Blog

/Blog

விளையாட்டுக்காரி

காலமெனும் சோழிகளை கைகளிலே குலுக்குகிற காளியவள் விட்டெறியும் தாயம் நீலநிறப் பேரழகி நீட்டோலைக் குறிப்பலவோ நீயும்நானும் ஆடுகிற மாயம் கோடுகளைப் போட்டுவிட்டு கபடியாட விட்டுவிட்டு காலைவாரிக் கைகள்கொட்டு வாளே ஓடவிட்டு வாடவிட்டு ஓலமிட்டு நாமழுதால் ஓடிவந்து மண்ணைத்தட்டு வாளே குழிநிரப்பி குழிவழித்து குதூகலமாய் கலகலத்து காளிஆடும் பல்லாங்குழி ஆட்டம் அழிப்பதுவும் ஆக்குவதும் அவள்புரியும் ஜாலமன்றோ ஆதிமுதல் ஆடுபுலி ஆட்டம் பாண்டியாட சொல்லித்தந்து பாய்ந்து போக எத்தனித்தால் பாதமொன்று தூக்கச்சொல்லு வாளே தாண்டிப்போக வழியில்லாமல் தட்டழியும் வேளையிலே தாவிப்போக ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!-9

“உள்ளுணர்வின் குரல்” . இந்தக் குரல் எந்த மூலையிலிருந்து எழும்? இந்தக் கேள்விக்குப் பதில், “மூளை”யிலிருந்து எழும் என்பதுதான். மனித மூளை இடது வலதாக தனித்தனியே செயல்படுகிறது. இடதுசாரி, வலதுசாரி இரண்டின் ஆதரவும் இருந்தால்தான் மனிதனின் “மேல் சபையில்” நிலையான ஆட்சி நடக்கும். இடதுமூளை தர்க்கரீதியான விஷயங்கள் தொடங்கி, பிசிறில்லாமல் ஒரு கடிதத்தை அழகான ஆங்கிலத்தில் “டிக்டேட்” செய்வதெல்லாம் இடதுபக்க மூளையின் இலாகா. ஆனால் வலது மூளை வித்தியாசமானது. உள்ளுணர்வு “பளிச்”சிடும் சமயோசிதம். புதுமையான கண்ணோட்டங்கள், கவிதை, இசை, ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

8. தாண்டி வாருங்கள் தாழ்வு மனப்பான்மையை! உங்களைப் பற்றிய அவநம்பிக்கை உங்களுக்குள்ளேயே தலைதூக்குமென்றால், அதற்குப் பெயர் தாழ்வு மனப்பான்மை. வாழ்வின் ஆரம்பப் பொழுதுகளில் வரும் தாழ்வு மனப் பான்மையை, அடுத்தடுத்து வருகிற வெற்றிகள் சரி செய்துவிடும். ஆனால், வளர்ந்து கொண்டே வருகிறபோது, சில தோல்விகள் காரணமாக வரும் அவநம்பிக்கையும், அந்த அவநம்பிக்கை மெல்ல உருவாக்கும் தாழ்வு மனப்பான்மையையும் கவனமாகக் கையாள்வது அவசியம். இந்த இரண்டாவது வகை தாழ்வு மனப்பான்மைக்கு மருந்து, உங்களை நீங்களே மதிப்பது. சுய மதிப்பு ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

7.நினைவாற்றலை நம்பாதீர்கள்! நினைவாற்றல் நிறைய உள்ளவரா நீங்கள்? அப்படியானால் உங்கள் நினைவாற்றலை நம்பாதீர்கள். படித்த விஷயங்கள், அபூர்வமான சம்பவங்கள், பழகிய முகங்கள், எப்போதோ போன இடங்கள், இவற்றையெல்லாம் நினைவு வைத்துக்கொள்ள நினைவாற்றல் அவசியம்தான். ஆனால், அவ்வவ்போது தோன்றும் யோசனைகள், அன்றாட வேலைகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவற்றை, நினைவில் வைத்திருந்து, பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றுவிட்டால் எப்படியோ மறந்துவிடும். நினைவாற்றல் என்பது நிலைக்காத கூட்டணி மாதிரி. எதிர்பாராத நேரத்தில் காலை வாரிவிடும். எனவே முழுக்க முழுக்க நினைவாற்றலை மட்டும் ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

6. 24 மணி நேரம் போதவில்லையா? இதோ… இன்னொரு மணிநேரம்! “எத்தனை வேலைதான் பார்க்கிறது-? இருபத்துநாலு மணிநேரம் போதலை” என்று அலுத்துக்கொள்பவரா நீங்கள்-? உங்களுக்குத் தேவைப்படும் இன்னொரு மணி நேரம், உங்கள் இருபத்துநாலு மணிநேரத்துக்குள்ளேயே ஒளிந்து இருக்கிறது. அதைக் கண்டுபிடித்துப் பயன்படுத்த, இதோ… சில எளிய வழிகள்: சற்றுமுன்னதாகக் கண்விழியுங்கள்: நீங்கள் வழக்கமாக எழுவதைவிடவும் கொஞ்சம் முன்னதாகக் கண்விழியுங்கள். ஆறுமணிக்கு எழுபவர் என்றால் ஐந்தரை மணிக்கு எழுந்து பழகுங்கள். நேரம் விரயமாவதைத் தவிர்த்திடுங்கள்: எப்படியெல்லாம் நேரம் வீணாகிறது ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

5.தோல்வி சகஜம்… வெற்றி-? தோல்வி சகஜமென்றால் வெற்றி, அதைவிட சகஜம்! இதுதான் வெற்றியாளர்களின் வரலாறு. இந்த மனப்பான்மை வளருமேயானால் தோல்வி பற்றிய அச்சம் துளிர்விடாது. இதற்கு நடைமுறையில் என்ன வழி? இதைத்தான் உங்களுடன் விவாதிக்கப்போகிறேன். உலகில் பெரும்பாலானவர்கள் செயல்படாமல் இருக்கக் காரணம், தகுதியின்மை அல்ல. தோல்வி அடைவோமோ என்கிற அச்சம்தான். தோல்வி பற்றிய அச்சம் நமக்குக் கூடாதென்றால், முதலில் தோல்விக்கும் வெற்றிக்கும் இருக்கிற சம்பந்தத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். நாம் எதைச் செய்தாலும் அதற்கு இரண்டே வழிகள்தான். ஒன்று ...
More...More...More...More...