Blog

/Blog

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!-21

இது மகாபாரத காலமாம்… இதென்ன கலாட்டா! “ஒரு யோகியின் சுயசரிதை” என்ற நூலை நீங்க படித்திருக்கக் கூடும். அதனை எழுதியவர் ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தர். அவருக்கு குருநாதர், ஸ்ரீ யுக்தேஸ்வர்கிரி. அவர் 1894ல் “புனித விஞ்ஞானம்” என்கிற தலைப்பில் ஆய்வுநூல் ஒன்றை எழுதினார். அதன் அடிப்படையில், “இப்போது நாம் இருப்பது துவாபரயுகம்” என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லைஃப் பாஸிடிவ் எனும் காலாண்டிதழில் (ஜூலை-செப்டம்பர் 2002) மெகோலா மஜீம்தார் என்பவர் இந்தக் கருத்தை மையப்படுத்தி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதி ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!-20

சிரிக்கச் சிரிக்க வாழ்க்கை சிறக்கும் நாற்பதாண்டுகளுக்கு முன்னர், சிதம்பரம் பகுதியில் “ஹேப்பி நாராயணன்” என்றொருவர் இருந்தார். திருமண வீடுகளுக்கு அவரைப் பணம் கொடுத்து அழைப்பதுண்டு. அவர் சமையல் கலைஞரா? நாதசுவரக் கலைஞரா? இல்லை. சிரிப்புக் கலைஞர். கையில் கவுளி வெற்றிலை யோடு கல்யாண மண்டபத்துக்குள் நுழைவார் மனிதர். பத்துப் பதினைந்து பேராக உட்கார்ந்திருக்கும் இடத்தில் போய் மத்தியில் அமர்ந்து கொள்வார். வெற்றிலை போட்டுக் கொண்டே சிரிப்பார். மெதுவாக ஆரம்பித்து “கட கட”வென்று சிரிக்கத் தொடங்குவார். அருவிபோல், அலைபோல், ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!-19

என்ன பெயர் வைக்கலாம்? குழந்தை பிறக்கவில்லை என்று கோவில் கோவிலாக ஏறி இறங்குபவர்கள், குழந்தை பிறந்தவுடன் “என்ன பெயர் வைக்கலாம்” என்று ஒவ்வொரு ஜோதிடர் வீடாக ஏறி இறங்குகிறார்கள். நட்சத்திரத்தின்படி, நியூமராலஜியின்படி, நேமாலஜியின்படி என்று எல்லாம் பார்ப்பதால்தான் படிப்படியாக ஏறி இறங்க வேண்டி வருகிறது. சிலர் வம்பே வேண்டாம் என்று குலதெய்வத்தின் பெயரையோ, பெற்றோர் பெயரையோ வைக்க முடிவெடுத்து விடுகிறார்கள். அதிலேயும் சில குடும்பங்களில் சிக்கல் வருவதுண்டு. மாமனார், மாமியாருடன் மனத்தாங்கல் உள்ள மருமகனோ, மருமகளோ குழந்தைக்கு ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!-18

காலம் ஒரு காமிரா “ஸ்மைல் ப்ளீஸ்” “வாழ்க்கையும் புகைப்படக் கலையும் ஒன்றுதான்” என்று யாரோ, எங்கோ சொன்னார்கள். என்ன காரணமாம்? புகைப்படத்தில் முதலில் கிடைப்பது நெகடிவ். அதையே டெவலப் செய்கிறார்கள். எதிர்மறையான விஷயங்களை நமக்குச் சாதகமாக “டெவலப்” செய்து கொள்வதில்தான் வெற்றி இருக்கிறது. எனவே புகைப்படக்கலை வாழ்க்கை இரண்டும் ஒன்றுதானாம். யோசித்துப் பார்த்தால் புகைப்படக்கலைக்கும் வாழ்க்கைக்கும் இன்னும் பல பொருத்தங்கள் இருக்கத்தான் செய்கின்றன. புகைப்படம் சரியாக அமைவதற்கு காமிராவின் கோணம் மிக முக்கியம். எந்தக் கோணத்தில் காமிரா ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!-17

நீங்களும்தான் வசீகரிக்கிறீர்கள்! மற்றவர்களை வசீகரிப்பவர்கள்தான் மக்கள் தலைவர்களாக உயர முடியும் என்பது பொதுவான கருத்து. உண்மையில், ஒவ்வொருவரிடமும் வசீகரிக்கிற ஆற்றல் இருக்கத்தான் செய்கிறது. ஒரு சராசரி மனிதர்கூட குறைந்தது நான்கு பேரையாவது வசீகரித்திருப்பார். வசீகரம் என்பது மாயமோ மன வசியமோ அல்ல. இன்னொரு மனிதர்பால் உங்களுக்கிருக்கும் நல்லெண்ணம். ஒரு மனிதரின் நலனை நீங்கள் விரும்பினால் அந்த மனிதர் அவரையும் அறியாமல் உங்கள் பால் ஈர்க்கப்படுகிறார். வீடுவீடாக ஏறியிறங்கும் பல விற்பனைப் பிரதிநிதிகளிடம் வீட்டில் இருக்கும் சிலர், விரட்டியடிக்காத ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!-16

எழுச்சிப் பயணத்திற்கு எரிபொருள் உள்ளதா? இரு சக்கர வாகனம் ஒன்றுக்கான சமீபத்திய விளம்பரம் ஒன்று. பெட்ரோல் பங்கில் வந்து வாகனத்தை நிறுத்திவிட்டு, “அது குடுப்பா” என்பார். “எதை” என்பார் பெட்ரோல் பங்க்காரர். அதாவது, எரிபொருளையே மறந்துவிடும் அளவுக்கு எரிபொருள் சேமிக்க இந்த இரு சக்கர வாகனம் கை கொடுக்கிறதாம். உண்மையில், வாழ்க்கை என்கிற பயணத்தில் வேகமாகவும் தடையில்லாமலும் செல்ல எது நமக்கு எரிபொருள்? எண்ணங்கள்தான்! எண்ணங்கள் என்கிற எரிபொருளில் கலப்படம் இல்லாமல் இருந்தால்தான் இலட்சியத்தைத் தொடும் வேகத்தோடு ...
More...More...More...More...