Blog

/Blog

அந்த நாளும் வந்திடாதோ! -பட்டிமண்டபங்களின் காலம்

பொழுதுபோக்குக் கலைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் தரக்கூடிய சமூகம், அறிவில் தன்னிறைவு பெற்ற சமூகமாகத்தான் இருக்கும் என்றார் ஒருவர். இல்லை என்றேன் நான். அறிவில் தன்னிறைவு என்பது கோடைக்காலத்தின் தாக நிறைவு போன்றது. மேலும் மேலும் தண்ணீருக்குத் தவிப்பது கோடையின் இயல்பு. மேலும் மேலும் அறிவு வேட்கை பெறுவதே அறிவினர் இயல்பு. அத்தகைய தேடலுக்கும் தவிப்புக்கும் ஈடு கொடுக்கும் விதமாக இலக்கிய மேடைகள் இருந்ததொரு காலம். தெளிந்த சிந்தனைகளும் கூரிய விவாதங்களும் மதி நுட்பம் ஒளிரும் உடனடி சொல்வீச்சுகளும் ...

சமய வலிமையும் சமூக ஒருமையும்

சமீபத்தில் கவிஞர் சுகுமாரன், தடம் இதழில் அளித்திருந்த ஒரு பேட்டியில், கேரளத்தினுடைய வலிமை வாய்ந்த இயக்கங்கள் என்று நாராயண குரு அவர்களின் இயக்கத்தையும், கம்யூனிச இயக்கத்தையும் சுட்டிக் காட்டியிருந்தார். ஆன்மீகம் சமூகக் கண்ணோட்டம் இரண்டும் இணைந்த ஒரு மரபார்ந்த பார்வை என்பது நம்முடைய தமிழ்ச்சூழலில் காலங்காலமாகவே உண்டு. இறைவனுடைய தொண்டுக்கு மட்டுமல்லாமல், சமூகத்தினுடைய தொண்டுக்கும் இறைவனது பெயரால் சமூகத்திற்கு தொண்டு செய்யக்கூடியவர்களை, திருத்தொண்டர்கள் என்று போற்றி அவர்களுடைய வரலாறுகளை எல்லாம் அறிந்துகொண்டிருக்கிறோம். அதிலே ஒரு சார்பு இருந்திருக்கலாம். ...

வலியிலாக் கடவுள்

  பொய்யில்லாச் சிரிப்புடன் கையுயர்த்தும் செவிலியின் ஆதுரப் பார்வையில் ஆயிரம் மருந்துகள் வருகைப் பதிவேட்டில் வளைக்கரம் உரச புன்னகை எழுதிப் போகிறாள் செவிலி மருந்தின் அணைப்பில் உறங்கும் சிறுவனின் அணைப்பில் கிடக்கும் கரடிப் பொம்மையை சேர்த்து வருடும் செவிலியின் விரல்களை இறுகப் பற்றி எழுந்தது சூரியன். அசூயை பொறுக்கும் அருங்கலை பயிலவே தானாய் காயம் தருவித்துக் கொண்டு மருத்துவமனையில் செவிலிக்காக வந்து சேர்கிறார் வலியிலாக் கடவுள்   ...

ஒரு கனவின் கதை

நானொரு கனவில் திளைத்திருந்தேன் – அது நாளும் வருமென்று நினைத்திருந்தேன் தேனொரு கையில் இருக்கிறது – அதில் தேவ மூலிகை மணக்கிறது தானாய் ஒருதுளி பருகிவிட்டால் – பின்னர் தேவரும் மூவரும் வரந்தருவார் ஆனால் கைதான் அசையவில்லை – இதன் அர்த்தம் நெடுநாள் புரியவில்லை நீண்ட காலம் யோசித்தேன் – பல நூல்களைத் தேடி வாசித்தேன் மீண்டும் கனவு வரவுமில்லை-அதன் மூல ரகசியம் புரியவில்லை தூண்டும் தேடல் துரத்தியதால் – எனைத் துளைத்துத் துளைத்து சிந்தித்தேன் ஆண்டுகள் கொஞ்சம் ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!-23

வாழ்க்கை விளையாட்டு! எத்தனையோ விளையாட்டுகள் இருந்தாலும் மனிதனைப் பைத்தியமாய் அலையவிடும் ஆளுமை கிரிக்கெட் விளையாட்டுக்கு உண்டு. நம் தேசத்திற்கென்று சில பாரம்பரிய விளையாட்டுகள் உண்டு. அவையெல்லாம் வெறும் விளையாட்டுகள் அல்ல. வாழ்க்கை என்றால் என்னவென்று புத்தி சொல்கிற உத்திகள். அந்த விளையாட்டுகளின் கதையைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். இப்போது, உலக அளவில் “இன்&டோர் – கேம்ஸ்” பிரபலமாகியுள்ளன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அத்தகைய விளையாட்டுகளில் இந்தியாவுக்கென்று தனி முத்திரை உண்டு. அதிலும் பரமபதம் என்றொரு விளையாட்டு. பாம்புகளும் ஏணிகளும் ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!-22

வீட்டுக்கு வீடு வார்த்தைப்படி “ஆதியில் வார்த்தைகள் இருந்தன. வார்த்தைகள் தேவனோடு இருந்தன. வார்த்தைகள் தேவனாகவே இருந்தன” என்கிறது விவிலியம். வார்த்தைகள் நாம் வெறும் கருத்து வாகனமென்று கணித்து விடக்கூடாது. நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் நம் வாழ்வின்மேல் சில தாக்கங்களை ஏற்படுத்தவல்லவை. சில கடைகளில் சென்று, “அரிசி இருக்கிறதா” என்று கேட்டால், “பருப்பு இருக்கிறது” என்று பதில் சொல்வார்கள். இது சம்பந்தமில்லாத பதிலல்ல. இயன்ற வரை ‘இல்லை’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை என்கிற உணர்வின் வெளிப்பாடே அது. ...
More...More...More...More...