன்னல் வழியே பன்னீரைமுகில் சிந்திய வேளையிலே என்ன பண்டிகை வானிலென்றே -நான் எட்டிப் பார்த்தேனா -அட உன்னைத் தானெதிர் பார்த்தேன் என்கிற என்றிடி ஒங்கிச் சிரித்ததடா! கண்களில் மழைவரும் கால்ங்களில்நீ கோழையில் கோழையடா எண்ணி எண்ணி ஏங்கித் தவிப்பவன் இவன்தான் எழையடா மண்ணுக் கெந்த பயனுமில் லாமல் மனம்போல் வாழுபவன் -தான் பண்ணிய தவறுகள் எண்ணி அழுவதில் பயனொன்றில்லையடா மற்றவர்க்குதவிய மகிழ்ச்சியில் கண்கள் மழையாய்ப் பொழியட்டும் உற்றவர் பரிவினில் ...
திசைகள் திறந்துவிடும்
உனக்கென உள்ளது ஒருலகம் – அதை உருவாக்குவதே உன் கடமை தனக்கெனத் தடைகள் வந்தாலும் -மனம் தளராதிருப்பதே தனிப்பெருமை மனக்கதவுகளைத் திறந்துவிடும் -புது மலர்ச்சியை உள்ளம் உணர்ந்துவிடும் தினம் தினம் முயற்சி தொடர்ந்துவிடும் -உன் திசைகள் அனைத்தும் திறந்துவிடும்! வெற்றிக்கு வியர்வை விலையாகும் -உன் வழியினில் புகழும் நிலையாகும் கற்றதை நிகழ்த்துதல் கலையாகும் -அது கைவரப் பெற்றால் நலமாகும்! திட்டம் வகுப்பது பழகிவிட்டால் -அது திறமை செயலால் வளர்ந்துவிட்டால் எட்ட முடியும் எண்ணியதை-நீ எளிதில் தொடுவாய் சிகரங்களை ...
ஒரு கனவின் கதை
நானொரு கனவில் திளைத்திருந்தேன் – அது நாளும் வருமென்று நினைத்திருந்தேன் தேனொரு கையில் இருக்கிறது -அதில் தேவ மூலிகை மணக்கிறது தானாய் ஒருதுளி பருகிவிட்டால் – பின்னர் தேவரும் மூவரும் வரந்தருவார் ஆனால் கைதான் அசையவில்லை – இதன் அர்த்தம் நெடுநாள் புரியவில்லை நீண்ட காலம் யோசித்தேன் – பல நூல்களைத் தேடி வாசித்தேன் மீண்டும் கனவு வரவுமில்லை -அதன் மூல ரகசியம் புரியவில்லை தூண்டும் தேடல் துரத்தியால் -எனைத் துளைத்துத் துளைத்து சிந்தித்தேன் ஆண்டுகள் கொஞ்சம் ...
மலர்ப்பாதை
பாதைகள் இல்லாப் பாறைகள் வழியே பாய்ந்து வருகிற நதியொன்று! மோதி நடந்து தரையில் விழுந்து மெல்ல வகுக்கும் வழியொன்று! “ஆதரவில்லை எனக்”கெனும் சொல்லை அழித்து நடக்கும் பேராறு! ஏதுமில்லாமல் தொடங்கி ஜெயித்தால் எழுதுமுன் பெயரை வரலாறு! உள்ளுக்குள்ளே உரமாய் இருந்தால் உலகம் உன்னை உணர்ந்துவிடும் தள்ளிய பிறகும் துடிப்பாய் எழுந்தால் தீரன் நீயெனத் தெரிந்துவிடும் வெள்ளம் போல சுவடுகள் கரைந்துவிடும் முள்ளில் நடந்த கால்களுக்காக மலர்கள் ஒருநாள் பாதையிடும் வீசும் புயல்கள் வருவதை எண்ணி விதைகள் பயந்தால் ...