Blog

/Blog

அன்புள்ள ஆசிரியர்களே!-2

ஓர் ஆசிரியருக்கான தகுதிகளில் கல்வித்தகுதிக்கு நிகரான இன்னொரு தகுதி இருக்கிறது. அதுதான் கனிவுத் தகுதி. ஒரு மரத்தில் கனிந்த கனிகளைத் தேடித்தான் பறவைகள் வரும். ஒரு பள்ளியில் கனிந்த மனங்களைத் தேடித்தான் மாணவர்களின் கூட்டமும் வரும். பள்ளிப் பருவத்தில் தங்கள் ஆசிரியர்களை நினைவுகூர்ந்து பேசும் அத்தனை பிரபலங்களும் ஆசிரியர்களின் அன்பை முதலில் ஆராதித்துச் சொல்கின்றனர். அறிவுத் திறன் பற்றி அடுத்ததாகப் பேசுகின்றனர். ஒரு மனிதனின் கனவு நனவாவது எப்போது என்பது பற்றி டேன் ரேதர் எனும் அமெரிக்காவின் ...

அன்புள்ள ஆசிரியர்களே!-1

இது கடிதமல்ல. சாட்சி சொல்ல வருகிற சாசனம். காருண்யமும் கம்பீரமும் மிக்கவொரு வாழ்க்கை முறையின் வரலாற்றுப் பெருமைகளை உணர்ந்து பேசும் உரைச்சித்திரம். சின்னஞ்சிறு விதை விருட்சமாவது தாவரவியலின் மர்மம். சின்னஞ்சிறு மூளை சாதனைச் சோலையாய் வளர்வது மானிடவியலின் தர்மம் அந்த அற்புதத்தை காலங்காலமாய் நிகழ்த்துபவர்கள் ஆசிரியர்கள். ஐ.ஏ.எஸ். படித்த அதிகாரியின் மகன்கூட, அப்பாவைக் கேட்கும் கேள்வி, “எங்க டீச்சரை விட ஒனக்கு விஷயம் தெரியுமா?” என்பதுதான். வாழ்வில் வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் ஓர் ஆசிரியரோ ஆசிரியையோ உந்து ...

முன்முடிவுகள் தவறும் சுகம்

பள்ளி, கல்லூரி ஆண்டுவிழாக்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வதில் ஒரு சவுகரியம், குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளை முன்வரிசையில் அமர்ந்து காணக்கிடைக்கும். தொடக்கத்தில் மழலையர் நடனம் நடக்கும். சில பள்ளிகளில் மழலையரைப் பயிற்றுவித்த ஆசிரியை, மேடையின் முன்புறம் ஒதுங்கிநின்று குழந்தைகள் கண்களில் படும்விதமாய் தனியே ஆடிக்கொண்டிருப்பார். இப்படியரு நிகழ்வில் நடந்த சுவாரசியமான சம்பவம் குறித்து முன்னர் எழுதியுள்ளேன். முன்வரிசையில் அமர்ந்து பார்க்கையில், அறிவிப்பு வரும்வரை குழு நடனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் குழந்தைகளையும் அவர்களின் பல்வேறு முக பாவங்களையும் காண ...

அந்த நாளும் வந்திடாதோ! -பட்டிமண்டபங்களின் காலம்

பொழுதுபோக்குக் கலைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் தரக்கூடிய சமூகம், அறிவில் தன்னிறைவு பெற்ற சமூகமாகத்தான் இருக்கும் என்றார் ஒருவர். இல்லை என்றேன் நான். அறிவில் தன்னிறைவு என்பது கோடைக்காலத்தின் தாக நிறைவு போன்றது. மேலும் மேலும் தண்ணீருக்குத் தவிப்பது கோடையின் இயல்பு. மேலும் மேலும் அறிவு வேட்கை பெறுவதே அறிவினர் இயல்பு. அத்தகைய தேடலுக்கும் தவிப்புக்கும் ஈடு கொடுக்கும் விதமாக இலக்கிய மேடைகள் இருந்ததொரு காலம். தெளிந்த சிந்தனைகளும் கூரிய விவாதங்களும் மதி நுட்பம் ஒளிரும் உடனடி சொல்வீச்சுகளும் ...

சமய வலிமையும் சமூக ஒருமையும்

சமீபத்தில் கவிஞர் சுகுமாரன், தடம் இதழில் அளித்திருந்த ஒரு பேட்டியில், கேரளத்தினுடைய வலிமை வாய்ந்த இயக்கங்கள் என்று நாராயண குரு அவர்களின் இயக்கத்தையும், கம்யூனிச இயக்கத்தையும் சுட்டிக் காட்டியிருந்தார். ஆன்மீகம் சமூகக் கண்ணோட்டம் இரண்டும் இணைந்த ஒரு மரபார்ந்த பார்வை என்பது நம்முடைய தமிழ்ச்சூழலில் காலங்காலமாகவே உண்டு. இறைவனுடைய தொண்டுக்கு மட்டுமல்லாமல், சமூகத்தினுடைய தொண்டுக்கும் இறைவனது பெயரால் சமூகத்திற்கு தொண்டு செய்யக்கூடியவர்களை, திருத்தொண்டர்கள் என்று போற்றி அவர்களுடைய வரலாறுகளை எல்லாம் அறிந்துகொண்டிருக்கிறோம். அதிலே ஒரு சார்பு இருந்திருக்கலாம். ...

வலியிலாக் கடவுள்

  பொய்யில்லாச் சிரிப்புடன் கையுயர்த்தும் செவிலியின் ஆதுரப் பார்வையில் ஆயிரம் மருந்துகள் வருகைப் பதிவேட்டில் வளைக்கரம் உரச புன்னகை எழுதிப் போகிறாள் செவிலி மருந்தின் அணைப்பில் உறங்கும் சிறுவனின் அணைப்பில் கிடக்கும் கரடிப் பொம்மையை சேர்த்து வருடும் செவிலியின் விரல்களை இறுகப் பற்றி எழுந்தது சூரியன். அசூயை பொறுக்கும் அருங்கலை பயிலவே தானாய் காயம் தருவித்துக் கொண்டு மருத்துவமனையில் செவிலிக்காக வந்து சேர்கிறார் வலியிலாக் கடவுள்   ...
More...More...More...More...