Blog

/Blog

அன்புள்ள ஆசிரியர்களே! -5

ஆசிரியர் – மாணவர் இடையிலான உறவில் ஏற்படும் இடர்ப்பாடுகளுக்கு எவ்வளவே காரணங்கள். அவற்றில் ஒன்று அறிதல் நிலையிலான இடைவெளி. அதாவது, ஆசிரியரின் அறிதல் நிலைக்கும், மாணவனின் அறிதல் நிலைக்கும் நடவில் மலைக்கும் மடுவுக்கும் நடுவிலான இடைவெளி இருக்கும். ஓர் ஆசிரியரின் தகுதி – அனுபவம் – அறிவு ஆகிய அம்சங்களை எடுத்த எடுப்பில் மாணவனால் எடைபோட முடியாது. தனக்கு வகுப்பு பிடித்திருக்கிறது – பிடிக்கவில்லை, ஆசிரியரைப் பிடித்திருக்கிறது – பிடிக்கவில்லை என்ற உடனடி உணர்வுகளை எந்தத் திரையும் இல்லாமல் மாணவன் நேரே பிரதிபலிப்பான். ...

அன்புள்ள ஆசிரியர்களே! -4

சமீபத்தில் இளம் ஆசிரியர் ஒருவரை சந்தித்தேன். அவர் ஓர் ஆசிரியராக இருப்பதன் பலங்களை உணர்ந்திருக்கிறார். ஆனாலும் அவருக்கொரு சந்தேகம். “சார்! எங்களுக்கு பிள்ளை குட்டி குடும்பம் எல்லாம் உண்டே, அதற்கு நேரம் ஒதுக்க வேண்டாமா?” என்றார். உண்மைதான். சாதாரண மனிதர்களில் இருந்து சாதனையாளர்கள் வரை எல்லோருக்கும் குடும்பம் உண்டு. ஆனால் தங்கள் பங்களிப்பு குடும்பம் என்னும் எல்லையையும் கடந்தது என்பதை உணர்ந்தவர்கள்தான் அவரவர் துறைகளில் வெற்றிமுத்திரை பதிக்கிறார்கள். வகுப்புக்கு தயார்செய்வது, படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்காக பிரத்யேக வகுப்புகளுக்கு ...

அன்புள்ள ஆசிரியர்களே!-3

புகழ்பூத்த வெற்றியாளர்கள் பலர் தங்கள் ஆசிரியர்களை எப்படியெல்லாம் கொண்டாடினார்கள் என்பதைக் கடந்த அத்தியாயத்தில் சிந்தித்தோம். வெற்றியின் ரேகையே விழாத வறுமைப் பிரதேசத்தில் வாழ்ந்தவர்களின் வாழ்விலும் ஆசிரியர்கள் வெற்றிப் பூக்களை மலர்த்தியமை குறித்து விரிவான சான்றுகள் எத்தனையோ உள்ளன. மேன்மையான நிகழ்வுகள் மேலைநாடுகளில் அவ்வப்போது ஆவணப்படுத்தப்பட்டு விடுவதால் அங்கே நடக்கும் சின்னச் சின்ன சம்பவங்கள்கூட சரித்திரங்களாகிவிடுகின்றன. நம்மவர்களோ வதந்திக்குத் தரும் முக்கியத்துவத்தை வாழ்க்கைக்குத் தருவதில்லை. பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள்மேல் தாக்கத்தை ஏற்படுத்திய ஆசிரியர்கள் பற்றி அவரவர் அனுபவங்களை ...

அன்புள்ள ஆசிரியர்களே!-2

ஓர் ஆசிரியருக்கான தகுதிகளில் கல்வித்தகுதிக்கு நிகரான இன்னொரு தகுதி இருக்கிறது. அதுதான் கனிவுத் தகுதி. ஒரு மரத்தில் கனிந்த கனிகளைத் தேடித்தான் பறவைகள் வரும். ஒரு பள்ளியில் கனிந்த மனங்களைத் தேடித்தான் மாணவர்களின் கூட்டமும் வரும். பள்ளிப் பருவத்தில் தங்கள் ஆசிரியர்களை நினைவுகூர்ந்து பேசும் அத்தனை பிரபலங்களும் ஆசிரியர்களின் அன்பை முதலில் ஆராதித்துச் சொல்கின்றனர். அறிவுத் திறன் பற்றி அடுத்ததாகப் பேசுகின்றனர். ஒரு மனிதனின் கனவு நனவாவது எப்போது என்பது பற்றி டேன் ரேதர் எனும் அமெரிக்காவின் ...

அன்புள்ள ஆசிரியர்களே!-1

இது கடிதமல்ல. சாட்சி சொல்ல வருகிற சாசனம். காருண்யமும் கம்பீரமும் மிக்கவொரு வாழ்க்கை முறையின் வரலாற்றுப் பெருமைகளை உணர்ந்து பேசும் உரைச்சித்திரம். சின்னஞ்சிறு விதை விருட்சமாவது தாவரவியலின் மர்மம். சின்னஞ்சிறு மூளை சாதனைச் சோலையாய் வளர்வது மானிடவியலின் தர்மம் அந்த அற்புதத்தை காலங்காலமாய் நிகழ்த்துபவர்கள் ஆசிரியர்கள். ஐ.ஏ.எஸ். படித்த அதிகாரியின் மகன்கூட, அப்பாவைக் கேட்கும் கேள்வி, “எங்க டீச்சரை விட ஒனக்கு விஷயம் தெரியுமா?” என்பதுதான். வாழ்வில் வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் ஓர் ஆசிரியரோ ஆசிரியையோ உந்து ...

முன்முடிவுகள் தவறும் சுகம்

பள்ளி, கல்லூரி ஆண்டுவிழாக்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வதில் ஒரு சவுகரியம், குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளை முன்வரிசையில் அமர்ந்து காணக்கிடைக்கும். தொடக்கத்தில் மழலையர் நடனம் நடக்கும். சில பள்ளிகளில் மழலையரைப் பயிற்றுவித்த ஆசிரியை, மேடையின் முன்புறம் ஒதுங்கிநின்று குழந்தைகள் கண்களில் படும்விதமாய் தனியே ஆடிக்கொண்டிருப்பார். இப்படியரு நிகழ்வில் நடந்த சுவாரசியமான சம்பவம் குறித்து முன்னர் எழுதியுள்ளேன். முன்வரிசையில் அமர்ந்து பார்க்கையில், அறிவிப்பு வரும்வரை குழு நடனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் குழந்தைகளையும் அவர்களின் பல்வேறு முக பாவங்களையும் காண ...
More...More...More...More...