Blog

/Blog
ஆய்வுரைத் திலகம் முனைவர் அ.அறிவொளி

ஆய்வுரைத் திலகம் முனைவர் அ.அறிவொளி

ஆய்வுரைத்திலகம் என்றும் இலக்கியப் பேரொளி என்றும் போற்றப்பட்ட அறிவொளி அவர்கள் காலமானார். தமிழ் இலக்கிய உலகில் மேடைத்தமிழின் மறுமலர்ச்சிக்காலம் என ஒன்று இருந்தது. கி.வா.ஜகந்நாதன், திருச்சி பேராசிரியர் முனைவர் ராதாகிருஷ்ணன் போன்றவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட அந்த மறுமலர்ச்சிக்காலத்தில் தளகர்த்தர்களில் ஒருவர். பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணிபுரிய முற்பட்டும் அவருடைய இயல்புகள் அவரை நீண்ட காலம் பணிபுரிய விடவில்லை. வாழ்க்கையை ஒரு பரிசோதனைக்கூடமாக்கிக்கொண்டு, விதவிதமான சோதனைகளை அவர் நிகழ்த்தி வந்தார். மாட்டுப்பண்ணை வைப்பது, கீரைத் தோட்டம் போடுவது, கீரை ...

மரபின்மைந்தன் பதில்கள்

பலரும் தங்களின் தனிப்பட்ட குறிப்புகள் இணையத்தால் பறிபோகிறதென்றும் அனைவரின் அந்தரங்கத்திற்கும் ஆபத்தென்றும் சொல்லி வருகிறார்கள். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கே.லோகநாதன், கோவை. ஒரு மனிதர் தன் அந்தரங்கம் என எதனை நினைக்கிறார் என்பதே கேள்விக்குரியது. இணையத்தில் நீங்கள் நுழைந்த நொடியிலிருந்தே உங்கள் நடவடிக்கைகள் பதிவாகின்றன. உங்களைப் பற்றிய அடிப்படைத் தரவுகள் அளிக்கப்படுகின்றன. இணையம் என்ற ஒன்று தோன்றும் முன்னரே உங்களைப் பற்றிய தரவுகளைப் பதியத் தான் செய்கிறீர்கள். நீங்கள் பிறந்து மூன்றாண்டுகளுக்குப் பிறகு பள்ளியில் ...

வாழ்க்கை மனதின் எல்லை!

ஒருவர் வரைந்தால் கோடு ஒருவர் வரைந்தால் கோலம்; ஒருவர் குரலோ பாடல் ஒருவர் குரலோ புலம்பல்; ஒருவர் தலைமை தாங்க ஒருவர் உழைத்தே ஏங்க; வரைவது விதியா? இல்லை வாழ்க்கை மனதின் எல்லை! எண்ணம் கூனிக் கிடந்தால் எதற்கும் அச்சம் தோன்றும்; மண்ணைப் பார்த்தே நடந்தால் மனதில் சோர்வும் வாழும்; கண்கள் மலர்த்தி உலகைக் கண்டால் மாற்றம் தோன்றும்; விண்ணைப் பார்க்கும் மலர்கள் வெளிச்சம் குடித்தே ஒளிரும்! தன்னை மதிப்பவர் தமக்கே துணையாய் நிற்கும் உலகம்; பொன்னை ...

இருவேறு-எழுத்துலக இயற்கை

சமீபத்தில் நூல் வெளியீட்டு விழா ஒன்றில் வித்தியாசமான அனுபவம் ஒன்று நேர்ந்தது. விழாவில் பேசிய ஒருவர் “இப்போதெல்லாம் புத்தகங்களே விற்பதில்லை. வாசகர்கள் குறைந்து விட்டார்கள். இந்தச் சூழலில் புத்தகம் வெளியிடுவதே பெரிய விஷயம். இதில் எழுத்தாளர்களுக்கு ராயல்டி தருவதெல்லாம் சாத்தியமேயில்லை” என்று பேசினார். இன்னொருவர், “அப்படியெல்லாம் இல்லை. இன்று வாசகர்கள் தேடித் தேடிப் படிக்கிறார்கள். வாசிப்பு குறைந்து விட்டது என் ...

சர்ச்சைச் சிலந்தி படரும் எழுத்துலக மாளிகைகள்

தமிழில் மட்டும் என்றில்லை. பொதுவாகவே இது குறுஞ்செய்திகளின் காலம். சின்னச் சின்ன தீக்குச்சிகள் உரசி அதன் வழியே பற்றிப் பரவும் நெருப்பில் குளிர்காய உலகம் தயாராக இருக்கிறது. காத்திரமான எழுத்துகளை எழுதுபவர்கள் இதுபோன்ற உரசல்களை உற்பத்தி செய்பவர்களாகவும் இருப்பதுதான் சோகம். ஏனெனில் அவர்களின் உரமிக்க எழுத்துகளை வாசிப்பவர்கள் எண்ணிக்கையை விட இத்தகைய சர்ச்சைகள் வழி அவர்களை அறிந்து வைத்திருப்பவர்களே அதிகம். இந்த சர்ச்சையின் நூல்பிடித்தபடி அதனை எழுப்பியவரின் எழுத்துலகுக்குள் வந்து சேர்பவர்களும் உண்டென்று வாதிடலாம். அந்த எண்ணிக்கை ...

நற்றுணையாவது நமச்சிவாயவே!-10

ஈரோட்டில் நடந்த சம்பவத்தைச் சொல்கிறேன். ஒரு இலக்கிய ரசிகர் அவர். பெண் பேச்சாளர்கள் வந்தால் தட்டிக்கொடுத்து பாராட்டுவார். நல்ல முரடர். நாகப்பட்டிணத்திலிருந்து சென்ற ஓர் அம்மாள் அவரை ஓங்கி அறைந்தார். அவரை கிண்டலாக திருமேனி தீண்டுவார் என்று முன்பெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். இப்போது அப்பாலும் அடி சார்ந்தார் ஆகிவிட்டார். சிவத்தொண்டு மட்டுமில்லை. சமூகத் தீமைகளை எதிர்த்தாலும் கூட தொண்டர்களுடைய வீரம் நமக்கு வர வேண்டும் என்று சொல்கிறேன். அப்போது நாவுக்கரசர் சொல்லுகிறார். நான் அடியவன்தான் சிவனை வணங்குபவன்தான். ஆனால் ...
More...More...More...More...